Wednesday 25 June, 2008

கமல், தசாவதாரம், உலகத்தரம், ஹாலிவுட் தரம்

தசாவதாரத்தை பத்தி எல்லாரும் எழுதி, தான் படம் பார்த்தாச்சுன்னு பீத்திகிட்டு இருக்காங்க, சரி நாமும் பார்த்தத எழுதினாத்தான ஒரு பெருமையா இருக்கும்னு இதை எழுதுகிறேன்.

நம்பி ஏன் அழுக்கு வேஷ்டி கட்டிக்கலை, அசின் ஏன் பட்டுப் புடவை கட்டிக்கிட்டு வந்து அழுறாங்கன்னு கேக்குறவங்களுக்கு, கமல் அந்த சிலைய தூக்க அந்த பாடு படும்போது ஆகாத அழுக்கா முன்னாடி இருந்திருக்கப் போகுது,அசின் மேட்டர்ல எனக்கொரு பயங்கர சந்தேகம்: ஏங்க புருஷன கொல்லப்போறாங்கன்னு தெரிஞ்சவுடன் ஒரு பொண்டாட்டி அலறி அடிச்சிகிட்டு அப்டியேத்தான ஓடி வருவா? நாம கட்டிருக்கறது பட்டுப் புடவயாச்சே, இந்த சோகக் காட்சியில அது ஒத்துவராதுன்னு பொறுமையா கழட்டி வெச்சிட்டு பழைய புடவைய தேடி எடுத்து மாத்தி கட்டிகிட்டா வருவாங்க? இல்ல அவங்க கிட்ட பட்டு புடவையே இல்லைன்னு அந்தக் காலத்து சுவடு ஏதும் சொல்லுதா? நெறயப் பேரு நெப்போலியன நக்கல் பண்ணிருக்காங்க, ஆனா எனக்கு அவரு நல்லா நடிச்சிருக்கா மாதிரித்தான் தெரியுது. இத்தனைக்கும் அவர்கிட்ட இருந்து பிரிக்க முடியாத மதராஸ் பாஷை(இத்தனைக்கும் அவரு திருச்சிக்காரராமே) வாசனை அடிக்கலைங்களே!

அப்புறம், அமெரிக்கால ஏன் முக்கிய மீட்டிங்க்ல தமிழ்க்காரங்க எல்லாரும் தமிழ்ல பேசிக்கறாங்கனு கேக்குறாங்க, இந்த பழக்கம் தமிழ்நாட்ட விட்டு வெளிய வந்த உடனே எல்லார்கிட்டயும் ஒட்டிக்கிற விஷயம்தான். அப்படி பேசினா அந்த மீட்டிங்க்ல கோவம் வந்து புரியாதவங்க திட்டுவாங்க, இந்த படத்துலயும் அதே மாதிரி ஒருத்தர் திட்டறாரு.

அடுத்து அசினோட காட்சிகள் செமக் கடுப்பா இருந்தாலும், அதே மாதிரி நார்மலான சிலப் பேரு கூட சில சமயம் அப்படி நடந்துக்கறத பார்த்திருக்கேன். ஆனா அவங்க அப்படி சுத்தறதுக்கான காரணம்தான் நம்ப முடியல. சாமி சிலைக்காக ஒருத்தங்க இம்புட்டு ரிஸ்க் எடுப்பாங்களா?
அடுத்து நெறைய பேரு திட்டுற விஷயம், அத்தனைப் பேரு சுனாமில செத்துக் கெடக்கும்போது கமலும் அசினும் எப்படி காதல் வசனம் பேசறாங்கங்கறது. ஒரு விஷயம் எல்லாரும் கவனிச்சிருக்கீங்களா, கல்யாண வீட்ல முறுக்கிட்டு திரியறவங்கக் கூட சாவு வீட்ல ஒன்னு மண்ணா கலந்திருப்பாங்க. பொதுவா மரணம்ங்கறது மனுஷங்களுக்குள்ள இருக்கிற ஈகோவ தற்காலிகமாகவாவது தள்ளி வெச்சிடுதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. அதேப்போல நமக்குள்ள இருக்கிற தயக்கங்களை தள்ளி வெச்சிட்டு விஷயத்தை போட்டு உடைக்கறதுக்கும்(நாளைக்கென்ன நடக்குமோன்னு தெரியாத ஒருவித இனம்புரியா பயத்தை ஏற்படுத்தும்) தெகிரியத்தை கொடுக்கும். அசாதாரணமான சூழ்நிலைகள்ள ஏற்படுற தைரியம், 'இடம் பொருள் ஏவல் ஆள் பேரு ஊரு', இப்படி எதையும் பார்த்து வராதுங்க. என்னை பொறுத்த வரைக்கும் அந்த காட்சி மிக யதார்த்தமா இருக்குங்க.

புஷ்ஷையும் அமரிக்காவையும் நக்கலடிச்சிருக்கறது செம சூப்பரா இருக்குங்க. அதேப் போல பல்ராம் நாய்டு மற்றும் பாட்டி வர்ற காட்சிகளும் டாப். கொஞ்ச நாளா சினிமால நெம்ப விளக்கமான நகைச்சுவை காட்சிங்க தொடர்ந்து வந்து போரடிச்சிட்டதால இந்த படத்தில் வர்ற நகைச்சுவை ரொம்ப ரசிக்க வைக்குதுங்க.

