Monday 2 November, 2009

ஒரு ரம்பமே பிளேடு போடுகிறதே!

தொடருக்கு அழைத்த தீபாவுக்கு நன்றி. எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் சுருக்கமா வியாக்யானம் இல்லாம விடை சொல்றது. என்னால விருப்பமானவங்கள்ள ஒன்னே ஒண்ணுன்னு சொல்ல முடில.வழக்கம்போல பொறுத்தருள்க.


1. அரசியல் தலைவர்:
பிடித்தவர்: திருமா
பிடிக்காதவர்: இராமதாஸ்

2. எழுத்தாளர்:
பிடித்தவர்: (எனக்குப் படிக்க கிடைத்த அளவில்) எஸ்.இராமகிருஷ்ணன்.
பிடிக்காதவர்: இதற்கு பதில் சொல்ற அளவுக்கு படிச்சதில்லை.

3. கவிஞர்:
பிடித்தவர்: என் பெற்றோர் (இப்டி ஒரு தெய்வீகக் கவிதயப் படைச்சதுக்காக).
பிடிக்காதவர்: வி.ஜி.சந்தோஷம்(எனக்கு சரியானப் போட்டி).

4. இயக்குனர்:
பிடித்தவர்: பரீட்சை டொயத்துல கே.எஸ்.இரவிக்குமார், கொழுப்பெடுத்து திரியும்போது   பாலுமகேந்திரா, பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ அப்டின்னா வெங்கட் பிரபு.
பிடிக்காதவர்: மணிரத்தினம் .

5. நடிகர்:
பிடித்தவர்: வி.கே.இராமசாமி, எம்.ஆர.இராதா, கவுண்டமணி.
பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன்.

6. நடிகை:
பிடித்தவர்: காஞ்சனா, அசின், நதியா.
பிடிக்காதவர்: இராஜஸ்ரீ.

7 . இசையமைப்பாளர்:
பிடித்தவர்: சூலமங்கலம் இராஜலக்ஷ்மி, இளையராஜா.
பிடிக்காதவர்: ஆதித்யன், இன்றைய டி.ஆர்.

8. பாடகர்:
பிடித்தவர்: ஏ.எம்.இராஜா.
பிடிக்காதவர்: ஹரிஹரன்.

9. பாடகி:
பிடித்தவர்: பி.சுசீலா, எல்.ஆர.ஈஸ்வரி.
பிடிக்காதவர்: சித்ரா

10. விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சாந்தி.
பிடிக்காதவர்: தமிழ்நாட்டில் அப்படி யாரும் இல்லை.


கீழே அழைத்துள்ளவர்களில் தொடர விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

முத்துலெட்சுமி கயல்விழி
அவீங்க ராசா
சுரேஷ் பழனியிலிருந்து
இராமலக்ஷ்மி

Tuesday 14 July, 2009

நான் கூட விருது வாங்கிட்டேன்.


இந்த விருது கொடுத்த முல்லைக்கு ரொம்ப ரொம்ப நன்றி:):):)

நான் கொடுக்கப் போற மொதல் விருது முத்துவுக்கு. இவங்களோட போஸ்ட்ல நான் மொதல்ல படிச்சது 'சாட்ட சாட்ட'தான். நம்ம வீட்ல நடக்குற விஷயமாத்தான் இருக்கும். ஆனா, நாம சரியா நோட் பண்ணிருக்க மாட்டோம். அதயெல்லாம் சும்மா சூப்பரா போட்டிருவாங்க. பெருசா மெனக்கெடாம, சிம்பிளா அப்டியே சொல்ல வந்தத சொல்லிட்டு போவாங்க. வர வர புதுக் காமிரா வாங்குனதுலருந்து, இந்தப் போட்டோங்களப் போட்டு ஓவரா சீன் காமிக்கறாங்க. நான் அதப் புடிங்கி பாலு மகேந்திரா எபெக்ட்ல நாலு படம் எடுத்தா சரியாகிடும்.

அம்பி அண்ணன். ஹி ஹி, இப்போல்லாம் இவர பதிவு எழுத வெக்குறதுன்னா விருதெல்லாம் கொடுக்கணும் போலருக்கு. அப்பப்போ வந்து ஜம்புக் கதைகள எடுத்துவிட்டா நல்லாருக்கும். இல்லைன்னா அட்லீஸ்ட் ஒரு கோபிகா போஸ்டாவது போட்டு தாக்கனும். ஆஹா ஆஹா, அது ஒரு அழகிய கனாக்காலம்.

டுபுக்கு அண்ணன். ஒரே நாள்ல இவரோட மொத்தப் பதிவுகளும் படிச்சிருக்கேன். வீணாப் போனவங்க, அது இதுன்னு வெளங்காத கணக்கஎல்லாம் வெச்சு பரீட்சைல காண்டாக்குறத்துக்கு பதில், இவரு பதிவுகள வெச்சு, கேள்விக் கேட்டா, நான் சூர்யவம்சம் தேவயானி கணக்கா கலெக்டராகி, பிளயிட் டிக்கட் கொடுத்து, மாமனார இந்தியா வரவெச்சு, பேப்பர் வெயிட்ட அவர் கால்ல தூக்கி போட்டு, அத எடுக்குறாப்டி காலத் தொட்டுக் கும்பிட்டு, பெருவெரல முறுக்கி, பிராக்ச்சராக்கிடுவேன். எங்க நம்ம நாடு முன்னேறுறது.

சென்ஷி அண்ணன். இவரு ஏதோ இந்த பின்நவீனத்துவ அறிவுஜீவி ஆளுன்னு ரொம்ப நாளா நெனச்சிட்டிருந்தேன். பாத்தா பின்னூட்டத்துல வேற எபெக்ட் காட்டுகிறார், அம்பி அந்நியனாட்டம். மீரா ஜாஸ்மின் போஸ்ட் பாத்தாலே தெரியுமே. ஆயில்ஸ் ஊர்ல இருந்து வந்தவுடன், சீக்கிரம் எல்லாரும் சேர்ந்து அப்டி ஒன்னு போடனும்னு நேயர் விருப்பம். இவரு முப்பத்திரண்டுக் கேள்விக்கு தான் பதில் சொன்னத விட, கோபிண்ணனுக்கு கோபியன்ணன் கணக்கா பதில் போட்டு கலக்கலா கலாய்ச்சத போல எக்கச்சக்கமா எதிர்பாக்கறோம்.

கானாஸ். இவரையும் ரொம்ப நாளா வெறும் பாட்டுக்கள் சம்பந்தமான இடுகைகள் மட்டும்தான் போடுவாருன்னு நெனச்சிருந்தேன். எனக்கு ஏன் இப்டி ஒரு வினோத காமாலக் கண்ணுன்னு தெர்ல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ அப்புறம் இவரோட கம்போடியா டிரிப் பத்தினப் பதிவுகள்தான் எனக்கு பர்ஸ்ட் தெரிஞ்சது(யாரும் துப்பாதீங்கப்பா என்னைய). இவரு சோக்கா ஒரு போட்டோ போட்டிருக்காரே அழகிகளோட, அதுலப் பாத்தா நம்ம சந்தானம் மாதிரி இல்ல, கி கி கி.

நான் ஆதவன். இவரோட பின்னூட்டங்களால தான் பர்ஸ்ட் பர்ஸ்ட் இவரு வலைப்பூக்கு போக ஆரம்பிச்சேன். பஞ்ஜி ஜம்பிங்க்ள பெங்களூர்ல ஒரு விபத்து நடந்தப்போக் கரெக்டா இவரோட அந்த இடுகயப் பாத்து பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆகிட்டேன். எந்தப் பதிவுலையும் இவரோட பின்னூட்டங்கள் செம ஜாலி. ஏசி ரூம்ல இருந்து, நெறயப் பதிவு எழுதி, கையையும் சேர்த்து வெத்தல சாராட்டம் செவக்க வெச்சிக்கணும்னு இந்த விருதக் கொடுக்கிறேன்.

