Wednesday 15 October, 2008

சினிமா தொடர்

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த முரளிக்கண்ணன் அவர்களுக்கும், முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

நான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ரொம்ப சின்னக் குழந்தைல இருந்தே சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான். அப்போல்லாம் எங்க தெருவில் எங்க வீட்ல மட்டும்தான் டிவி இருந்ததால, நெறயப் பேர் டிவி பார்க்க வருவாங்க. பராசக்திக்காக, பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன். இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க)

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

தியேட்டர்லன்னு வெச்சுக்கலாம். கணபதிராம் தியேட்டர்னு அடையார்ல ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த தியேட்டர் இருக்கு இல்லையா, அங்கதான் ராஜாதி ராஜா பார்த்தேன். எங்க மாமா தாத்தா(அத்தைப் பாட்டி மாதிரி) வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு, அங்க வர விருப்பமில்லாத கசின்சோட என்னையும் சேர்த்து படத்துக்கு அனுப்பிட்டாங்க(நான் அங்க வந்தா தொந்தரவு கொடுப்பேனாம்!!!) சோகமா போன நான் அப்டியே செம ஜாலியாகிட்டேன். இவ்ளோ பேரோட படம் பாக்கறோம்ங்கற பீலே குஷியாக்கிடுச்சி. கொஞ்ச நாளில திருப்பி நான் தொந்தரவு கொடுத்ததால அபூர்வ சகோதரர்கள் கூட்டிட்டு போனாங்க(அதே தியேட்டர்). அதுல குள்ள கமல் சாரை நிஜமாகவே வேற ஒரு ஆள்னு ரொம்ப நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள்.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

பீமா, மாயாஜால் தியேட்டரில் பார்த்தது. இந்த வருஷம் ஆரம்பத்துல (ஜனவரி) இந்தியா வந்திருந்தப்ப நானும் என் ரங்கமணியும் போனோம். அங்க பிரிவோம் சந்திப்போம், பீமா ரிலீசாகி இருந்துச்சி. பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார். சரின்னு பீமா போனோம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

என் பழக்கமே, வீட்ல ஏதாவது ஒரு படம் போட்டு விட்டுட்டு வலையில் சுத்திக்கிட்டு இருக்கறதுதான். இன்னைக்கு கடைசியா கர்ணன் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். படம் சூப்பர், ஆனா ஏன் தோல்விப்படமா ஆச்சுன்னு சிலக் காரணங்கள் தோனுச்சி. எல்லாருக்கும் ஒரு மினி பூதம் கணக்கா மேக்கப் போட்டு, உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லாம, கர்ணனை விட அவர் மனைவி புஜபல பராக்கியாமச்சாலியாக தெரியறது, திருவிளையாடல், கந்தன் கருணை மாதிரி ஒரு புளோ இல்லாம, குட்டிக்கதைகளா(நோ கற்பனை ஓட்டம் பிளீஸ்) எடுத்திருக்கறது, முக்கியமா 'ப' வரிசைப் பீல் குட் செண்டிமெண்ட் படங்களுக்கு டிமான்ட் எகிறனப்போ ஹீரோ சாகிறாமாரி காட்னதுன்னு(மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு) எக்கச்சக்க காரணங்கள் தோனுச்சி. (சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்). புதுப்படம்னா, சரோஜா. சூப்பரா இருந்தது. நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

நல்ல தம்பி(என்.எஸ்.கே), பசி, அன்பே சிவம், கண்ட நாள் முதல், மொழி, சென்னை 28, மகளிர் மட்டும், சந்தியா ராகம், முதல் மரியாதை, பாமா விஜயம், நரசிம்மா.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

சம்பவம் நடந்தப்போ நான் பிறக்கலைன்னாலும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கும், கீழே இருக்குற வழக்கும் இன்னிவரைக்கும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிக்கிட்டு இருக்கு.

எம்.ஆர். ராதா சார் எம்.ஜி.ஆரை சுட்டது. அச்சம்பவம் எப்படி, மதுரை முத்து ரேஞ்சில கட்சில இருந்தவரை வேறு தளத்திற்குக் கொண்டுசென்றது, அந்த சமயத்தில் அது எப்படி செம பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்ங்கற ஒருவித திரில், அதுக்குப் பின்னணியா சொல்லப்படற ரெண்டு முக்கியக் காரணங்கள், சம்பவத்திற்கு அப்புறம் ராதா சார் அடிச்ச கமெண்ட்ஸ், கேஸ்ல வாதாடுனது எங்க நெருங்கின உறவினர், இப்படி பலக் காரணங்கள் உண்டு. இன்னொரு சோகமான விஷயம் இந்த ஒரு சம்பவத்தாலே, அவ்ளோ பெரிய திறமைசாலிக்கு பெரிய அளவுல வெளிப்படையா அரசாங்கம் எந்த மரியாதயுமே செய்ய முடியாமப் போனது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

ரெண்டு அபூர்வ சகோதரர்களும் என்னை ரொம்ப பிரம்மிக்க வெக்கும். (எம்.கே.ராதா நடிச்சது)அந்தக் காலக்கட்டத்துலயே, நமக்கு உறுத்தாம ரெட்டை வேஷத்தை அழகா எடுத்திருப்பாங்க (எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு ஷங்கர் ஜீன்ஸ் எடுத்து எரிச்சல்படுத்தினாரே:(:(:()புது அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ல படற அத்தனை சினிமா சம்பந்தப்பட்ட நியூசும் வாசிப்பேன். மொதோ மொதோ படிச்சது குமுதம்ல வர்ற லைட்ஸ் ஆன்தான்னு நினைக்கறேன். கிசுகிசு ரொம்பப் பிடிக்கும். நம்ம சினிமா கிசுகிசு மட்டும்தான் கொஞ்சமாவது விடை தெரியும்.