பூவராகன் காரக்டர் பேசுற தமிழ் பத்தி இருவேறு கருத்துக்கள் சொல்றாங்க. எனக்கு அந்த விஷயத்தில் சுத்தமா ஞானம் இல்லாததால என்னோட ஒரு குறையை மட்டும் சொல்லிடுறேன். இவர் வர்ற காட்சிகள், பேசுற வசனங்கள் எல்லாரையும் ஜாஸ்தி கவனிக்க வைக்குது. இப்படிப்பட்ட இடத்துல எப்படிங்க, வாசு இவர்கிட்ட சொல்ற, மீதியையும் பார்த்துட்டு போங்கர வசனத்தோட தொடர்ச்சியை காட்சியாக்காம விட்டாங்க?

ஏன் நாகேஷையும், கே.ஆர்.விஜயாவையும் அந்த எடத்துல போட்டிருக்காங்கன்னு கேக்குறாங்க. இந்தப் படத்துல கவனிச்சீங்கன்னா, முடிஞ்சவரைக்கும் எல்லா கமலோடவும் குறைந்தபட்சம் ஒரு பிரபலமானவராவது நடிச்சிருப்பாங்க. நம்பியோட அசின், நெப்போலியன், பாடகரான சீக்கிய கமலோட ஜெயப்பிரதா,பூவராகனோட கவிஞர் கபிலன், டைரக்டர் வாசு, ஃப்ளெட்சரோட மல்லிகா ஷெராவத்,பல்ராம் நாய்டுவோட நடன இயக்குனர் ரகுராம், பாட்டியோட அசின், கலிபுல்லா கானோட நாகேஷ்,கே.ஆர்.விஜயா, புஷ் கமலோட கலைஞர், மன்மோகன் சிங்(கொஞ்சம் ஜாஸ்தியா கற்பனைய தட்டிட்டேனோ) ஹீரோ கோவிந்த் படம் முழுக்க எல்லாரோடவும் கலந்துகட்டி வர்றதாலையும், அவர்தான் ஹீரோனு சொல்லிட்டதாலையும் பிரச்சினை இல்லை. ஆனா ஜப்பான் கமல் கூடத்தான் பிரபலமான யாரும் தனிச்சு வரலை. சிட்டிபாபு, வையாபுரி,ஹேமா பாஸ்கர் இவங்கெல்லாம் தமிழ் ரசிகர்கள் அந்நியப்பட்டு போயிடக் கூடாதுன்னு சேர்த்திருப்பாருன்னு நினைக்கிறேன்(சிவாஜில சாலமன் பாப்பையா சார் பண்ற 'பழகுங்க' காமடிக்கு சிரிப்பே வரலன்னாலும்,அவரு வந்து சொன்னா அதுக் காமடி சீனா இருக்கும்னு நம்பிட்டாங்கல்ல,அது மாதிரி). இது இப்படிப்பட்ட எல்லாப் படத்துலயும் செய்யற விஷயம்தான். ஒவ்வொரு கமல் காரக்டரையும் தனிச்சி காட்ட பல வழிகள்ல இதுவும் ஒண்ணுன்னு நான் நினைக்கிறேன். ஏற்கனவே குரங்கா கூட கமலே நடிச்சிருக்கலாமேனு நக்கல் பண்றாங்கல்லைங்க, அப்படி படம் முழுக்க கமலே வியாபிச்சி ஒருவித அயர்ச்சி ஏற்படும்போது சின்ன ரிலீப் மாதிரித்தான் இவங்களை படத்துல நடிக்க வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

இதுல கமல் அவர் சாயலே இல்லாம எதுக்கு சில காரக்டர்களுக்கு மேக்கப் போட்டுகிட்டார்னு எனக்குப் புரியல. கொஞ்சம் நல்லா சாயல் இருந்தாத்தானே அவரோட நடிப்புல உள்ள வித்தியாசத்தை தூக்கி காமிக்க முடியும். அதே மாதிரி மேக்கப் சரியில்லேங்கும்போது எதுக்கு இவ்வளவு க்ளோஸ் அப் ஷாட்ஸ் வெச்சாருன்னு புரியல.

அப்புறம் எப்படி ஃப்ளெட்சர், ப்ளேன்ல இருந்து இறங்கின உடனே தமிழ்நாட்ல உள்ள சந்து பொந்தெல்லாம் பூந்து சேஸ் பண்றாருங்கறாங்க. ஏங்க இது உங்களுக்கே அடுக்குமா, அவரு கடைசி அரைமணிநேரம் வரைக்கும் ஹேமா பாஸ்கரோட தானே சுத்தராரு? அதோட அவரு பழைய சிஐஏ ஏஜெண்டா வேற வராரு, அவிங்கெல்லாம் அத்துவானக் காட்ல விட்டாக் கூட வழி கண்டுபிடிப்பாங்களாமே. உடனே ரா அதிகாரி(பல்ராம் நாயுடு) இப்படியா சுத்திகிட்டிருப்பாருங்கறீங்க, ஏங்க படத்துல ரவிக்குமார் ஒன்னுமே செய்ய மாட்டாருன்னு நெனச்சீங்களா? அவரு சில இடத்துல தன் முத்திரைய பதிச்சிட்டாரு. நம்மள்ல சிலப் பேர் ஓவரா விவாதம் பண்ணப்போய், ஏன் அந்தக் காட்சியில லாஜிக் இல்லைங்கறத விட்டுட்டு, ஏன் அந்தக் காட்சியில லாஜிக் இருக்கு, அதெப்படி அந்தக் காட்சியில லாஜிக் வெக்காதவங்க, இந்தக் காட்சியில மட்டும் லாஜிக் வெக்கலாம்னு பழக்கதோஷத்துல திட்டிடுறாங்க.
இதுல இன்னொரு விஷயமும் நெம்ப ரசிக்கணுங்க. இந்தப் படம் பார்த்திட்டு வந்த எல்லாரையும் திருப்தி படுத்திடுத்து. கேவலமா திட்டணும்னு நினைக்கறவங்களுக்கு நெறைய விஷயம் இருக்கு, சூப்பரா இருக்குன்னு பாராட்ட நினைக்கறவங்களுக்கும் விஷயம் இருக்கு, நாத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, ஆத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, பெரும்பான்மையினருக்கும் விஷயம் இருக்கு, சிறுபான்மையினருக்கும் விஷயம் இருக்கு.