Tuesday 30 June, 2009

வாரா வாரா பூச்சாண்டி

பல நாட்கள் உங்க பிளாகுக்கு வரலாம்னு நினைப்போம், ஆனா எங்க நீங்க புது இடுகை போட்டு, ஆந்தராக்ஸ் கணக்கா தாக்கோ தாக்குன்னு தாக்கிடுவீங்களோன்னுதான் வர்றதில்லைன்னு நேர்மையா ஒத்துக்குற நல்லவங்களும், பெரும்பான்மயானவங்களும் இனி ஒரு மாசத்துக்கு தங்கு தடையே இல்லாம இந்த பிளாகுக்கு வரலாம்.


ஏன்னா, இந்த மாசம் நான் இந்தக் கடையில் டோபாஸ் விக்கப்போறேனாக்கும்.

சிறுபான்மையினரான, பின்னூட்ட கயமையைத் தவறாமல் நிறைவேற்றும் பெரிய மனசுக்காரர்களும் அங்க வந்து, என்னைய மாதிரியே கடமைய எருமை கணக்கா, ஆத்தலாம்.

ஒன்னுமே இல்லாத இந்த இடுகைலக் கூட, பெரும்பான்மையினர் சிறுபான்மையினர்னு பேசி, என்னைய மாதிரியே பேமசாக லோலோலோன்னு அலையறவங்களும் அங்க வரலாம்.

மேற்படி வாய்ப்பளித்த நிர்வாகிகளுக்கு ஆட்டோ அனுப்ப துடிப்பவர்கள் முதற்கொண்டு அனைவரும் வந்து காண்டாவ கேட்டுக்கொள்கிறேன்.

Thursday 25 June, 2009

கேசட் கால தல

இசையின் ஒவ்வொரு பரிமாணத்திற்கும், ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் சிலப் பல 'தல'கள் இருந்தாலும், கேசட்களின் கடைசி கட்டத்தில் உலகை(அட்லீஸ்ட் எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு), கட்டிப்போட்டவர்.

எங்கக்கால்லாம் அப்டியே செம பேன்ஸ். அவங்க செட்டோடல்லாம் சுத்தறத்துக்காகவே இப்டி பல வித இசை கலைஞர்களின் இசையை கேக்க ஆரம்பிச்சு நமக்கும் புடுச்சுப் போச்சு.

நாங்கெல்லாம் பாப் ம்யூசிக்கை வெச்சு அபீஷியலா டார்ச்சர் கெளப்பக்கூடிய காலக்கட்டம் வரப்போ, அது சிடிக்களின் காலக்கட்டம். ஜாக்சன் கிரேஸ் பயங்கரமா கம்மியான காலக்கட்டம்.

எங்கக்காவ அப்போல்லாம் பயங்கரமா பழிவாங்கறதுண்டு, சின்ன சண்ட போட்டாக் கூட. ஒருத்தங்கள செம எரிச்சல் படுத்தனும்னா அவங்க சாப்பாடு, புக்ஸ் இல்லைன்னா இசை கலெக்ஷன்ல கை வெச்சா போதும்ங்கற உன்னத அறிவு அப்போவே வந்தாச்சு. அதால, அவங்க வாங்கி வெச்சிருக்க லேட்டஸ்ட் கேசட்சை எடுத்து, அதுல கண்றாவியான எதையாவது பாடி வெக்கிறது, இல்லை அம்மாப்பா கிட்ட போயிடும்னு பயமிருந்தா, அன்னைக்கு பாட்டு வாத்தியார் சொல்லிக் கொடுத்த ஒரு டப்பா பாட்டை, எவ்ளோவுக்கெவ்வளவு கர்ண கொடூரமா கத்த முடியுமோ அப்டி கத்தி அந்த கேசட் முழுக்க ரெக்கார்ட் பண்ணி சைலண்டா வெச்சிடறது.

அதுக்கப்புறம் நடக்கறத சொல்லித்தான் தெரியனுமா என்ன? இப்டி பண்ணி ஒரு தீவிரவாதி ரேஞ்சுக்கு சொந்தக்கார பசங்க மத்தியிலும் புகழ் பரவி, எக்கச்சக்க நட்புகள் கெடச்சிது.

இந்த பாட்டு நான் மறக்கவே முடியாது. இது இருந்த கேசட்டை நான் 'யசோத நந்த கோபாலனே' பாடி அழிச்சிட்டு, சும்மா ஜம்முன்னு உக்காந்த ஞாபகம் வருது. அப்போ இந்த பாட்டிற்கு இருந்த பக்தர்களுக்குத் தெரியும் நான் செஞ்சது எவ்ளோ கொடூரம்னு.





அது ஒரு அழகிய நிலாக்காலம்!!!!!!!!!!

என்னுடைய இனிமையான குழந்தைப் பருவ நினைவுகளுக்கு உதவியது அவரின் இசை, அடுத்த பிறவியிலாவது அவருக்கும் ஒரு இனிமையான குழந்தைப் பருவம் அமைய வேண்டுமென ஆசை.

இவர் தோன்றுவதற்கு முன்பே ஆலமரமாகி உச்சபட்ச வெற்றியை ஈட்டிய ஆப்பிரிக்க அமெரிக்க பாப் ம்யூசிக் இசைக்கு, இவர் காலக்கட்டங்களில் ஒரு பெரிய எதிர்ப்பு இயக்கமே நடந்துச்சி, மாற்று இசைக் கலைஞர்களால், அப்டின்னு கேள்விப்பட்டிருக்கேன்(உண்மை இல்லைன்னா, சுட்டினால் திருத்திவிடுகிறேன்).
அனைத்தையும் தாண்டி இவர் வந்தது நல்ல விஷயம்.

என்னளவில் என்னுடைய ஆல்டைம் பேவரிட்ஸ் இவை மூன்றும்.





இது போனஸ்.

Monday 8 June, 2009

ரிலே ரேஸ்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எதையும் உருப்படியா செய்யாம, தொணதொணன்னு கருத்து சொல்லிட்டு திரியறவங்க என்னைப் பொறுத்தவரை வெட்டியாப்பீசர். பிரான்ஸ் வந்தப்புறம் எதையும் ஆக்கப்பூர்வமா செஞ்சதா நெனப்பில்ல, அதால இந்தப் பேர் வெச்சிக்கிட்டேன்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?


ரொம்ப போரடிச்சாக் கூட, சும்மாதான இருக்கோம், எதுக்கும் எதையாச்சும் நெனச்சு அழுது வெப்போம், பின்னாடி உபயோகப்படும்னு யோசிச்சு அழுதுவெ க்கிற ஆள் நானு
. கோவம் வந்தாலும் அழுக தான், சந்தோஷம்னாலும் அழுகைதான். அதால அதுக்கு கணக்கெல்லாம் கெடயாது. என் அழுகைக்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுக்கறதில்ல.
தோ, இவ்ளோ பெரிய திராபயெல்லாம் படிச்சு மண்டக்காயப் போறீங்களேன்னு நெனச்சுக் கூட அழுக வருது. அதுக்கென்ன பண்றது?