7. தமிழ்ச்சினிமா இசை?

இதைப்பத்தி நான் ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.
எங்கம்மா எனக்கு பாடுன தாலாட்டே சினிமாப் பாட்டுங்கதான். ஆனா அப்புறம் ஒரு காலத்துல நான் இல்லாத பியூரிட்டான் வேல செஞ்சுக்கிட்டு இருப்பேன். வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன். அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி, இப்போ தமிழ்ல சினிமாப் பாட்டைத்தவிர வேறெதுவும் கேக்குறதில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா இசைக்கு மூணு கோல்டன் பீரியட் இருந்துச்சு. முதல் பீரியட் ஐம்பதுகளின் இறுதியில் இருந்து, அறுபதுகளின் இறுதிவரை ஒரு காலக்கட்டம், எண்பதுகள் முழுசா, இன்னொரு காலக்கட்டம், தொன்னூத்தி ரெண்டுல இருந்து தொன்னூத்தி ஏழுவரைக்கும் அடுத்த காலக் கட்டம். மத்ததெல்லாம் அவ்ளோ பிடிக்காது, காரணம், ஒண்ணு, கதாநாயகன், நாயகி கொடுமயாத் தோன்றும் காலக்கட்டம்(திரிசூலம், உரிமைக்குரல், ஜக்கம்மா ரேஞ்ச் படங்கள்), இன்னொன்னு யார் இசையமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கும் ஆவல் கூட தோணாத மாதிரி ஒரு பீரியட்:(:(:(

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

படத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை. தெலுங்கு கிருஷ்ணா படங்கள் குழந்தையா இருக்கறச்சே பார்த்தது. அப்புறம் ஷங்கர் நாக் இறந்தப்போ அவர் படம் ரெண்டு மூணு பாத்திருக்கேன். ஹிந்தி படம் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பாக்கறேன். ஞாயிறு மதியம் போடற பெங்காலிப் படங்கள் ஒன்னு ரெண்டு பாத்து கொஞ்சநாள் மிதுன் பிடிச்சிருந்தது. அதே நேரத்தில் போடும் மலையாளப் படங்களைப் பார்த்து வெறுத்துப்போயி இனி மலையாளப் படமே பாக்கைக் கூடாதுன்னு நெனச்சிருந்தேன், அப்புறம் எங்கக்கா பாதிப்புல பாக்க ஆரம்பிச்சு இப்போ நெறைய பாக்கறேன். ஹாலிவுட் படங்கள் பாக்க ஆரம்பிச்சது வில்ஸ்மித் பைத்தியம் புடிச்சு அலஞ்சதால. இப்போ நெறைய பிரெஞ்சுப் படங்கள் பாக்கறேன். பிரெஞ்சு சினிமாக்கள் மிக மிக வித்தியாசமான தளங்களை மிக வித்தியாசமா டீல் செய்வது ரொம்ப நல்லா, பிரஷா இருக்கு.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

தெலுங்குல ஷிவா,பிரேமா, தொலி பிரேமா
மலையாளம்ல இன் ஹரிஹர் நகர், காட்பாதர், akale, பிரியதர்ஷன் சார் படங்கள்.
ஹிந்தில ஜங்க்லீ, shree 420, அனாரி, பாவர்ஜி, பாதோன் பாதோன் மே, பியா கா கர், கட்டா மீட்டா, சாத் சாத், guddi,கபி ஹான் கபி நா, ஹெச்ஏஹெச்கே, டிடிஎல்ஜே.
ஹாலிவுட்ல எனக்கு தெரிஞ்சதெல்லாம் ரொமாண்டிக் காமடி வகைகளும், பாண்டசி வகைகளும் மட்டும்தான், அதால ரொம்ப ரொம்பப் பிடிச்சப் படங்கள் மட்டும் சொல்றேன். Independence Day, Bridget Jones' Diary (ரெண்டு பாகமும்), when harry met sally, monster in law, how to lose a guy in 10 days, what a girl wants, jingle all the way இப்படிப்பட்ட படங்கள்தான்.
பிரெஞ்சுல நான் பார்த்தவரை எனக்குப் பிடிச்சது டேனி பூனின் Bienvenue chez le ch'tis, La Maison du bonheur மற்றும் Louis de Funèsஇன் அனைத்து படங்களும். நெஞ்சைத் தொட்டு மனசை லேசாக்கும் காமடிக்கு முன்னவர் படங்க, லாஜிக் இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களையும், அவலங்களையும், விநோதங்களையும் வித்தியாசமானக் காமடியோடு கூறுவது பின்னவர் படங்கள்(உதாரணத்திற்குக் கூறவேண்டுமானால் இதேப் போல இருக்கும்).