ஏங்க, கமலும் ரவிக்குமாரும் எப்பவாவது இந்த படம் சத்தியஜித்ரே, குரசோவா படங்களுக்கு போட்டின்னு சொன்னாங்களா? ரவிக்குமார டைரக்டரா போடும்போதே கமல் இது ஒரு பக்கா கமர்ஷியல் பாண்டசி படம்னு தெளிவுப்படுத்திட்டார். இதுக்கும் மேல டெலிபுரேட்டா எப்படிங்க சொல்ல முடியும். அவரு தன் கருத்தை மட்டுமே சொல்லணும்னு படம் எடுத்திருந்தா ஒப்புக்குச் சப்பாணியா சுரேஷ் கிருஷ்ணாவத்தான போட்டிருப்பாரு. நெறயப் பேரு தானே ஒரு பிம்பத்தை உருவாக்கி வெச்சுகிட்டு இல்லாததை இருக்குறாப் போல நினைச்சுகிட்டு தைய்யா தக்கான்னு குதிக்கறாங்க. அப்போ இது ஹாலிவுட் தரமா இல்லையா, ரவிக்குமார் அப்படி சொல்லிருக்காரேங்கரவங்களுக்கு, ஆமா, ஹாலிவுட் தரத்தில் தான் இருக்கு. ஏங்க ஹாலிவுட்ல ஒழுங்கா நகைச்சுவை, பாண்டசி, காதல், ரொமேன்டிக் காமடி, ஆக்ஷன், டிராமா, சயன்ஸ் பிக்ஷன், அட்வென்ச்சர், வார், ஹாரர் அது இதுனு தரம் பிரிச்சு வெச்சு அதுப்படி தானே விமர்சனம் பண்றாங்க. இங்க மட்டும் ஏங்க எல்லாத்தையும் சேர்த்து போட்டு உலகத்தரம், ஹாலிவுட் தரம், ஆஸ்கார் தரம்னு கலந்து கட்டி கும்மி அடிக்கறீங்க? இது ஒரு நல்ல பாண்டஸி வகை படங்கறது என்னோட கருத்து.
இந்த காச்சு காச்சரவங்கள எல்லாம் லேட்டஸ்ட் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்கு அனுப்பி வெச்சிடணும்.

பின்குறிப்பு: நான் ஒரு கமல் ரசிகை அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் ஒரு உண்மையான கலைஞனின் உழைப்பை பாராட்ட வேணும்ங்கற காரணத்துக்காகவே இந்தப் பதிவு.

63 comments:

rapp said...

முரளிக்கண்ணன் said:

\\ஏங்க, கமலும் ரவிக்குமாரும் எப்பவாவது இந்த படம் சத்தியஜித்ரே, குரசோவா படங்களுக்கு போட்டின்னு சொன்னாங்களா? ரவிக்குமார டைரக்டரா போடும்போதே கமல் இது ஒரு பக்கா கமர்ஷியல் பாண்டசி படம்னு தெளிவுப்படுத்திட்டார். இதுக்கும் மேல டெலிபுரேட்டா எப்படிங்க சொல்ல முடியும்.\\


அருமையான பதிலடி, சும்மா நச்சுன்னு இருக்கு

rapp said...

கூடுதுறை said:

நல்ல விமர்சனம்

keep it up

rapp said...

நெம்ப நன்றிங்க முரளிக்கண்ணன். வந்ததுக்கும் கருத்து தெரிவிச்சதுக்கும்.

rapp said...

வந்ததுக்கும் கருத்து தெரிவிச்சதுக்கும்.
நெம்ப நன்றிங்க கூடுதுறை.

rapp said...

மோகன் கந்தசாமி said:

ஏற்கனவே கோவை குணா ரேஞ்சிக்கு கமல கொண்டுவந்துட்டாங்க நம்ம வலையுலக சுப்புடு வாலண்டினா! நீங்க JK ரித்தீஷ் லெவெலுக்கு கொண்டு வந்திட்டீங்க. என்ன கொடும இது வெட்டி ஆபிசர்?

rapp said...

சும்மா ஜாலியா போட்டேங்க. சீரியஸா எடுத்துக்காதீங்க. நாலு பேரு திட்டறதுக்கு ஒரு விஷயம் வேணும்ல.

rapp said...

ambi said:

//பொதுவா மரணம்ங்கறது மனுஷங்களுக்குள்ள இருக்கிற ஈகோவ தற்காலிகமாகவாவது தள்ளி வெச்சிடுதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. //

ரொம்ப சரியான கருத்து.

என்னது ரித்தீஷா? உங்க காமடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. :))

rapp said...

நெம்ப நன்றி அம்பி அண்ணே, ஹி ஹி, நாங்கெல்லாம் ஜே.கே.ரித்தீஷ் மன்றத்து ஆட்கள். இந்தப் பதிவுல எல்லாரும் அவரையே குறிவெச்சு தாக்கறதால நீங்கெல்லாம் சாம் ஆண்டர்சன் மன்றத்து ஆட்களா இருப்பீங்களோனு சந்தேகப்படறேன்.

rapp said...