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என் கையெழுத்துன்னா எனக்கு அவ்ளோ இஷ்டம். பின்ன வேறெதிலுமில்லாத வசதி இதில் இருக்கே. நாம பரீட்சையில கேவலமான மார்க் வாங்கினாலும், நான் சூப்பராத்தான் எழுதினேன், கையெழுத்து புரியாம ஏதோ கரெக்ட் பண்ணிருக்காங்கன்னு தாளிக்கலாம்.(பல சமயம் நமக்கு முன்னையே , மத்தவங்க பேத்தறத்துக்கும் வாய்ப்புண்டு). சீனியர்ஸ் சப்பத்தனமா, ரிக்கார்ட் எழுதுங்கறதஎல்லாம் ராகிங்குன்னு நெனச்சு கொடுத்தா, அதை எழுதி கொடுத்து, நாம பதிலுக்கு அவங்கள ரேக் பண்ணலாம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

பசிச்சு சாப்டா என் சமையல் கூட புடிக்கும்.
ருசிக்குன்னு பாத்தா, எங்கம்மா & பெரியம்மா சமையல்ல மட்டன் மீன் தவிர்த்து எல்லாமேப் பிடிக்கும். தென்னிந்திய மதிய உணவுகள் அத்தனையும் பிடிக்கும்.
குஸ்கா+தயிர் பச்சடி, வெஜிடபுள் புலாவ்+தென்னிந்திய சிக்கன் கிரேவி, தாளிச்ச தயிர் சாதம்+கத்தரிக்கா கொத்சு, வெண்டைக்காய் மோர்குழம்பு+ உருளைக்கிழங்கு பிரை, தக்காளி சாதம்+ தயிர் வடை, லெமன் ரைஸ்+வாழைக்காய் வறுவல், வத்தக்குழம்பு/காரக்குழம்பு+காய்கறிக் கூட்டு/முட்டை பிரை, பெஸ்டோ, சிக்கன் பிரை+பிரென்ச் பிரை, confit de canard+ mashed potato(ஒரு வகையான வாத்து ரோஸ்ட்+மேஷ்ட் பொட்டேட்டோ).

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

ரிவால்வர் ரீட்டாவாட்டம், இந்தக் கேள்விய கண்டுபுடிச்சி மறுபடி கொண்டாந்த சந்தனமுல்லைக்கு என் கண்டனங்களை தீவிரமா பதிஞ்சிக்கிறேன். பாதாள பைரவில, என்டிஆர், எம்.கே.நாராயணன் புத்திய மாதிரி கொடூரமா, தமிழ்ல 'உள்தைச் சொல்வா, இல்லி உண்மைய இலியென்று சொலவா'ன்னு கேக்குறாப்டி, நாங்களும் பதில் கேள்விதான் கேக்கணும்.
அதோட, நான் இன்னொருத்தரா கற்பனைப் பண்ணனும்னா, அப்டியே குணநலன்களையும் கொடுத்திருக்கணும். நட்பு நண்பர்கள் எல்லாமே குணநலன்களை வெச்சுத்தான வருது.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்கிறது எனக்கு அடிக்ஷன் மாதிரி. கடல்ல குளிக்க புடிக்கும்னாலும், அருவி மாதிரி வருமா.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

எதிராளிய எங்கருந்து பாக்குறது. அவங்க நம்மை கவனிப்பாங்களேன்னு அப்பவும் என்னைச் சுத்திதான் நெனப்பு ஓடும். மீறி, பராக்குப் பாக்குறதுன்னா, டிரெஸ், ஆக்சசரீஸ் புடிக்கும். வினோதமா, யாராச்சும் உக்காந்திருந்தா, அவங்க எப்டி காலாட்றாங்கன்னு பாக்குற பழக்கம் காலேஜ்ல பசங்க சொன்ன 'ஜோசியத்தால' தொத்திக்கிச்சி.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : ஒரு லிமிட் தாண்டி சும்மா எதையும் பிடிச்சு தொங்கிட்டிருக்க மாட்டேன், முடியாப் போச்சுன்னு வேலயப்பாத்துக்கிட்டு போய்ட்டே இருப்பேன்.
பிடிக்காத விஷயம் : வாய் ஓயாம பேசிட்டே இருப்பேன். நிஜமாவே எனக்கு வாயெல்லாம் வலிக்கும் சில சமயம். இங்கயே பாருங்க, ஒரு கேள்விக்கு ஒம்போது பதில். நாம பேசறதாட்டம்தான எழுதறதும்.

போரடிக்குதுன்னோ, பிடிக்கலைன்னோ இல்ல வேற காரணத்துக்காகவோ யாரையும் அவாய்ட் பண்ண வராது. அப்டி, நோ நான்சென்ஸ் ஆடிட்யூட் இருக்கவங்களை பாத்து ஏங்கறதுதான் மிச்சம்.

9.
உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது : பிடிக்காதுன்னு சொல்லிருக்க ஒன்னைத் தவிர மத்ததெல்லாம் பிடிக்கும்.
பிடிக்காத விஷயம் : என்னவானாலும் நெகடிவா பேச மாட்டேன்னு அடம் பிடிக்கிறது. உதாரணத்துக்கு, இன்னைக்கு சாலட் சாப்ட மூடிருக்கான்னு கேட்டா, ஆமா/இல்லைன்னு சொல்லாம, நேத்தைக்கு சாலட் சாப்டற மூட் இருந்துதுன்னு, சுத்திவளைச்சு பதில் சொல்லி, நூதனமா மண்டக்காயவெக்கிறது.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா அப்பா. எங்கம்மாகிட்ட நாலஞ்சு நாள் பேசலைன்னா எனக்கு வெறி புடிச்சிடும்(நார்மலா இருக்கப்பவே இப்டின்னா, பாத்துக்கங்க).

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

பிங்க் கலர்.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்போ பாட்டு கேக்கலை, படம் ஓடுது. வானம்பாடி

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

அது எழுதப்படப்போற தாளை பொறுத்தது. வெள்ளை வகையறா தாள்னா, கறுப்புக் கலர்ல, அதுவே டார்க் கலர் ஷீட்னா, அதுக்கேத்த கலர்ல.

14.பிடித்த மணம்?

பன்னீர் ரோஜா, நித்திய மல்லி, சாதா மல்லி, எலுமிச்சை வாசனை. என்னால கொஞ்சூண்டு ஸ்ட்ராங் வாசனைன்னாக் கூட தாங்க முடியாது, மயக்கம் வந்திடும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அம்பி அண்ணன். இவருக்கு இந்தத் தொடர் பதிவுன்னா, காண்டாவும். அதால பதில்கள் ஜாலியா இருக்கும். அதோட, அண்ணி பத்தி புடிக்காத விஷயம்னு என்ன சொல்வார்னும் பாக்க ஆசை:):):)

இவர்கிட்ட புடிச்ச விஷயம் ஜாலியா எழுதுவார், ஜாலியா பேசுவார்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

முல்லையோட பதிவில் எனக்குப் பிடிக்காதுன்னு ஒண்ணுமே இல்லை. சூப்பரா இருக்கும். நச்சுன்னு பாயிண்டுக்கு வந்திடுவாங்க. அவங்களோட, பேரிச்சம்பழம் பதிவைச் சொல்வதா, கலர் டிவி பதிவைச் சொல்றதா, இல்லை, மொதமொதல்ல என்னை பயங்கரமா ஈர்த்த அவங்களோட bally sagoo பதிவை சொல்றதா, இல்லை, ஈனா மீனா ஐக்கசா பதிவை சொல்றதா? இவங்க நாஸ்டால்ஜியா பதிவு ஒன்னொன்னும் எனக்கு மனப்பாடம். இசை ரசனைல இவங்க எனக்கு பிடிச்சவங்க.

17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு தரம் விளையாட்டு தொடர் அழைச்சப்போ கூட மண்டயக் கசக்கி, சும்மா டூப் விடலாம்னாக் கூட முடியாதளவுக்கு இருந்திச்சி.

பாக்கறதுன்னா ஒன் டே மேட்ச் கிரிக்கெட்ல ரொம்ப பிடிக்கும். கபடி ரொம்பப் பிடிக்கும். ஹாக்கி ரொம்ப பிடிக்கும்:):):)(ஹி ஹி ஹி, சென்னை 28, கில்லி, சக் தே இந்தியா படங்கள் நியாபகம் வர வேண்டாம், எனக்கு நெஜமாவே இதெல்லாம் புடிக்கும்:):):))

18.கண்ணாடி அணிபவரா?
பவர் கண்ணாடி கெடயாது. ஆனா சீன் போடனும்னா டிசைனர் சன்கிளாஸ் போட்டுட்டு சுத்தறதுண்டு.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

அது மூடை பொறுத்தது.