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நெறயப் பேரை தெரியும்(அவங்களுக்கும் என்னைத் தெரியும்), அப்பாவோட ஸ்டூடண்ட்ஸ் பாதிப்பேர், மீதிப்பேர் நண்பர்களாவோ உறவினர்களாவோ இருக்கறதால, அவங்க எதிர்ல சீன் போட்டு பொழப்பு நடத்தறதே பெரும்பாடு. தெரிஞ்சவங்க எல்லாரும் மிக மிக நல்ல நிலைமையில் இருப்பதால், அவங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதே பெரும் சேவைன்னு நினைக்கறேன். நான் உப்புமா கிண்டி ஏதாவது ஆகிடுச்சுன்னா:(:(:(ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:(

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கலக்கலா இருக்கும்னு நினைக்கறேன். காப்பி அடிச்சு எடுத்தாலும் அழகா எடுக்கணும். வெங்கட்பிரபுவ நக்கல் அடிக்கறவங்க குசேலனை நினைச்சுப் பாக்கணும். வெங்கட்பிரபு, அமீர், பூபதி பாண்டியன், ராதா மோகன்னு சூப்பர் ஆளுங்க இருக்காங்க:):):) ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் மேனியா போச்சுன்னா ரொம்ப நிம்மதியா இருக்கும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மத்த மொழிப்படங்களைப் பார்ப்பேன். சினிமால நான் மொழி பாக்கறதில்லை. அதால பெருசா போரடிக்காது. எக்கச்சக்கமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் வரும். வழக்கம்போல ஆற்காட்டார் 'தயவிருந்தா', ஏதாவது நாடகம், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடுகள், விளையாட்டுகளில் பொழுதுபோக்குவோம். சினிமா அடிக்ஷன் இப்போ பெரும்பான்மையா இருக்கிறா மாதிரி தெரியலை. அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம். எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில்). திரைப்படத்துறையை நம்பி இருக்கறவங்க மாதிரியே இவங்களும் பாதிப்படைவாங்கன்னு நினைக்கறேன்.

நான் இதைத் தொடர அழைப்பது,

அப்துல்லா அண்ணா.
அம்பி அண்ணா.
மங்களூர் சிவா.
சஞ்சய் .
எஸ்கே .
தருமி அவர்கள்.
இவன்.

Tuesday 7 October, 2008

என்டிடிவியில் என்னை பார்த்தீங்களா?

டிஸ்கி: பதிவு இம்மாம் பெர்சா இருக்கேன்னு வழக்கம்போல கடைசீப் பத்திக்குப் போய், அத வெச்சு ஒப்பேத்தி அட்டெண்டன்ஸ் போடும் அன்பர்களுக்கு, கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோ டிக்கட் கூரியரில் அனுப்பப்படும் என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதோட முதல் பாகம் இங்கே, ரெண்டாவது பாகம் இங்கே.


அங்கப் போனா விவாதத்துல கலந்துக்கற மாதிரி ஒரு மூஞ்சியும் காணோம். அப்போதான் முழு நம்பிக்கை வந்துச்சி, இங்க நிஜமாவே விவாதம் நடக்கப்போகுது, வந்த போன்கால் எல்லாம் யாரும் எங்களை பல்பு வாங்க வெக்க செஞ்ச சதியில்லைன்னு. ஏன்னா என் பின்னணி அப்படி!!!


சரின்னு, ஒரு பெண்ணாகப் பிறந்தால் திருமணமாகும்வரை ஆற்ற வேண்டிய சிலக் கடமைகள் இருக்கே, அதை செவ்வனே செய்யனும்ங்கற கடமையுணர்ச்சியோட, விகல்பமில்லாம பார்வையை சுழல விட்டால், சவுக்கார்பெட்டே தேவலாம்னு ஆகிடுச்சி. அதென்னமோ சேட்டு பசங்க மட்டும் அசட்டுக்களையை வரமா வாங்கிட்டு வந்தா மாதிரி இருக்கறதோட ரகசியம் என்னன்னே புரியல. சரின்னு இன்னொருப்பக்கம் யதார்த்தமா பார்வையை திருப்பினா, எக்சாம்கு பிரிப்பேர் பண்ற மாதிரி நியூஸ் பேப்பரை வெச்சிக்கிட்டு சிலப் பழம்ஸ் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

நெக்ஸ்ட் கலர் கலர் வாட் கலர்னு பார்த்தா டோட்டல் டாமேஜ். எக்கச்சக்க மாமிங்க இங்கிலிபீஸ் பேச தெரிஞ்ச ஹோம் மேக்கர்னு ப்ரூவ் பண்ண கெடச்ச சந்தர்ப்பத்த தெளிவா பயன்படுத்திக்க செம சதியோட சங்கமிச்சிருந்தாங்க. என்னடா இது கருத்துப் போலீஸ்களுக்கு வந்த சோதனைன்னு பார்த்தப்போ, ரெண்டு பேர் வந்தாங்க. ரெண்டு பேரும் எம்.ஒ.பி, எங்கள மாதிரியே சேம் பிளட் பீலிங்க்ல இருந்தாங்களாம், அதைச் சொல்லியே அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவங்கக் கிட்ட யாரெல்லாம் (வி.ஐ.பி) வராங்கன்னு கேட்டப்போ, மைத்ரேயன், கனிமொழி, ஒரு பெண் சினிமா டைரெக்டர், இன்னும் ரெண்டு பேர்(ஜாஸ்தி பிரபலமில்லாததால் இப்போ நியாபகம் இல்ல) அப்புறம் நம்ம மல்லுவேட்டி மைனர் கார்த்தி சிதம்பரம்னு சொன்னாங்க.