கிரி said:

நான் இந்த வாரம் தான் படம் பார்க்க போறேன்

rapp said...

சரிங்க கிரி. நல்லபடியா போயிட்டு வாங்க.

சரவணகுமரன் said...

//எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா

:-)

rapp said...

இல்லைங்கறீங்களா சரவணகுமரன். இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல ஆமா. நீங்க சிரிக்கறத பார்த்தா எனக்கு நீங்க நம்ப மறுக்கராப் போல ஒரு சந்தேகம் வருது. அப்புறம் கானல்நீர் படத்தோட dvd பார்சல் அனுப்பிடுவேன், ஆமா!

மங்களூர் சிவா said...

/
எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் ஒரு உண்மையான கலைஞனின் உழைப்பை பாராட்ட வேணும்ங்கற காரணத்துக்காகவே இந்தப் பதிவு.
/

கலக்கீட்டீங்க போங்க!

:))))

rapp said...

நெம்ப நன்றிங்க சிவா. எப்படி, இனி யாரும் எங்க தலயப் பத்தி ஒரு வார்த்தை குறை சொல்ல முடியாதுல்ல!

புதுகை.அப்துல்லா said...

தசாவதாரம் பற்றி நம்ம பதிவர்கள் எழுதுன எல்லா விமர்சனத்தையும் படிச்சிட்டு அதைப் பற்றி ஒரு விமர்சனம் எழுதலாம்னு இருக்கேன்..ஹிஹிஹி

rapp said...

நெம்ப சரிங்க அப்துல்லா, நான் ஏற்கனவே போன வாரம் எல்லாரும் பண்ணிய விமர்சனத்த வெச்சி ஒரு குன்சா விமர்சனம் எழுதி(நான் படத்த பார்த்திட்டா மாதிரி) சீன் போடலாம்னு பார்த்தேன். அப்புறம் கண்டுபுடுச்சி, கலாச்சிடப் போறாங்கன்னு பயந்துகிட்டு கம்முன்னு இருந்துட்டேன்.

Unknown said...

உலகத்தரம்...

ஒரு தரம்
2 தரம்
3 தரம்.....

முடிஞ்சி போச்சு!

rapp said...

ssp சூப்பர். நன்றிங்க வந்ததுக்கும், கமன்ட் போட்டதுக்கும்

Aruna said...

இப்பிடி எல்லோருமாச் சேர்ந்து தசாவதாரம் படத்தைப் போஸ்ட் மார்ட்டம் செய்தால் நாங்க பார்க்கும் போது என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகுது.....தயவு செய்து யாராவது இதற்குத் தடை போடுங்கப்பா!!!
அன்புடன் அருணா

rapp said...

என்னை கேட்டா நெறைய விமர்சனம் படிச்சதால தாங்க இந்தப் படத்த அனுபவிச்சு பார்க்க முடிஞ்சுது. ஒரு பிரச்சனையும் இருக்காது, ஜாலியா பாருங்க.

சின்னப் பையன் said...

//எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் ஒரு உண்மையான கலைஞனின் உழைப்பை பாராட்ட வேணும்ங்கற காரணத்துக்காகவே இந்தப் பதிவு//

அவ்வ்வ்வ்.... இதை படிச்சவுடனே மேலே படிச்ச எல்லாம் மறந்து போயிடுச்சு!!!!

சின்னப் பையன் said...

பதிவு சும்மா நச்சுன்னு இருக்கு... ஆராய்ச்சியெல்லாம் ரொம்ப பலமா இருக்கு... படம் பாக்கும்போதே கையிலே ஒரு நோட்டுப்புத்தகம் வெச்சிண்டு குறிப்பெடுத்த மாதிரி இருக்கு..... ம்ம்ம்....

rapp said...

//படம் பாக்கும்போதே கையிலே ஒரு நோட்டுப்புத்தகம் வெச்சிண்டு குறிப்பெடுத்த மாதிரி இருக்கு//
நீங்க வேற ச்சின்னப் பையன் எனக்கு எல்லார் விமர்சனத்தையும் படிச்சி இப்போ தசாவதாரம் படம் சீன் பை சீன் வசனத்தோட மனப்பாடம் ஆகிடுச்சி.

rapp said...

//அவ்வ்வ்வ்..இதை படிச்சவுடனே மேலே படிச்ச எல்லாம் மறந்து போயிடுச்சு//
உண்மைய சொல்ல நாம ஏங்க வெக்கப்படணும். எல்லாரும் கடசீல இப்படி ஒரு டிஸ்கி போட்டு பீத்திகிட்டு இருந்தாங்க. என்னமோ ரஜினி ரசிகராம், சிவாஜி ரசிகராம்! இவங்கெல்லாம் நம்ம ஜே.கே.ரித்தீஷுக்கும், சாம் ஆண்டர்சனுக்கும் ஈடாவாங்களா? அதுக்காக நாமெல்லாம் இப்படியா தலைக்கனம் புடிச்சி ஆடுறோம்?

மோகன் கந்தசாமி said...

வெட்டி ஆபிசர்,
பூவாராகவனின் தமிழ் ஒன்று போதுமல்லவா தசாவதாரம் பார்க்கவேண்டிய படம் என நாம் சொல்வதற்கு. இந்த கிளிப் கொஞ்சம் பாருங்கள். "இது போல ஆத்தங்கரயள களிமண் தரயாக்கிட்டு போற தள்ளயேவக்கி யாவாரப் பயக்களுக்கு ஒலகம் அழியரதப் பத்தி என்ன கவல"

சின்னப் பையன் said...