பொதுவா, எரிச்சல் கெளப்புற படங்களைப் பிடிக்காது. ஆம்பளன்னா அல்வா கிண்டனும், பொம்பளைன்னா போண்டா திங்கணும்னு வர்ற விஜய், சிம்பு ரேஞ்ச் படங்களையும், ஹீரோவை அரலூசா காட்ற ஒரே காரணத்துக்காக, ஹீரோயினை முழு லூசாக்குற சந்தோஷ் சுப்பிரமணியம் ரேஞ்ச் படங்களையும், ஒரு விஷயமும் புரியாம, மேதாவித்தனமா கிழிக்கறதா நெனச்சு கடுப்பேத்துற உயிரே, வாரணம் ஆயிரம் ரேஞ்ச் படங்களையும் பாத்தா பத்திக்கிட்டு வரும். பேசாம இவங்க படத்துக்கெல்லாம் போய் ஸ்க்ரிப்ட் எழுதி சாவடிக்கிற அளவுக்கு பேஜாராகிடும்.

ஒன்னு உருப்படியா வீடு, பூ , இல்லம் மாதிரி அழகா ஒழுங்கா எடுக்கணும், இல்லை, நாயகன், நரசிம்மா மாதிரி தைரியமான முயற்சிகளை எடுக்கணும்.


20.கடைசியாகப் பார்த்த படம்?

Drag Me to Hell - தியேட்டரில்
பாவர்ச்சி - வீட்டில்

21.பிடித்த பருவ காலம் எது?

நம்மூர்ல இருக்கப்போ, வெயில் காலம் புடிக்காது. மத்ததெல்லாம் பிடிக்கும்.
இங்க வசந்த காலம் ரொம்ப பிடிக்கும்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

The Speckled People

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனக்கு டெஸ்க்டாப்பில் மாத்தி மாத்தி படங்கள் போட புடிக்காது.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : எங்கக்கா பையன் குரல் ரொம்ப டு த இன்பினிட்டி லெவல் பிடிக்கும். ஸ்கூல் பசங்க சாயந்திரம் மணியடிச்சவுடன் போட்டுட்டே ஓடுற சந்தோஷக் கூப்பாடு ரொம்ப ரொம்ப பிடிக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகைக்காலங்களில் ஷாப்பிங் போற மக்கள் பேசுற சத்தம், சூழ்நிலை ரொம்பப் பிடிக்கும்.

பிடிக்காதது : ரொம்பப் பக்கத்துல வெச்சு, 'பே'ன்னு எதை அலறவிட்டாலும் பிடிக்காது. எங்க அக்கா பையன் அழுற சத்தம் பிடிக்கவே பிடிக்காது. அப்டியே பாசம் பொத்துக்கிட்டு வந்திடும், இப்போவரை. சொல்லப்போனா, அவன் பொறந்தப்புறத்துலருந்து, எந்தக் கொழந்த அழுதாலும் அப்டியே பாசம் பொத்துக்கிட்டு வந்திடுது. எத்தனையோ கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படங்கள் சாதிக்க முடியாதத இவன் சாதிச்சிட்டான்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
ஐரோப்பா- அம்மா வீட்டை வைத்து.
சென்னை-எங்கள் வீட்டிலிருந்து.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
(தனித்திறமைன்னாலே என்னாதுன்னு புரியமாட்டேங்குது. நாம வருஷக்கணக்கா, எதுக்காச்சும் பெருமப்பட்டுக்கிட்டு திரிஞ்சா, அதை சர்வ சாதாரணமா ரெண்டு பேர் பண்ணிட்டு அலட்டிக்காம போறாங்க)
எவ்ளோ நேரம் வேணா க்யூல நிப்பேன் முனகாம, எரிச்சலும் வராது, போரடிக்காது.
எவ்ளோ நேரம் வேணாலும் பராக்குப் பார்ப்பேன்.

வெட்டி வியாக்யானம்(அது என்னான்னு புரியாதவங்க இந்தப் பதிவையே நாலஞ்சு தரம் படிங்க).
நல்லா திட்டுவேன், ஜாடை பேசுவேன்.
'என்னமோ போடா மாதவா', மாதிரி என்னை நானே அப்பப்போ புகழ்ந்துப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதையுமே திணிச்சாப் பிடிக்காது, திணிக்கவும் பிடிக்காது, திணிக்கிறவங்களை பிடிக்கவேப் பிடிக்காது.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பேறித்தனம், மற்றும் ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி கவலைப்படுவேன். என்னை சோகப் படத்தால் சோகப்படுத்த முடியாது, அதுக்கு மேலயே நான் கற்பனை பண்ணி கவலைப்பட்டு முடிச்சிருப்பேன்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெனிஸ் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்சது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்டி இருக்கக்கூடாதுன்னே தெர்ல, இதுல எங்கருந்து நான் எப்டி இருக்கணும்னு ஆசைப் படுறது. மத்தவங்களைத் தொந்தரவுப் படுத்தற நோய்கள் வராம இருக்கணுங்கறதுதான் ஒரே ஒரு சாலிட் ஆசை.ஒரு ஆளைக் குறிப்பிட்டு சொல்லனும்னா, எங்கம்மா மாதிரி டைனமிக் பெர்சனா இருக்கணும்னு ஆசை.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

இங்க எல்லாருமே, ரொம்ப லைட்டாதான் காலைச் சிற்றுண்டி சாப்டுவாங்க. ஆனால், எங்க வீட்ல இட்லி தோசை பொங்கல்னு பாத்தி கட்டி அடிச்சி, பழக்கம். நான் நிம்மதியா காலைச் சிற்றுண்டி இந்தியால, எங்க வீட்ல வெச்சு, இவரு ஆன்னு ஆச்சர்யமா பாக்குற காண்டில்லாம, நிம்மதியா சாப்ட விருப்பம்:):):)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................நான் என்னைக்கு ஒரு வரில சொல்லிருக்கேன்?
ஒரு நிமிஷம் நாகை, ராமேஸ்வர மீனவர்கள் வாழ்க்கையை யோசிங்க. அப்டியாச்சும் அடங்குறோமான்னு முயற்சி செஞ்சு பாக்கலாம். அனைத்து வகை கழிவுகள் அகற்றும் பணியிலிருக்க மக்களைப் பத்தி யோசிங்க. நாம எதையும் கிழிக்கலைன்னு புரியிதா பாருங்க. இது குத்தவுணர்ச்சி வரணும்னோ, ப்யூரிட்டான்னு காட்டிக்கவோ இல்லை, நம்மக்கிட்டருக்க லூசுத்தனத்த கொஞ்சூண்டு கொறைச்சிக்கத்தான்(ஆமா, கம்மியாகிதான் இந்தளவுக்காவது இருக்கேன். இல்லன்னா யோசிங்க) நைநைங்காம நிம்மதியா (நீங்க நிம்மதியா இருக்கீங்களோ இல்லையோ) மத்தவங்கள இருக்க விடுங்க.

Wednesday 27 May, 2009

மொக்கைச் செய்திகள்

சில சமயம் பெரிய பெரிய ஆளுங்கல்லாம் பல்பு வாங்கும்போது, அடடா பாவமேன்னு இருக்கும். அப்டித்தான் சமீபத்துல பெரிய பெரிய எழுத்துலக ஆட்களெல்லாம் பல்பு வாங்கி பல்பத்தை முழுங்கினப்போ அச்சச்சோன்னு இருந்திச்சி. அதுலயும் அநியாயத்துக்கு சிறுவர் மலர் , அம்புலி மாமா, லட்சுமி, ரமணி சந்திரனோடல்லாம் கம்பேர் பண்ணப்போ சிரிப்பும் பரிதாபமும் சேர்ந்து வந்துச்சி. ஆனா, ரெண்டு நாளா இவங்க தன் தெறமய காட்டு காட்டுன்னு காட்றத பாத்தா..................................................................ஏதோ பிரான்ஸ் பத்தி மட்டும்தான் ஒன்னும்புரியாம அக்கிரமமா காமடி பண்ணுவாங்கன்னா, இப்போ ட்ராஜிக்கல் காமடியும் ட்ரை பண்றாப்டியோ?