விஷயத்தை பரப்ப பிரெண்ட்சுக்கு போன் போட்டா, கடமைய எருமை கணக்கா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதாவது நான் என்டிடிவில வரேன்னதும் செல்லைக்கூட ஆப் பண்ணிட்டு டிவி முன்னாடியே பழியா கெடக்கறாங்களாமா. சீன் போடறதுக்கு சொல்லியா தரணும். சரின்னு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............ஆகறதுக்குள்ள அடுத்த மேட்டரைக் கேட்டிருவோம்னு, யாரு நிகழ்ச்சிய நடத்தப் போறாங்கன்னு கேட்டேன், ஸ்ரீனிவாசன் ஜெயினாம்னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவரு கார்ல டைரெக்டா விமானநிலையத்தில இருந்து வந்து இறங்கறார். ஆள், தமிழ் பட அமெரிக்க மாப்பிள்ளையாட்டம் இருந்தார். கொஞ்ச நேரத்தில பிரபலங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க, கனிமொழி மேடம் வரலைன்னு தகவல் வந்துச்சி. கார்த்தி ஸார் வரும்போது, 'காரைக்குடி மைனர் பராக் பராக்னு' கத்தனும் போல இருந்துச்சி.


பொதுவாவே யாராவது பிரபலமானவங்க வந்தா, விழுந்தடிச்சு போய் பாக்கறது என்னோட தனித்திறமைகளில் ஒன்னு. ஒருதரம் நான் மினி புராஜெக்ட் ரிப்போர்ட் பிரிண்டவுட் எடுக்கும்போது, அந்தக் கட்டடத்துக்கு எதிர்புறம் அம்மா பிரச்சாரம் பண்ண வராங்கன்னதும், எனக்கு முன்னாடி நின்ன நாலஞ்சு கட ஆளுங்கள எத்திட்டு, பாஞ்சு போய் ஒரு யு டர்ன் அடிச்சு, சுவத்தைப் பிடிச்சி பாலன்ஸ் பண்ணிய ஸ்டைலை பார்த்தப்புறம், அங்க எனக்குக் கெடச்ச மரியாதையே வேற, "மேடம் முதல்ல உங்க பைண்டிங்க முடிச்சுக்கங்க, மேடம் உங்க பிராஜெக்ட் காப்பி எப்படி இருக்குன்னு பாருங்கன்னு" ஒரே அன்புத் தொல்லை.இப்படிப்பட்ட நான் இங்க என்னா செஞ்சிருப்பேன்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் பண்ணல, யு சி அட் தட் டயம் மீ த மேரியிங் நெக்ஸ்ட் மந்த், சோ நோ அல்பை வேல வெளிப்படையா செஞ்சிங், ஓகே.


பெரிய மனுஷங்கள்லாம் குசலம் விசாரிச்சிக்கிட்டும், ஜாலியா பேசி சிரிச்சிக்கிட்டும் இருக்கும்போதே, நிகழ்ச்சியை நிர்வகிக்கிறவர் வந்தார். 'மாமா பிஸ்கோத்துன்னு' மட்டும்தான் கத்தலை, மத்தபடி அதேமாதிரி தான் எல்லாரும் வரிசைக்கட்டி நின்னோம். வழக்கம்போல இங்கயும் கடசியாத்தான் போய் நின்னேன். அங்கப்போய் பார்த்தா அவர் தன்னை பூச்சாண்டின்னு நம்ப வெக்க படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார்.


காலேஜ்ல கான்பரன்ஸ்(எங்களையும் உள்ள விடுற ரேஞ்சுல கூட்டம் இருக்கும்னா பாத்துக்கங்க), மீட்டிங்னு, சிம்போசியத்தைத் தவிர அத்தனைக்கும் எப்டி ஹெச்.ஒ.டி மாமாவ வெச்சு பூச்சு காட்டுவாங்க, அதேமாதிரி அங்கயும் புல்தடுக்கி மாமா, எங்கள எல்லாம் கூப்ட்டு, என்னமோ பிரியாணி பொட்லம் கொடுக்கப்போரா மாதிரி இறுமாப்போட, 'யாரும் மைக்க புடுங்காதீங்க, கருத்த சொல்ல விழுந்தடிச்சு, மிதிபடாதீங்க' அப்டி இப்டின்னு என்னமோ விவாதம் முடிஞ்சப்புறம் எங்க மூஞ்ச ரவுண்டு கட்டி, தாய் மண்ணே வணக்கம் போடப்போறா மாதிரியும், நாங்கெல்லாம் ஒப்பாரி வெக்க மதுரையில ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்துக்கிட்டு வந்திருக்க மாதிரியும், ஸ்ரீனிவாசன் ஜெயின் வாயப் பொத்தி அழ திருப்பூர்லருந்து டர்க்கி டவல் ஆர்டர் பண்ணி கோட் பாக்கெட்ல சொருகி விட்டா மாதிரியும் ஓவரா பில்டப் கொடுத்தார்.