வெக்கப்படலே.. வேதனைப்படலே.. அவமானப்படலே... பெருமைப் படறேண்டா கண்ணா...

rapp said...

மோகன் நீங்க சொல்றதத்தான் நானும் சொல்றேன். நான் இதோட படத்தை நாலஞ்சு தடவை பார்த்துட்டேன். எனக்கு இது செம படமாத்தான் தெரியுது. நான் போட்ட டிஸ்கிய சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் பூவராகவன் பேசுற தமிழ் பத்தி, கொஞ்சம் பேர் எக்சாக்டா இருக்குன்னும், டாக்டர் புருனோ மாதிரி அந்த ஊர்காரங்க சிலர் வேற மாதிரி இருக்குன்னும் சொன்னதாலத்தான், இங்க இரு வேறு கருத்துக்கள் இருக்குன்னு சொன்னேன். எனக்கு அந்தத் தமிழ் பத்தி சுத்தமா தெரியாது. நான் பயங்கரமான கமல் விசிறிங்க(எங்க தல ஜே.கே.ரித்தீஷ் எல்லாத்தையும் கடந்த நிலையில் இருப்பவர், ஹி ஹி ஹி).அன்பே சிவம் வசனமெல்லாம் எனக்கு மனப்பாடம்(வேணும்னா ஹிந்தி டெஸ்ட் வெச்சீங்களே, அப்டி ஒன்னு வெச்சி பாருங்க). நானும் சகலகலா வல்லவன் வலையில சேரலாம்னு யோசிச்சேன். அப்புறம் கேட்டுட்டு சேத்துக்கலைனா அவமானமா போய்டப் போகுதுன்னு கம்முனு இருந்துட்டேன்(உடனே நீ யார்கிட்டயும் அவமானப் பட்டதில்லயானு கேக்கக் கூடாது)

rapp said...

மோகன், இது ஆக்சுவலா தசாவதாரத்த சப்போர்ட் பண்ணி போட்ட பதிவுங்க. (நானும் தெளிவா எழுதறதா நெனச்சித்தான் எழுதறேன், கடசீல எப்டியோ சொதப்பிடறேன் போலருக்கு)

rapp said...

//வெக்கப்படலே.. வேதனைப்படலே.. அவமானப்படலே... பெருமைப் படறேண்டா கண்ணா//
அப்படி போடுங்க அரிவாள. சரி ச்சின்னப் பையன், எப்ப நீங்க படம் பார்த்திட்டு ஒரு பதிவு போடப் போறீங்க? நம்ம தல மன்றத்துல எல்லார்க்கும் இந்தப் படம் பார்க்க சிறப்பு மட்டும் அனுமதி கொடுத்திருக்காரு. மிஸ் பண்ணிடாதீங்க.

மோகன் கந்தசாமி said...

ஹாய் வெட்டி ஆபிசர்,
இது நல்ல விமர்சனம். நான் வேறதுவும் நினைக்கல. நீங்க சொதப்பவும் இல்ல. என் முதல் கமெண்ட்டுல ஸ்மைலி போடாம உட்டுட்டேன். சாரி. :-)

மோகன் கந்தசாமி said...

சகலகலா வல்லவனில் உங்கள் பதிவை எதிர் நோக்கி உள்ளேன். அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.

rapp said...

//சகலகலா வல்லவனில் உங்கள் பதிவை எதிர் நோக்கி உள்ளேன். அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்//

அய்யய்யோ அதுல எல்லாம் பெரும்தலைங்களா இருக்காங்க. என்னையெல்லாம் சேத்துக்க மாட்டாங்கங்க. நானா போய் ஏன் வாங்கிக் கட்டிக்கணும்னு பார்க்கறேன்.

rapp said...

//இது நல்ல விமர்சனம். நான் வேறதுவும் நினைக்கல. நீங்க சொதப்பவும் இல்ல//
ஹி ஹி இப்படி தசாவதாரம் விமர்சனப் பதிவ தமிழ்மணத்துல போட்டவங்களிலேயே நான்தான் நெம்ப நெம்ப நல்லா போட்டிருக்கேன்னு சொல்ல வரீங்கன்னு தெரியுது. அவ்ளோல்லாம் புகழாதீங்க, எனக்கு வெக்க வெக்கமா வருது.

Anonymous said...

woow, nice post, ungala mathiri yarachum detaila vilakam solvanganuthan kamal konjom vilangium vilangathamathiri padangala eadukarnu nenaikireen, unga sevai thodaratum, ithukagvavathu unga JK Rithesh ku na support panuven!!!

//// Kamal padamna oooovera ethir pakarathu thapunu sollala, ana nenga eathir pakaramathiri NALLA ULAGA THARAMANA padatha kamal thantha ungalamathiri KONJA ( around 100) perthan nalla irukunu papenga,
Balance (6 koodi - 100) perukum onum puriyama padam flopalam aidum. athula avaruku neraya XPeriance irukku,

//// intha postla irukara details ealam frame ai vachu josichatha sariya varum, but eathana per apadi josipanganu theriyathu, but intha posta irukara eala vishayathoda na 100% othuporen.

//// 2 para type pani vanthathula aduthu eana sollanumnu josichathu maranthu pochu, japaham vantha vera commentla poren,
sorry.

Anonymous said...

sorry, i dono hw to use tamil n this comment box, sorry.

rapp said...