ராகுல் காந்திக்கும், பத்து மாசத்திலருந்து ஒன்றரை வயசுவரையுள்ள குழந்தைகளின் நடைக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. என்னான்னு கண்டுப் பிடிச்சவங்க மனசோட வெச்சிக்கங்க:):):)

கேன்ஸ் பெஸ்டிவலுக்கு வந்ததிலிருந்து ரெண்டுநாள்வரை ஐஸ்வர்யா ராய்,அந்தக் கடுகடுன்னு இருந்தாங்க. என்னாக் கடுப்போ தெர்ல. இது வெறும் பிரென்ச் மீடியாகிட்டயா இல்லை அவங்க மூடே நல்லால்லையா யாருக்குத் தெரியும்? Franck Duboscங்கற நடிகர நல்லா வெளிப்படையாவே கலாய்ச்சாங்க. அதோட இவங்களுக்கு போய் டேன் மேக்கப் போடற அதிபுத்திசாலிங்கள என்னத்த சொல்ல.

டா வின்சி கோட் பார்த்து நொந்தவங்க, பயப்படாம போய் ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ் பாருங்க. ஆனா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது. எப்டி புஸ்தகத்த மதிமயங்கிப் போய் படிச்சோமோ அப்டியே பாக்கணும். அதே டமுக்கு டிப்பா டிப்பாதான்னாலும், ஜாலியா போகுது. புக்கைப் படிக்காதவங்களுக்குக் கதைச்சுருக்கம் என்னன்னா, தலையச் சுத்தி மூக்கை தொடுற கலையை விளக்கும் படம். கூடுதலா, ரோமுக்கு விசிட்டடிச்சவங்க டீமா போய், ஹேய் இது நாம அப்போ பார்த்தமே, என்னப்பா கூட்டம் இம்மாத்தூண்டு இருக்குங்கங்கற ரேஞ்சில பட்டயக் கெளப்பி, பக்கத்துல இருக்கவங்களை சதாய்க்கலாம்.


தமிழ்நாட்ல பன்னெண்டாம் கிளாஸ்ல ஸ்டேட் பர்ஸ்ட்லருந்து, பார்டர்ல பாசானவங்க வரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் நம்ம gaptain தான். பின்ன, அவரு எலெக்ஷனுக்கு குடும்ப சகிதமா ஊர் சுத்தலைன்னா, அவரு புள்ள ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டெக்னிக்கலா தமிழ்நாட்லருக்க அத்தன ஸ்டூடன்சோட மார்க்கையும் பிரிச்சி, பெயிலாக்கி, அதகளமா சாதிச்சி, அல்லு கெளப்பிருப்பாப்ல. ஆனா பாருங்க, இந்த மைனாரிட்டி கருணாநிதி கவர்மென்ட் அடுத்த நாள் எலெக்ஷன் கவுண்டிங்க்ல கூட சரியா கவனம் செலுத்தாம, பன்னெண்டு தொகுதி, ஓட்டிங் மெஷினையும் கரெக்ட் பண்ணாம, ராவோட ராவா நம்ம ஜூனியர் gaptainஐ பெயிலாக்குற வேலைய செஞ்சி பழிவாங்கியிருக்குது. இதுக்கெல்லாம் ஒரு நாள் பிரேமலதா மேடம்க்கு ராஜாத்தி அம்மா, அவங்க பர்னிச்சர் கடைல வெச்சே பதில் சொல்ற காலம் வரும்னு எச்சரிக்கிறேன், ஆமா!

Tuesday 19 May, 2009

!!!!!!!!!!!!!

சில உண்மையான வார்த்தைகள்

Monday 11 May, 2009

கல்லூரிச் சாலை - 2

டிஸ்கி: இந்தப் பதிவு முழுக்க, 'சுயகழிவிரக்கம், இப்போ இதுலருந்து என்ன சொல்ல வர்றே' போன்ற எண்ணங்களே தலைதூக்கும் என்று எச்சரிக்கை செய்கிறேன்(அது வழக்கம்தானேன்னு இறுமாப்போட வர்றவங்க வாங்க). இப்டியாக ஒண்ணுமில்லாதத வெச்சி சீன் போட்டிருக்கும் என் கலைத்திறமையை நினைச்சு ஆச்சர்யமா ஆயாசமா இருந்தாலும், இதைப் படிச்சு முடிக்கும்போது உங்களோட 'இதுக்கு கோலங்களே பாத்திருப்பனே', மனநிலையை எண்ணி ஆனந்தப்படுகிறேன்.

அது இப்போ இருக்க மாதிரியே ஒரு கிரைசிஸ் டயம். ஒய்டுகே முடிஞ்சு, பாய்சன பாயாசமா நெனச்சு சப்டவங்கல்லாம் சர்வசாதாரணமா கதையல்ல நிஜமாகிட்டு இருந்தாங்க. நான் பிளஸ்டூ ஆரம்பிக்கும்போதே சனியன் சகடை கணக்கா எங்க டிபாட்மென்டை பாத்தவங்க நெறயப் பேர்(அது நீ இருந்ததாலன்னு சொல்றவங்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன்).

ரிசல்ட் வர்றதுக்கு முன்னயே நாங்களா முடிவு பண்ணி, பிரபு சம்பந்தி சேலத்துல வெச்சிருக்க காலேஜ்ல உத்தமமா சேர முடிவுப் பண்ணியாச்சு. அது ஏன் அந்த காலேஜுக்கு போனோம்னா, அந்த டைம்ல சேலம் சைட் காலேஜ்களில்தான் ஐந்து வருட எம்எஸ்சி கோர்ஸ் இருந்திச்சி (கல்யாண பத்திரிக்கைக்காக இல்லாட்டாலும், ஒரேடியா, சேந்திட்டா அஞ்சு வருஷம் பிரச்சினயில்லாமப் போகும்னு). ஆனா, ரிசல்ட் வந்தப்புறம் பாத்தா, தங்கபாலுவோட காலேஜ்லருந்து, வாரியார் சொந்தக்காரங்க கல்லூரி வரை, பொறியியல் கல்லூரிகள் பலது சீட் கொடுக்க போட்டி போடுற கலிகாலம். எங்க செட்லருந்து, பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்னு அறிவிப்பு வேற. திமுககாரங்களா இருந்திட்டு, எதுக்கு அண்ணாவை கேவலப்படுத்தனும்னு யோசனையில் இருந்தேன். ஆனா, அதுக்கு இடம்கொடுக்காதளவுக்கு இவங்க நக்கலும் ஓவரு, அந்த காலேஜுக்கே இசிஇ தரமாட்டேன்னு அடம்.

இவங்கல்லாம் திடீர் மானஸ்தனுங்கன்னு புரிஞ்சு, சரி ஒரு மாஸ்டர் டிகிரியாவது, டிகிரி காப்பி கணக்கா சுளுவா கெடைக்குதேன்னு சேலம் போகலாம்னு இருந்தப்போ, இங்க எங்க காலேஜ் பத்தி அக்கா நண்பர்கள் மூலமா தெரிய வந்துச்சி, அதே எம்எஸ்சி சென்னைப் பல்கலைக்கழகம் கீழ புதுசா வருதுன்னு.

கிண்டில போய் பீசெல்லாம் கட்டிட்டு, அட்மிஷன் சம்பந்தமா எதையோ வாங்க காத்திருந்தா, எங்கண்ணனோட நண்பர் வந்து எதிர்ல காட்சிக் கொடுக்குறார். அவருதான் ஆடிட்டிங் பாக்குறேன்னு சொன்னதால, எங்கப்பா, எப்டிப்பா காலேஜ் ஒகேவான்னா, 'என்ன சார் இங்கயா சேத்தீங்க, அந்த காலேஜ் ஊருக்குள்ள ஒன்றர கிலோமீட்டர் நடந்தால்ல கண்ல தட்டுப்படும், அதுவும் ஒரு பஸ்சும் அங்க நிக்காது, காலேஜும் ஆரம்பிச்சு, நாலு வருஷம்தான் ஆகுது, இப்டி பண்ணிட்டீங்களேன்னு' கபீர் கெளப்புறார்.