நம் சமூகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தமிழ்நாட்டின் கருத்துக் காவலர்களான குஷ்பு, ஐயா(ஜயா இல்ல) தமிழ் 'குடி'தாங்கி அண்ட் கோவோட பொன்மொழிகளால் ஏற்பட்ட கலவரச் சூழலில், இம்மாதிரி ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நடத்திய விவாதத்துல கலந்துக்கிட்ட ஒரு காலேஜ் பிரெண்டின் வாக்குமூலத்தின் மூலம், இந்த மாதிரி விவாதத்துக்கு அவங்களே ஆள் டிரெயின் பண்ணி கூட்டி வந்து, அவங்களை மட்டுமே பேச விடுவாங்கன்னும், முக்காவாசி நேரம் நம்ம கைகிட்டக் கூட மைக்க கொடுக்க மாட்டாங்கன்னும் கேள்விபட்டிருந்ததால நானும் நிம்மதியா, அந்த மாமாவின் முக அமைப்பை தீவிரமா ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நிஜ கருத்துப் போலீசான எங்கக்காவை நெனச்சுத்தான் பாவமா இருந்துச்சி.


சரின்னு, அவர் எல்லாரையும் போய் உ , என்ன முழிக்கறீங்க, நிஜமாவே, அவரு இவ்ளோதான் சொன்னாரு, அதுக்குள்ள கேமரா கோணத்தை பாலுமகேந்த்ரா சார் கணக்கா கணிச்சு, அடுச்சி புடுச்சி ஆர்டர் பண்ண ஸ்பெஷல் ஐட்டங்கள் உக்காரதுக்குக் கூட இடம் விடாம, தமிழ் மரபை காக்கும் பொருட்டு, லேடீஸ் தனி, பல்ப்ஸ் தனின்னு லேன்ட் ஆகிட்டு, இன்னும் பார்க் ஆகாம தவிச்சுக்கிட்டிருந்த எங்க நாலு பேரை நக்கலா வேற ஒரு பார்வை பாக்கறாங்க. உடனே, ஐரோப்பாவின் மண்ணையும், அமெரிக்காவின் கழிவையும் அமுதமாகக் கருதும் அந்த புல்தடுக்கி மாமா, நம்ம சென்னையை பத்தி நக்கலா கமெண்டடிச்சுட்டு, எல்லாரும் கலந்துக் கட்டி உக்காருங்கன்னு சொன்னார்.


நான் ரெண்டாவது வரிசை இடது ஓரத்துல இருந்த சீட்டில் உக்கார வெக்கப்பட்டேன். எங்கக்காவ, அவளோட ராசிப்படி பர்ஸ்ட் ரோவில், ஸ்பெஷல் கெஸ்டான மைத்ரேயன் பக்கத்துல உக்கார வெச்சாங்க. விவாதம் ஆரம்பமாச்சு, நானும் வழக்கம்போல கற்பனாஉலகில் சஞ்சரிக்க ஆரம்பிச்சேன். அப்பப்போ மனசு, நம்மள இங்க நொந்திட்டாங்களே, டிவியில நம்மள காமிப்பாங்களா, அப்படின்னு அடிச்சிக்கிட்டே இருந்தது. ஆனாலும் எல்லாந்தெரிஞ்ச மேதாவி ஸ்மைல மட்டும் கொட்டோ கொட்டுன்னு தேளவிட ஜாஸ்தியா கொட்டிக்கிட்டு இருந்தேன். கீழ எங்கக்காவும், அவ பக்கத்துல உக்காத்திருந்த ஒரு பொண்ணும் தரையில் விடப்பட்ட மீனாட்டம் துடிச்சிக்கிட்டு இருந்தாங்க, அதாவது அவங்க கைல மைக்கக் கொடுக்கனுமாம். அதுக்குள்ள ஒரு சின்ன பிரேக் விட்டாங்க. ஒடனே நெறயப் பேர் தப தபதபன்னு கீழ ஓடினாங்க, என்னவாம்னா, ஸ்ரீனிவாசன் ஜெயின்கிட்ட அந்த ரெண்டு மூணு நிமிஷத்துல கலந்தாலோசிச்சி, அடுத்த பிரணாய் ராய் ஆகோனும்னு ஆலோசிக்கராங்களாமா.