சுபாஷ் http://www.google.com/transliterate/indic/tamil
போய் தமிழ்ல டைப்புங்களேன். ஓரளவுக்கு நீங்க எழுதிருக்கறது புரியுது. ஆனா தமிழ்ல தான் முழுசா புரியும்னு நினைக்கிறேன். நான் ஜாலியா தசாவதார ஜோதில கலக்கத்தாங்க இந்தப் பதிவப் போடலாம்னு இருந்தேன். சரி போடறதுதான் போடறோம் நெறயப் பேரு படத்த சரியா பாக்காம காமடியா திட்டறாங்களேனு, அதையெல்லாம் விளக்கி போட்டேன். நெம்ப நன்றிங்க வந்து கருத்து சொன்னதுக்கு.
நேரம் கிடைக்கறப்ப வந்து கருத்துக்களை பதிவு பண்ணுங்க.

rapp said...

நீங்க வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நான்தான் நன்றி சொல்லணும். நீங்க எதுக்கு இந்த ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு சாரி சொல்லறீங்க.

Sanjai Gandhi said...

//பின்குறிப்பு: நான் ஒரு கமல் ரசிகை அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் ஒரு உண்மையான கலைஞனின் உழைப்பை பாராட்ட வேணும்ங்கற காரணத்துக்காகவே இந்தப் பதிவு//

அடங்கொக்க மக்கா.. நீங்களும் நம்ம சிங்கத்து சங்க ஆள் தானா? ரெம்ப சந்தோஷம்.. நீங்க எந்த ஏரியானு தெரிஞ்சா அந்த ஏரியா ரித்திஷ் சிங்க சங்கத் தலைவரா உங்களை சிபாரிசு செய்ரேன். ;P

rapp said...

சஞ்சய் என்னங்க நீங்க, நான் தான் அகில உலக ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தோட தாணைத் தலைவிங்க. மன்றத்து ஆளுங்கறீங்க, இப்படியொரு முக்கிய விஷயம் தெரியலீனா, அப்புறம் சாம் அண்டர்சன் மன்றத்துக்காரங்க நம்மள பார்த்து நக்கலடிக்க மாட்டாங்க? என்னமோ போங்க, இதக் கேள்விப்பட்டு நம்ம தல கோவத்துல சிலுப்பிகிட்டு கெளம்பாம இருந்தா சரி.

Sanjai Gandhi said...

// rapp said...

சஞ்சய் என்னங்க நீங்க, நான் தான் அகில உலக ஜே.கே.ரித்தீஷ் மன்றத்தோட தாணைத் தலைவிங்க//

மன்னிக்கனும் தலைவி... தலைவரோட கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் நான்... அதும் இல்லாம் எனக்கு தெரிஞ்சதெல்லம் நம்ம தலைவர் மாண்புமிகு ஜெ.கே ரித்திஷ் அவர்கள் தான். அதனால மத்தவங்களை பதி தெரிஞ்சிகாம விட்டுட்டேன். இனி உங்களையும் கண்டுகிறேன் தலைவி அவர்களே. :)

rapp said...

சஞ்சய், நீங்க இப்படி மனசார மன்னிப்புக் கேட்டதாலயும், நம்ம தலயோட கொள்கை மறப்போம் மன்னிப்போம்னு இருக்கறதாலையும், உங்க மேல மன்றத்துல எந்த நடவடிக்கையையும் எடுக்கப் போறதா இல்லங்க.என்ஜாய்!
அடுத்த தடவை இந்தத் தப்ப செஞ்சீங்கன்னா கானல்நீர் படத்தை ஒரு முறை முழுசா பார்த்திட்டு விமர்சனம் எழுதணுங்கறது தான் தண்டனை.

Sanjai Gandhi said...

//பூவராகவன் காரக்டர் பேசுற தமிழ் பத்தி இருவேறு கருத்துக்கள் சொல்றாங்க//

தல அவர் பூவராகவன் இல்ல தல.. "பூவராகன்".. எங்க சொல்லுங்க பாப்போம்.. "பூவராகன்".. :P

கருணாகார்த்திகேயன் said...

// பொதுவா மரணம்ங்கறது மனுஷங்களுக்குள்ள இருக்கிற ஈகோவ தற்காலிகமாகவாவது தள்ளி வெச்சிடுதுங்கறது என்னோட தாழ்மையான கருத்து. //

மிக மிக சரி .. நானும் இதை உணர்ந்து இருக்கேன் ..

//இங்க மட்டும் ஏங்க எல்லாத்தையும் சேர்த்து போட்டு உலகத்தரம், ஹாலிவுட் தரம், ஆஸ்கார் தரம்னு கலந்து கட்டி கும்மி அடிக்கறீங்க? இது ஒரு நல்ல பாண்டஸி வகை படங்கறது என்னோட கருத்து.//

அப்பாடா... என்னோட கருத்துக்கு ஆதரவு ரெடி...

/எங்களோட தல ஜே.கே.ரித்தீஷுக்கு கமல் தீவிர போட்டியாளரா இருந்தாலும் //

இது கொஞ்சம் ஓவரா தெரியல ...

நல்ல விமர்சனம்... உங்க தல நடிச்ச படம் எப்ப வருது ??

வாழ்த்துக்கள் ...
அன்புடன்
கார்த்திகேயன்

rapp said...

ஹை, நெம்ப நன்றிங்க சஞ்சய். பூவராகன். கரக்டா சொல்லிட்டேன் பாருங்க.

rapp said...