ஏற்கனவே பிரபு சம்பந்தி, பொண்ணு கல்யாணத்துக்கு பந்தி செலவுக்கு சேத்து வெக்கனும்னு எங்கக்கிட்டருந்து அம்பதாயிரம் மொய் வாங்கினதால, இங்கக் கெரகம் கரகம் ஆடட்டும்னு விட்டுட்டோம்.

இது நடந்தது, ஜூன் மாசம், அப்போதான், வீட்ல பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகியிருந்தன. நாங்க கட்ட ஆரம்பித்திருந்த புதிய வீடு பற்றினக் கவலை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அப்பா வினோதமாக விஜய் படங்களை பாக்க ஆரம்பிச்சார். எங்க கல்லூரிக்கு போயிட்டு வர சர்வசாதாரணமா, ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் ஆகலாம், என்கிற திகில் தகவல். அக்காக்கு குழந்தை பிறந்தால் எப்டி வளக்கிறதுன்னு பயம். படிச்சு முடிச்சாலும் கணினித்துறையில் எதிர்காலமுண்டா என்று பயப்பட வைத்த காலக்கட்டம். எங்க ஏரியாவில் உச்சகட்ட தண்ணீர் பஞ்சம். என் மார்க் வெச்சு அப்பா சைட்ல எல்லா சொந்தக்காரங்களும் ஏகத்துக்கும் நக்கலடிச்சு வெறுப்பேத்துற வேலைய, சொந்த வேலய விட அதிகமாப் பாத்தாங்க. இப்டி ஒன்னு பத்தாகி, பத்தே பரமசிவமானக் ('தல'யோட பரமசிவம் பாத்தா கணக்கான்னு கூட வெச்சுக்கலாம்)காலக்கட்டம்.

ஒரு சனிக்கிழமை காலைல வீல்னு ஒரு சத்தம், அம்மாதான். என்னமோ ஏதோன்னு பதறி எழுந்தா, அப்பா டிவியப் பாருங்கறார். கலைஞர் கைது பத்தின செய்திகள்.

அன்னைக்கு சாயந்திரம் டிவியப் பாத்துகிட்டே எங்கம்மா சீரியஸா சொல்றாங்க, 'நீ என்னைக்கு அஞ்சு வருஷம் படிச்சு முடிக்கிறது, அதிமுக ஆட்சி போறது, வீட்டை கட்டி முடிக்கிறது, குழந்தைக்கு அஞ்சு வயசாகுறது, மத்த பிரச்சினைகள் சரியாகுறதுன்னு'. அந்த டைம்ல நான் இருந்த ஒரு மனநிலைக்கு வாழ்க்கையில் என்றுமே திரும்பக் கூடாதுன்னு இன்னிவரைக்கும் நெனைக்கிறதுண்டு.

ஆனால் எப்டி விக்கிரமன் படத்துல, ஒரு லாலாலாவுல எல்லாம் சரியாகிடுமோ, அதாட்டமே எல்லாம் பாசிடிவ்வா மாறுச்சின்னு இப்போ வரைக்கும் எனக்கு அதிசயமா இருக்கும்.

இதோட என் பேஜாரு ஒப்பாரி முடிஞ்சு, அடுத்த பாகத்திலிருந்து நிஜக் கல்லூரிக் காலம் தொடரும்.

Wednesday 6 May, 2009

பொது அறிவுத் தகவல்கள்

1) பாக்யராஜோட சின்னவீடு படம் பாத்தவங்க, அதுல கல்பனா தம்பியா வர்ற அமுல் பேபி, சக்கி என்ற சக்கரவர்த்திய ஞாபகம் வெச்சிருக்கீங்களா? அவருதான இப்போ கமலோட உன்னைப்போல ஒருவன் பட இயக்குனர்?

2) நம்ம வக்கீலுங்கத் தொரத்தி தொரத்தி ஒதைச்சும், இந்த என்டிடிவிக்காரங்களுக்கு நக்கலு கொறயல. நமக்கும் வேணும், செரங்குப் பிடிச்ச கொரங்குக்கு சீப்பால வைத்தியம் பாத்தாப்ல, அவங்க கம்முன்னு அம்பானி, டாட்டா மாதிரி தேசத்தந்தைகளுக்கு இந்த நாடு என்ன செஞ்சிருக்குன்னு அக்கறையா, ஆதங்கமா செய்திகளைப் போட்டுக்கிட்டு இருக்கும்போது, 'நீ ஏன் அத்த காட்ல, நீ ஏன் இத்தக் கிழிக்கலன்னு' கொரலு விட்டுக்கிட்டிருந்தோம், இப்ப என்னடான்னா, அவங்க 'இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலாம்ல'ன்னு சீதை கணவருக்குப் போட்டியா கடுப்பேத்துறாங்க. பேசாம, நான் அடுத்த பிளைட்ல வந்து, ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சாவடிச்சாத்தான் சரியா வரும்போல.
வடஇந்திய மீடியாக்காரங்கதான், டக்கின் பண்ண டாபர்னு தெரியும்ல, அப்புறம் என்னாத்துக்கு, இவங்கெல்லாம் அங்கப்போய் விவாதத்துல பங்கேற்குறாங்க. என்னைய மாதிரி வெட்டியானவங்கதான் அங்க போய் உக்காந்து சாம்பார் செய்யும் ரெசிப்பியை கத்துக்கிட்டோம்னா, இவங்களுமா? இட ஒதுக்கீடுலருந்து எல்லாத்துலயும் ஒரு முன்முடிவோட வந்து ஒக்காந்துக்கிட்டு, அம்பேத்கரே வந்தாலும் மைக்கால மூக்கை ஒடைக்கப் பாக்குறவங்களாச்சே, தெரிஞ்சுமா போகணும்?
விவாதத்துலப் பங்கேற்க கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மாதிரி ஆட்கள் இல்லைன்னா, போகாம இருக்கிறது நல்லது.
சரி போறவங்களாவது இனிமேட்டெல்லாம், இந்த அண்டப்புளுகு ஆகாசப்புளுகு கோச்சிங்குக்கு கோவப்படாமப் பேச டோப்படிச்சிட்டு போனாத்தான் உண்டுன்னு பொது அறிவோட இருக்காங்களான்னா, அதுவும் இல்லை.
பப்பு யாதவ் கிட்டப் போய் பம்மிப்பதுங்கி ஹிந்தில பேசுறது, ஆனா, நம்மூர்ல கொஞ்சூண்டு ஆங்கிலப் புலமை கொறஞ்சாப்டி தெரிஞ்சிச்சுன்னா அவங்கள ஓட்டுறது.
ஜெயந்தி நடராஜன் கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும், 'நீங்க கடைசியா ஒருத்தர்கிட்ட சொன்ன அதே வரியை வடக்குல யார்கிட்டயாவது சொல்வீங்களாமா'ன்னு?
இந்தத் 'தாய் மண்ணே வணக்கம்' கோஷ்டிங்க இம்சை வேற இந்த விவாதங்கள்ல தாங்க முடியல, என் சமையல நானே சாப்டறத விடக் கொடுமையா இருக்கு.
விவாத நாயகர்களில், ரெண்டு மூணு பேர் டார்ச்சராகி,'நீ இங்க சொகமா ஒக்காந்திட்டு பேசக்கூடாதுன்னு' சொல்றது தேவையில்லாததுன்னு தோனுது. களத்துல இருக்கவங்களத் தவிர மத்தவங்கல்லாம் அக்கறைப்பட்டாலும் சொகமாத்தான இருக்கோம்.