நான் நம்ம உடன்பிறப்பு எங்கன்னு பார்த்தா, அப்பவும் தொடர்ந்து பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட ஏதோ தீவிர டிஸ்கஷன்ல இருந்தா, அடிப்பாவிகளா நீங்கல்லாம் எப்போதான் அறியாமை இருளிலிருந்து ஜெனெரேட்டர் வெளிச்சத்துக்கு வருவீங்கன்னு சிரிச்சிக்கிட்டேன். நாம எப்பவுமே ஒரு சின்ன ஸ்மைல் கொடுக்கறோம்னாலே நாலு நிமிஷத்துக்கு கொறையாம இருக்கும், சிரிச்சோம்னா எவ்வளவு நேரம் தாங்கும்னு நீங்களே யோசிங்க(இவ்ளோ பெரிய பதிவையே படிக்கறீங்க, இதச் செய்ய மாட்டீங்களா). சோ, அதுக்குள்ள பிரேக் முடிஞ்சு நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்சிது. அந்த பிரேக் முடிஞ்சு ஆரம்பிச்சப்போ என் சிரிச்ச மூஞ்சுக்கு ஒரு டைட் க்ளோசப் வேற வெச்சாங்களாம்(அப்போன்னு டிவி பார்த்து ஜன்னி கண்ட குழந்தைகளின் தாய்மார்கள் கொடுத்த கண்ணீர் பேட்டியிலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன்)


மறுபடியும் நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்ச ரெண்டு நிமிசத்துக்குள்ள துள்ளித் திரியும் காலம்(மைக்குக்காக) ஆரம்பிச்சுது, நான் பாட்டுக்கு பிசியா, கார்த்தி டை அடிக்கறாரா, விழ ஆரம்பிச்சிருக்க நடுமண்டை சொட்டையை எப்படி எதிர்காலத்துல மறைப்பார்ங்கற முக்கிய பிரச்சினை சம்பந்தமா தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்கும்போது, யாரோ என்னை இடிக்கிறா மாதிரி இருந்துச்சி, யாருடா அது, கேமரா முன்னாலயே வேலையக் காமிக்கர ஆள்னு, புதுமைப்பெண் படத்துல, 'ஒரு தென்றல் புயலாகி வருமோன்னு', ரேவதி சூப்பரா காமடி பண்ணுவாங்களே, அப்படி பாக்கறேன், இடிச்சது மைக். எனக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்ல(டிவியில ஒரு முழு நிமிஷம்னா யோசிச்சுக்கங்க), ஏன் என்கிட்டப் போய் இதை கொடுக்கறாங்கன்னு. அப்புறம் சுதாகரிச்சு, புடிங்கி பின்னால கொடுக்கறதுக்குள்ள கொஞ்சம் பதட்டமே ஆகிடுச்சுன்னா பாருங்களேன். 'டோமர் பாய், என்கிட்டே என்ன வெள்ளாட்டு சின்னப்புள்ளத் தனமான்னு' நிமிர்ந்து பார்த்தா, ஸ்ரீனிவாசன் ஜெயின் முறைக்கறார். அதுக்குள்ள அடுத்த பிரேக். எல்லாரும் என்னைய திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு குசுகுசுன்னு பேச்சு வேற. அப்பவும் எங்கக்கா வளரும் நாடுகளின் விவசாயப் பிரச்சினைய டிஸ்கஸ் பண்ற மாதிரியே சீன் போட்டுக்கிட்டு இருந்தா. சரி வளர்த்த கடாவோட அம்மாதானேன்னு விட்டுட்டேன்(எங்கக்கா பையனை நானும் வளர்த்தேனாக்கும்) .


திரும்ப விவாதம் ஆரம்பிச்சது, எல்லா வி.ஐ.பி பனியன் வேஷ்டிகளும், சுடிதார், புடவைகளும் பேசி முடிச்சாச்சி. மறுக்கா சாதா ஆளுங்கக் கைல மைக் வந்துச்சி, ஒரு மாமி மூணாவது வரிசையில மைக்குக்காக அந்த குதி குதிக்கறாங்க, கீழே டைரெக்டரம்மா சாமியாடாத குறைதான். எங்கக்கா, அவ பக்கத்துல இருக்கிற எம்.ஒ.பி பொண்ணு இப்டி மைக்குக்காக அங்க ஒரு ஜனத்திரளே அல்லோலகல்லோலப் பட்டுக்கிட்டு இருக்குது, ஆனா பாருங்க, எல்லாரையும் விட்டுட்டு, என்னமோ பூர்வ ஜென்ம பந்தம் மாதிரி, என்கிட்டயே மைக் வந்துச்சி. 'யோவ் நீங்கல்லாம் என்னத்தப் பத்தி இப்போ பேசிக்கிட்டு இருகீங்கன்னே எனக்கு தெரியாது, என்னைய ஏன்யா ரப்ச்சர் பண்றீங்கன்னு' கத்தனும்போல இருந்தாலும், அங்க இருந்தவங்க பார்வையெல்லாம் சரியில்லாததால கம்முன்னு அதை பாஸ் பண்ணிட்டேன். அப்போ மட்டும் எனக்கு அந்த பிரெண்ட் கைல கெடச்சிருந்தா உயிரைக்கொடுத்தாவது, விஜயகாந்த் படத்துல கதாநாயகி வேஷம் வாங்கிக் கொடுத்திருப்பேன்.


ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சது, இந்த பின்னங்கால் பிடரியில் பட ஓடறதும்பாங்களே, அப்படில்லாம் நான் எப்பவுமே செய்ய மாட்டேன். இப்போ என்னாச்சு, வீரத் திருமகளின் சரித்திரத்தில் மற்றுமொரு விழுப்புண், அப்படின்னு தொடச்சி விட்டுட்டு எங்கக்காவோட வீட்டுக்கு வந்துட்டேன். போறவழியெல்லாம் ஒரே விசாரிப்பு, பொதுமக்கள் கிட்டருந்து இல்ல, பிரெண்ட்ஸ்கிட்ட இருந்து. சும்மா சொல்லக்கூடாது, நல்லா வகதொக இல்லாம காரி காரி துப்புறாங்க. இந்த வீணாப்போன கேமராமேன நான் என்னவோ பயங்கரமா மயக்கி எக்கச்சக்க க்ளோசப் ஷாட்ஸ் வாங்கிட்டேன்னேல்லாம், 'சேர்த்து வெச்சி அபாண்டமா பேசுவது எப்படிங்கற' புக்குக்கு, வாயாலேயே விளக்க உரை எழுதுனாங்க. அப்போ புரோகிராம் பாக்காத, ரெண்டு மூணு குரங்குங்கக் கூட விஷயத்தை கேள்விப்பட்டு, சந்துல சிந்து பாடுதுங்க(அதை எப்டி கண்டுபுடிச்சேன்னா, நான் போட்டுக்கிட்டு போன சல்வார் கமீஸ் மஞ்சள்&ஒயிட் காம்பினேஷன், இதுங்க என்னோட பேவரிட் காம்பிநேஷனான எங்கக் கட்சிக் கொடி காம்பினேஷன்ல தான் போட்டுக்கிட்டு போயிருப்பேன்னு நெனச்சு, ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு, டிரஸ்ஸப் பத்தி உளறி மாட்டிக்கிட்டாங்க, நாம யாரு, ஜெய்சங்கர் படமாப் பார்த்து வளர்ந்த ரிவால்வர் ரீட்டாவாச்சே)


வீட்டுக்குப் போனா, என்னமோ நான் பிக்பாக்கெட் அடிச்சி மாட்டிக்கிட்டா மாதிரியும், அதப்பத்தி பேசி எம்பாரஸ் பண்ண விரும்பாதவங்க மாதிரியும் திரிஞ்சாங்க. சரின்னு சமாதானப்படுத்தி திட்டச்சொன்னா, முதல்ல கொஞ்சம் சுமார்தான்னாலும், அப்புறம் பிக்கப் ஆகிடுச்சி, நானும் ஸ்டார்ட் மீசிக்னு தாலாட்டை ரசிக்க ஆரம்பிச்சேன்.


இதுல என்ன சோகமான விஷயம்னா, இதை மறுஒளிபரப்பு செஞ்ச ரெண்டு தரமும் கரண்ட் மாமா விரும்பி விளையாடும் கரண்ட் கட் மற்றும் கேபிள் மாமா விரும்பி விளையாடும் ஜாலி கட் போன்ற விளையாட்டுகளின் காரணமாக என் முகத்த என்டிடிவியில பாக்கற கொடுப்பனை கூட எனக்கு இல்லாமப் போய்டுச்சி.

Thursday 2 October, 2008

மீ த பர்ஸ்ட்

எல்லோருக்கும் வணக்கம். நான் வலைப்பூக்களில் முதல் முதலில் படிக்க ஆரம்பிச்சது, டுபுக்கு அண்ணாவோட பதிவுதான். மென்மையாக என்னை இழுத்துச் சென்ற நகைச்சுவை ப்ளஸ் நாஸ்டால்ஜியா ஒரே நாளில் அவரோட வலைப்பூவை முழுவதுமாக படிக்க வைத்தது. அவரோட பதிவுகள் படிச்சப்புறம் அதில் வந்த பின்னூட்டங்களை பார்த்து, அழகான கிண்டலோட இருந்த அம்பி அண்ணாவோட பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். எதையுமே ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கிட்டு ரொம்ப ஜாலியா டீல் பண்ணுகிற இவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிது. இவங்க ரெண்டு பேரோட வலைப்பூவும் ரொம்பப் பிடிச்சுப் போய் ஒரு நாளைக்கு எக்கச்சக்க தடவை இவங்களோட தளத்திற்கு சென்று புதுப் பதிவு போட்டிருக்காங்களான்னு பார்ப்பேன்.

அப்புறம் இவர்களோட சில பதிவுகளில் இருந்து வவா சங்கம் பத்தி தெரிஞ்சு அங்கே போய் பார்த்தப்போ வெட்டிப்பயல் அவர்களோட பதிவுகள் ரொம்ப கலக்கலா இருந்தது. அவரோட பெரும்பான்மையான பதிவுகள் படிச்சிருக்கேன். சரி, இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வேறெங்காவது மொத்தமா திரட்டுராங்களான்னு வலையில் தேடினப்போ தமிழ்மணம் பார்த்தேன். அங்கேப் போய் வெறும் நகைச்சுவைப் பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். முதலில் படிச்சது அபி அப்பா வலைப்பூ.