நெம்ப நன்றிங்க கார்த்தி. உங்க கருத்துக்களை தெரிவிச்சதுக்கு சந்தோஷம்.
//உங்க தல நடிச்ச படம் எப்ப வருது//
கமல் எங்க தல கிட்ட வந்து பயங்கரமா கெஞ்சி கேட்டுகிட்டதால(தசாவதாரம் வசூல் பாதிக்கக்கூடாதுன்னு) தன்னோட 'நாயகன்' பட ரிலீஸ தள்ளி வெச்சிட்டாரு. எப்படி தசாவதார வசூல் எங்க தலயோட நாயகன் படத்தால பாதிக்கப்படும்னு டெக்னிக்கலா கேட்டிங்கன்னா,எங்க தல படம் ரிலீசாகுதுன்னு தெரிஞ்சாலே எல்லாரும் ஊருக்குள்ள சிக்கன் குன்யா பரவினாப் போல பயந்து நடுங்கி ஊரைவிட்டு ஓடிப்போறாங்களாம்.

பரிசல்காரன் said...

//இந்தப் படம் பார்த்திட்டு வந்த எல்லாரையும் திருப்தி படுத்திடுத்து. கேவலமா திட்டணும்னு நினைக்கறவங்களுக்கு நெறைய விஷயம் இருக்கு, சூப்பரா இருக்குன்னு பாராட்ட நினைக்கறவங்களுக்கும் விஷயம் இருக்கு, நாத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, ஆத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, பெரும்பான்மையினருக்கும் விஷயம் இருக்கு, சிறுபான்மையினருக்கும் விஷயம் இருக்கு.//

ரொம்ப நிஜமான விஷயம்!

//அவரு தன் கருத்தை மட்டுமே சொல்லணும்னு படம் எடுத்திருந்தா ஒப்புக்குச் சப்பாணியா சுரேஷ் கிருஷ்ணாவத்தான போட்டிருப்பாரு. //

சுந்தர்.சி-யைத்தான் சுரேஷ் கிருஷ்ணா -ன்னுட்டீங்களோ?

//வாசு இவர்கிட்ட சொல்ற, மீதியையும் பார்த்துட்டு போங்கர வசனத்தோட தொடர்ச்சியை காட்சியாக்காம விட்டாங்க?//

நான் விமர்சனம் எழுதினப்போ ஐயையோ இந்தப் பாயிண்டை விட்டுட்டோமே-ன்னு நெனச்சேன்! சூப்பர்ங்க! சொல்லீட்டீங்க!

//ஜப்பான் கமல் கூடத்தான் பிரபலமான யாரும் தனிச்சு வரலை.//

அட!! ஆமால்ல?

எல்லா விமர்சனத்துலயும் எல்லாம் சொல்லியாச்சு என்று சோர்வடையாமல் புதுப் புது கருத்துகளைச் சொன்ன உங்களுக்கு.. சபாஷ்!

rapp said...

நெம்ப நன்றிங்க கிருஷ்ணா, ஊரிலேருந்து வந்ததும் வராததுமா என் மொக்கையப் படிச்சு பின்னூட்டம் போட்டதுக்கு. நீங்கல்லாம் கொடுக்குற இந்த உற்சாகம்தான் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி தைரியப்படுத்துது.

rapp said...

//சுந்தர்.சி-யைத்தான் சுரேஷ் கிருஷ்ணா -ன்னுட்டீங்களோ?//
சத்யா, ஆளவந்தான் எல்லாத்தையும் மறந்துட்டீங்களா?

பரிசல்காரன் said...

இல்லல்ல.. சுரேஷ்கிருஷ்ணாகிட்ட கொஞ்சம் சரக்கிருக்குங்க.. அதுவுமில்லாம சத்யாவெல்லாம் அவரோட டாமினேஷன்தான்..

rapp said...

அப்போ நெஜமாவே அவரு அப்படிப்பட்டவரா? நான் பாபா, பரட்டை என்கிற அழகுசுந்தரம், ஆளவந்தான் எல்லாம் பார்த்து, பாலச்சந்தர் சார்கிட்ட உதவி இயக்குனரா இருந்தவர கமலும் ரஜினியும் தங்களோட செல்வாக்கால இப்படி கொடுமை படுத்தறாங்கன்னு நினைச்சேன். அதெல்லாம் இல்லையா? அவ்வ்வ்வ்வ்வ்

மருதநாயகம் said...

//நான் ஒரு கமல் ரசிகை அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்//

என்னங்க கட்சீல இப்டி அந்நியாயமா கவுத்திட்டீங்க

rapp said...

அது வேறொன்னுமில்லைங்க மருதநாயகம், இப்போல்லாம் ஒரு டிஸ்கி போடறது டிரண்டாயிடுச்சுங்களே, அதான். கூட இன்னொரு விஷயத்தையும் நீங்க கவனிக்கணும், ஜே.கே.ரித்தீஷ் ரசிகையான எனக்கு என்ன அளவுக்கு சினிமா அறிவிருக்கும். அப்படி இருக்கறச்சே எனக்குப் புரிஞ்ச விஷயங்கள் கூட ஓரளவுக்கு அறிவிருக்கும் மத்தவங்களுக்கு புரியலயாங்கர உள்குத்து இதுல இருக்கு. எப்படி?

புருனோ Bruno said...

//இந்தப் படம் பார்த்திட்டு வந்த எல்லாரையும் திருப்தி படுத்திடுத்து. கேவலமா திட்டணும்னு நினைக்கறவங்களுக்கு நெறைய விஷயம் இருக்கு, சூப்பரா இருக்குன்னு பாராட்ட நினைக்கறவங்களுக்கும் விஷயம் இருக்கு, நாத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, ஆத்திகம் பேசுறவங்களுக்கும் விஷயம் இருக்கு, பெரும்பான்மையினருக்கும் விஷயம் இருக்கு, சிறுபான்மையினருக்கும் விஷயம் இருக்கு.
//

மறுமொழிகிறேன்

rapp said...