3) நம்மூர்ல சன் டிவி, கலைஞர் டிவிக்கே காண்டாவுறவங்க, இத்தாலிக்குப் போனா செமக் காமடியாயிருக்கும்னு நெனைக்கிறேன். காரணம் அவங்க பிரதமர்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. யப்பா, அநியாயத்துக்கு அவரு தொட்டதெல்லாம் (உயிருள்ளதோ/ஜடமோ) அவருக்கே சொந்தம்ங்கற ரேஞ்சுல ஒரே ஜாலிதான். நம்ம அம்மா விடுற அறிக்கைகளுக்கு டப் கொடுக்கக் கூடிய செமத் தெறமசாலி அவரு. அந்த பூகம்பம் வந்தப்போ, நாங்க ரோம்ல தான் இருந்தோம்(நான் அப்போ டான்ஸ் பிராக்டீஸ் பண்ணல, எனக்கும் அதுக்கும் தொடர்பில்ல). நான் கூட கட்டில் அந்த ஆட்டம் ஆடுன ஒடனே, ஆர்.சி.சக்தி பட காதல் காட்சிதான் கனவுல வந்திருச்சோன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன், பாத்தா பூகம்பம். அதுக்கு தல விட்ட அறிக்கை இருக்கே, சூப்பர். ஆனா, ஒரு வகைல அது உண்மையும் கூட. இங்கெல்லாம் நெறயப்பேர் கேம்பிங் போறேன் பேர்விழின்னு, விடுமுறைக் காலங்களில் இப்டித்தான் படாதபாடுப்படுத்திக்கிட்டும், பட்டுகிட்டும் இருப்பாங்க.

4) ஒய்.ஜி.மகேந்திரன் இன்னும் இதே மாதிரி காமடியா தொகுத்து வழங்கறேன் பேர்விழின்னு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா, பேசாம தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல தூக்கி உள்ள போட்டிறனும், விட்டா நான் டாக்குடரு.வி.ஜி.சந்தோஷத்தோட ('பல்லாக்கு தூக்கினவன் பல் டாக்டர்னா, புல்லு புடிங்கினவன் புல் டாகா'ங்குற என் கவுஜைக்கே டப் கொடுக்கக் கூடிய தெறமசாலி)கவுஜைகளயே படிச்சிடுவேன் போலருக்கு.

5) குங்குமப்பூவும் கொஞ்சும்புராவும் படத்து ஹீரோதான, ஸ்னேஹாவுக்கு, வாய்ல சுளுக்கு வரவெச்ச, ஏப்ரல் மாதத்தில் அப்டின்ற படத்துல, கூழாங்கல்லை முழுங்கின ஸ்ரீகாந்துக்கு நண்பனா வந்து, எக்ஸ்பிரஷனக் காட்டி கொழந்தைங்கள பப்பு மம்மம் சாப்ட வெச்சவரு?(மத்த டீட்டெயில்சை உறுதிப்படுத்துற சூட்டிகையும், பொதுஅறிவும் இல்லாட்டியும் , அதுல நடிச்சவர்தானான்னு மட்டுமாச்சும் யாராவது சொல்லுங்க)

Tuesday 5 May, 2009

கோட்டானுக்குக் கோட்டயக் கொடுத்தவனும், பாட்டனுக்குக் கடல பர்பியக் கொடுத்தவனும்

1) கொய்யாலக்கா, கொய்யாலக்கா, சக்சேனாவா சன் பிக்சர்சான்னு பாடறளவுக்கு, ஒரே ஆனந்தக்கூத்தாடுது மனசு. அயன் படத்தோட புரோமோஷனுக்கு, ஷங்கர் மாதிரி ட்ரூலி பாரின் டைரடக்கர(அதாவது முடிஞ்சளவுக்கு நமக்குத் தெரிஞ்ச பாரின் படங்களாப் பாத்து மட்டுமே காப்பியடிக்கிறவர்) எல்லாம் செவுள்லப் போட்டுத் தூக்கியாந்து, உக்காத்திவெச்சு, 'அந்தப் படத்த இப்டிக்காப் பாத்தப்பவே ஒரு பீலிங், அப்டிக்கா பாக்கும்போது சீலிங் பேனுக்கே விசிறின பீலிங், ஆஹா ஒவ்வொரு மனுஷனுக்கும் எத்தனப் பீலிங்கு'ன்னு வெற்றிகரமா பொலம்ப வெச்ச தெறமைக்கே மத்திய சென்னைய தாரைவார்க்கலாம்.

பொதுவா அஜீத் விஜய், சிம்பு படங்கள கொஞ்சூண்டு பாத்தாலே, விஜயகாந்த் படத்துல, அவரு வல்லவரு நல்லவரு வடிக்கட்டுன (உத்த)மருன்னு நாலஞ்சு சீரியல் ஆர்ட்டிஸ்டை விட்டு பேச வெச்சு டிராஜடியையும் காமடியாக்குவாங்கள்ல, அதுல சீரியல் ஆர்ட்டிஸ்டுக்கு பதிலா இவங்களப் போட்டு டிராஜடி சீனை, கிரைம் இல்லைன்னா சயன்ஸ் பிக்ஷன் ஆக்கனும்னு தோணும். அதையே இப்போ சன் பிக்சர்ஸ் இன்னொரு விதத்துல பண்ணிக்கிட்டு இருக்கு. சீக்கிரமே மணிரத்தினம், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் மாதிரியாப்பட்ட டாபர் பாய்சயெல்லாம், புத்தம் புதுசாக் கெளம்பி, தான் ஹீரோவா நடிச்ச படத்தால கானகத்த கிடுகிடுக்க வெச்ச டாக்டர். இராமோடப் புதுப் படங்களைப் பத்தி பாராட்டி பேச வெக்கனும்னு அழகிரி அண்ணனை அடம்பிடிக்க சொல்லணும்.

2) இனிமேட்டு நான் ஷாப்பிங் போக மாட்டேன்.
பிரியாணியேத் திங்க மாட்டேன்.
எங்கயும் பராக்குப் பாக்க மாட்டேன்.
தப்புதப்பா போட்டோ எடுத்துட்டு, பாலுமகேந்திராவே சொல்லிருக்கார், மனித முகம் இல்லாதப் புகைப்படம் மண்ணுக்கு சமம்னு, அதாலத்தான் வானவில்லை விட்டுட்டு, பக்கத்துல நிக்கிற தாத்தாவ படம் புடிச்சேன்னு சொல்லமாட்டேன்.
பீட்சாவுக்கு மாவை அரமணிநேரத்துக்கு முன்ன பெசஞ்சிட்டு, ஹ்யுமிடிட்டி பத்தலைன்னு ஏதாச்சும் பேத்த மாட்டேன்.
தமிழ் பண்பாடு, ஹிந்து, கலாச்சாரம் அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு புருடா விடாம, போர்க் பிடிக்காது, அதால சாப்டமாட்டேன்னு இங்கிருக்க நண்பர்கள்கிட்ட உண்மையச்சொல்வேன்.
தமிழைத் தமிழா எழுதுவேன்.
கடைக்குப் போனா பிரெஞ்சுத் தெரியாத டூரிஸ்ட் மாதிரியே சீன் போட்டு கடக்காரங்கள சாவடிக்க மாட்டேன்.

அம்மா தேர்தல்ல ஜெயிச்சா என்னென்னமோ வாங்கித் தருவேன்னு சொன்னதை நம்புறவங்க, மேலே சொன்னதையும் நம்பிடனும்.

3)ஆண்டவா, பன்னிக் காய்ச்சல்லருந்து(ஒன்னுக்குள்ள ஒன்னுதான) கூடக் காப்பாத்த வேணாம், ஆனா இந்த நசுங்கின கொசுக்களோட இம்சைலருந்து ஜாமீனாவது வாங்கிக் கொடுன்னு கதறனும் போலருக்கே.