இவங்க எல்லாருமே ஜாலியா கல கலன்னு எழுதிக்கிட்டு இருந்தாங்க. அப்போதான் அம்பி அண்ணாவோட மெயில் ஐடி இருக்கறது பார்த்தேன். தப்பா எதாவது எழுதிடுவேனோங்கர பயத்தோட என்ன எழுதினேன்னு எனக்கே தெரியாத(அதாவது வழக்கம்போல) ஒரு மெயில் அனுப்பினேன். ஆனா ஒரு பத்து நிமிஷத்திலேயே அவர்கிட்டயிருந்து மெயில். அப்புறம் அவர்கிட்ட கேட்டு டுபுக்கண்ணா, அபி அப்பா ஐடி வாங்கினேன்.

என்னோட சிலப் பதிவுகள் நூறு பின்னூட்டங்களுக்கு மேல வாங்கியிருக்கு, சிலப்பேர் என்கிட்டே, அவ்ளோ பெரிய ஆள், அவருக்கு ஏன் இத்தனை பின்னூட்டம் வரலை, இவ்ளோ நல்ல பதிவு நான் இன்னைக்கு போட்டிருக்கேன், இன்னைக்கு எனக்கு இத்தனை பின்னூட்டம் தான் வந்துச்சின்னு கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் என்னன்னா, நான் பதிவு போட்டவுடன் செய்ற முதல் வேலை, மேலேக் குறிப்பிட்டுள்ள பதிவர்களுக்கு மட்டுமல்லாது, என் பதிவில் வந்து கலகலப்பான, கிண்டலான பின்னூட்டங்கள் இடும் அத்துனை பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" என்ற டயலாக்கை போட்டுவிட்டு வருவேன். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் பின்னூட்டம் வேண்டும் என்ற காரணத்தால் செய்தாலும், பின்னர் அவர்கள் பின்னூட்டம் போடாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, சும்மா படித்தால் கூட போதும் என்ற அளவிலே இதனை தொடர்ந்தேன். இது என்னோட பழக்கம்.

என் பிறந்தநாள் நெருக்கத்தில், என் பிரெண்ட்ஸ் மட்டும் என்றில்லாமல், எனக்குத் தெரிஞ்ச அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியோ, போன் செய்தோ, மெயில் அனுப்பியோ என்னை வாழ்த்தச் சொல்லி கேட்பேன், என் பெற்றோர்,அக்கா, கணவர் உட்பட எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பேன். இன்னும் கணவர் கிட்ட "என் பிறந்தநாள் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, எனக்கு இது வேணும், அது வேணும் அப்படி இப்படின்னு, கவுண்ட்டவுன் கொடுத்துக்கிட்டே இருப்பேன்".
பறக்காவெட்டித்தனமாக இருந்தாலும், அது என் இயல்பு. நான் மறந்துபோகும்போது எனக்கு ஒரு மாதிரி கில்டியாக இருக்கும், ப்ளஸ் எனக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற ரொம்பப் பிடிக்கும். இதை வைத்து என் பிரெண்ட்ஸ் கலாய்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். வெகு சிலர் இதனை விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்களுக்கு நான் தொல்லை கொடுப்பதில்லை.

அதேப் போல நான் 'மீ த பர்ஸ்ட்' போட ஆரம்பித்தது சும்மா ஜாலிக்காகத்தான். யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்ல. ஆரம்பத்தில் அப்துல்லா அண்ணா மற்றும் ச்சின்னப்பையன் பதிவுகளுக்கு மட்டும் போட முயற்சித்து வந்தேன், அதன் பின்னர், நகைச்சுவைப் பதிவுகள் எழுதும் பலரின் பதிவுகளில் போட ஆரம்பித்தேன். பலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.

நான் எழுதும்போது பேச்சுவழக்கில் எழுதிவிடுகிறேன், அதனால் பலருக்கு வேறொரு அர்த்தத்தில் படலாம். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. நான் எழுதுவது தவறாக தோன்றும்படி இருக்கலாம், காரணம் நான் என் எழுத்தில் உணர்ச்சிகளை கொட்டி எழுதும் திறன் படைத்தவள் இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாமே பேச்சு வழக்கிலே இருக்கும், பின்னூட்டங்களும் அவ்வாறே இருக்கும். என் பின்னூட்டங்கள் மற்றும் அதன் தொனி பிடிக்கவில்லை என்றால், அதனை இக்னோர் செய்திடுங்கள், நான் புரிந்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதை உங்கள் பதிவுகளில் தவிர்த்துவிடுகிறேன்.

நான் இதனை தேவையில்லா இடைவெளியை குறைத்துக் கொள்ளலாம் என்றுதான் பதிவிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:):):)

டிஸ்கி: நண்பர்களே, உடனே தீபாவளி நாளைக்குங்கற மாதிரி கொண்டாட்டமா ஓட வேண்டாம், அடுத்த பதிவில் இருந்து "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" டயலாக் புயலெனக் கிளம்பி வந்து உங்களை தாக்கும். இந்த டயலாக் பார்த்து வந்து தவறாம படிங்க, பட், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு அவசியமே இல்லை, ஓகே:):):)

கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்தி அவர்கள் என் பதிவுகளில் நார்மலான பின்னூட்டங்கள் இடுமாறு நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது:):):)