ரொம்ப நன்றி புருனோ சார்.

Unknown said...

நகைசுவை தேவைதான் அதுக்காக ஜேகே ரித்தீஷ் கூட ஒப்பிட்டு பேசுறது கொஞ்சம் ஓவர்....சமீபத்தில் தசாவதாரம் preview show பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ,இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள பதிவர்களின் விமர்சனம் குறித்தும் ,விளையாட்டாய் சிலர் கேலி செய்வது குறித்தும் பேசினேன்..மிகவும் வருத்தப்பட்டார்....
தசாவதாரம் vs விமர்சனங்கள் எனும் எனது பதிவை பார்க்கவும்..
நன்றி!

சண் சிவா
www.aaraamthinai.blogspot.com

Anonymous said...

//நகைசுவை தேவைதான் அதுக்காக ஜேகே ரித்தீஷ் கூட ஒப்பிட்டு பேசுறது கொஞ்சம் ஓவர்....சமீபத்தில் தசாவதாரம் preview show பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ,இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களை சந்தித்து இணையதள பதிவர்களின் விமர்சனம் குறித்தும் ,விளையாட்டாய் சிலர் கேலி செய்வது குறித்தும் பேசினேன்..மிகவும் வருத்தப்பட்டார்//
ஓகே ஆபிசர். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

rapp said...

சண் சிவா சார், என்ன சார் நீங்க இப்படி சொல்றீங்க? அங்கங்க போய் பாருங்க கோவை குணாவோடல்லாம் கம்பேர் பண்ணி கடுப்படிக்கறாங்க. இத்தனைக்கும் நான் படத்த சப்போர்ட் பண்ணிதான் எழுதிருக்கேன். ஜாலியா எழுதினத ஜாலியா எடுத்துக்க மாட்டோம்னா, அப்புறம் கிருஷ்ணவேணி பாட்டிய மன பிறழ்ச்சி உள்ளவரா கமல் காமிச்சதில் தீவிர உள்நோக்கம் இருக்குன்னு வினோதமா சிந்திக்கறவங்கள என்ன சொல்ல முடியும்? ஹை, ரவிக்குமார் சார்கிட்ட சொல்லுங்க, நக்கலடிச்சாலும் அத்தனைப் பேரும் தியேட்டர்ல படம் பார்த்தாங்கன்னு, இன்னும் நாலு தடவ பார்த்திட்டு இன்னும் வினோத தியரிக்கள கண்டுப்பிடிக்கச் சொல்லுவாரு. ஒரு பிரம்மாண்ட படம் வந்துச்சின்னா நாலு பேரு ஜாலியா நக்கலடிக்கத்தான் செய்வாங்க. ஷங்கர் கூடத்தான் சிவாஜி எடுக்க பயங்கர உழைப்ப சிந்தினதா சொல்லிக்கறார், அதுக்காக சிவாஜிய விட்டாங்களா என்ன. ஆமா நீங்க என்ன இப்டி சந்துல சிந்து பாடிட்டீங்க, என் மனசு ரொம்ப கலவரமாப்போயிடுச்சி. ஏன் எங்க ஜே.கே.ரித்தீஷ் ஒரு நாள் பெரிய ஸ்டார் ஆக மாட்டாரா? இப்படில்லாம் அவர எல்லாரும் நக்கல் அடிச்சாலும், நானெல்லாம் மன்றத்திலேருந்து விலகறதா இல்ல.

rapp said...

அய்யய்ய அனானிகளா, என் பதிவுல என்னப்பா உங்களுக்கு அவ்வளவு ஆர்வம். ஆனாலும் நான் ஒன்னும் பண்ணப் போறதில்ல, உங்கள மாதிரி வேலயில்லாதவங்கள விட்டா வேற யாரு என் பதிவுல பின்னூட்டத்துக்கெல்லாம் என்னை முந்திகிட்டு இப்படி கேணத்தனமா மொக்க போடுவா?

Sanjai Gandhi said...

//ஏன் எங்க ஜே.கே.ரித்தீஷ் ஒரு நாள் பெரிய ஸ்டார் ஆக மாட்டாரா? இப்படில்லாம் அவர எல்லாரும் நக்கல் அடிச்சாலும், நானெல்லாம் மன்றத்திலேருந்து விலகறதா இல்ல.//

கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.. :)

rapp said...

உங்க ஆதரவுக்கு நெம்ப நன்றிங்க சஞ்சய்.

தருமி said...

அதென்ன பதிவுக்குப் பதிவு ரித்தீஷ் புகழ் பாடுறீங்க. எனக்கும் ரித்தீஷ் ரசிகர் சங்கத்தில எதுனாச்சும் போட்டுக் குடுங்களேன்.

rapp said...

வாங்க வாங்க, அகில உலக ரித்தீஷ் ரசிகர்மன்றத் தலைவி நானு, எங்க மன்றத்தோட கொள்கை பரப்பு செயலாளர் ச்சின்னப் பையன், இவன் துணைத் தலைவரா ஆகறத்துக்கு வாய்ப்பிருக்கு, நீங்க வேணும்னா பொருளாளர் ஆகிடுங்களேன், என்ன எங்க மன்றப்பதவிக்கு ஏகப்பட்ட போட்டியிருக்கு, அதால சில பல லக்ஷங்கள நீங்க செலவழிக்க வேண்டி வரும்:):):)

கோவை விஜய் said...

நல்ல நடுநிலைமயான விமர்சனம்.

தி.விஜய்


http://pugaippezhai.blogspot.com