இந்தத் தமிழ்'குடி'தாங்கி ஐ(ஜ)யா தொல்லையத் தாங்க முடியல. இத்தன நாளா தயாநிதி, கலாநிதியப் பாத்து பொதுமக்களுக்கு பாதகமில்லாமப் பொறாமையில பொசுங்கிக்கிட்டுக் கெடந்தாரு. இப்ப என்னடான்னா, முழுசா வேகறத்துக்கு முன்னயே குதிச்சு வந்துட்டு, ஸப்பாஆஆ........

தயாநிதி காப்பி வித்த அனுவோட நிகழ்ச்சியில வந்தா, இவரு போட்டிக்கு புள்ளயாண்டான் கண்ணாலம் கட்டினக் கதைல குடும்பத்தை கோத்துவுடறார். அன்புமணி தனக்கு பால விவாகம் நடந்துட்டதா பொலம்பினது காலக் கொடுமைன்னா, பேட்டி முழுக்க தான் பேசுனதுல தானே டபுள் மீனிங் கண்டுப்பிடிச்சி அதத் திருத்துனதுதான், கொடும இன்பினிட்டி. இதுவரைக்கும் மத்தவங்களைத்தான் இப்டில்லாம் பேசுவாங்க, அப்புறம் எங்கப் புரியாமப் போய்டுமோன்னு திருத்துறாப்டி இன்னும் தெளிவாக்குவாங்க, ஆனா இவரு தன் குடும்பத்துக்கே இப்டி ஆப்படிக்கிறாரே.

4)பொதுவாவே பாராளுமன்றத் தேர்தல்னா, இந்தத் தொழிலதிபருங்க தொல்லையத் தாங்க முடியாது. இந்தவாட்டியும் ஆரூண்லருந்து, சரத்பாபு வரைக்கும் இந்தியாவ வல்லரசாக்குறக் க்யூ நீண்டுக்கிட்டே போகுது. எப்டியோ தமிழ்நாட்ல 'லாட்ரி' அடிக்காம இருந்தா சரி. ஒருவகைல இவங்களையும் பாராட்டனும், தேர்தல் மூலமா பாராளுமன்றம் போக முயற்சி பண்றாங்களே.

5)பழைய தூர்தர்ஷன் நாட்களை எண்ணி ஏக்கம் கொள்பவர்கள், அந்த ஏக்கமே முத்தி, செவ்வாய்க்கிழமை நாடகத்தைக் கூட சிலாகிக்கிறவங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் இரண்டரை மணிநேர தூர்தர்ஷன் ஸ்பெஷல் செவ்வாய்க்கிழமை நாடகம் சென்ற மாதம் வெளியிடப்பட்டுள்ளது. நாடகத்தின் பெயர், ஆனந்தத் தாண்டவம். சுஜாதா என்ற எழுத்தாளரை பலதரப்பட்ட சினிமாக் கலைஞர்கள் கூட்டாக இயங்கி பழி தீர்க்கும் கதை.

Sunday 3 May, 2009

வாரணம் ஆயிரம் பார்ட் 2 / மரியாதை

சமீபத்துல ஒருக் கருத்துச் செறிவுள்ளப் படத்தப் பாத்தேன். ஆனாக் கீழே அதோட விமர்சனப் பின்னூட்டங்களப் பாத்தா, அடாசுப் படம் அது இதுன்னு அசிங்க அசிங்கமா திட்டிருந்தாங்க. இப்டி நாக்குப் பிடிங்கிக்கிற மாதிரி திட்டினவங்களை நெஜமாவே அந்தப் படத்தோட ஹீரோ முன்னாடி நிக்க வெச்சி, அவரு நாக்குத் துறுத்தி முழிய உருட்டுறத குளோசப்புல பாக்க வெச்சி ஜன்னி வரவெச்சா சரியாப் போயிடும்.

வாரணம் ஆயிரம் படத்தையே கொஞ்சம் நம்புற மாதிரி, வசனத்தை தமிழ்ல வெச்சு, காப்பியடிக்கவே அவசியமில்லாத கண்றாவியான பாட்டுகளோட, (வாரணம் ஆயிரம்)படத்தோட டைரடக்கரே படத்துக்கு வில்லனான மாதிரியில்லாம, (ஆனா கவுதம மாதிரியே) சப்பையான வில்லன் கேரக்டர வெச்சு என்னமா எடுத்திருக்காங்க, பேருக்கேத்தாப்ல இப்டியொரு மரியாதையான படத்தை மானங்கெட்ட படம்னெல்லாம் திட்டறது சரியில்லைங்கறேன்.

அதுல எப்டி அப்பா சூர்யா, புள்ள சூர்யாவை தன் போக்குல விட்டு வளத்து, தீவிரவியாதிகளயெல்லாம் கொன்னு ஒசாமா பின் லேடனுக்கே சவால் விட்டிருவாரோன்னு யோசனை பண்ண வெச்சாப்ல, இதுலயும் gaptain தன் புள்ளைய சூட்டிகையா வளத்து , சொத்தை தாரவாக்க வெச்சு, ஊர் பணத்துல கிரீன் ஹவுஸ் அமைச்சு, பத்து லச்சம் வெச்சிருக்கவங்கல்லாம் பசுமைப் புரட்சியப் பண்ணனும்னு கருத்து சொல்றார்.

என்னத்த பெருசா சூர்யா சிக்ஸ் பேக் வெச்சுட்டாரு, ஸ்கூல் பேக் தூக்கிட்டாருன்னு பீத்தறாங்க, இதுல பாருங்க நம்ம gaptainனோட ரெண்டு கன்னத்துலருந்தும் தொங்குற சதையயே, பசங்க ஆலமர விழுதுக்குப் பதிலா இழுத்து புடிச்சு தொங்கி வெள்ளாடலாம். நாங்க சின்ன வயசுல கோதுமை மாவை உருண்டையாக்கி கூரை மேல அடிச்சு, அது கொஞ்சம் கொஞ்சமா தொங்கி கீழே விழுறதைப் பாத்து அதிசயப்பட்டு கூத்தடிப்போம். இந்தப் படத்துல குறிப்பிட்டு சொல்ற அம்சமா, இவரு கன்ன சதை கூரைலருந்து விழுற மாவுருண்டயாட்டமே இருக்குறது சூப்பரா இருக்கு.

என்னமோ மாசக் கணக்கா பட்டினிக் கெடந்தாராம் சூர்யா, அப்பா புள்ளன்னு வித்தியாசம் காட்டறத்துக்கு. இதுல gaptain தன் மீசை அடர்த்திய வெச்சும், வாய்ஸ் மாடுலேஷன வெச்சும் ஒரு வித்தியாசத்தைக் காட்டிருக்கார் பாருங்க யப்பா !!!

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் காட்டக்கூடாதுன்னு பிரம்மப் பிரயத்தனப்பட்டு, மீரா ஜாஸ்மின், மீனாவயெல்லாம் தன்னை விட ஜாஸ்தி புஜப்பலப் பராக்கிரமத்தோட காட்டிருக்கார். நாய கல்லால அடிச்சுக் கொல்னும்னா, அதுக்கு வெறி பிடிச்சிருச்சின்னு சொல்வாங்கல்ல, அதுமாதிரி விக்ரமன் படத்துல அட்டு ஹீரோவ, உதாசீனப்படுத்தி கிளைமேக்ஸ்ல திருந்துற ரோலை ஒரு மார்க்கெட் போன ஹீரோயின் செஞ்சா, அதுதான் அவங்க கலைச்சேவைக்கு சங்குன்னு பிரியா ராமன், வினிதா வரிசையில் மீனா உறுதிப்படுத்திருக்காங்க.

அதுல அஞ்சல பாட்டுக்கு என்னாத்துக்கு அவ்ளோ நல்ல பேருன்னு புர்ல. இந்தப் படத்துல மீனாப் பாடறப்போ ஆடறதாகட்டும், அப்புறம் மீரா ஜாஸ்மினோட டூயட்டாகட்டும் ஸ்பாஅஆ , கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும், விஞ்ஞானத்தை நம்பாதவங்களுக்கு விஞ்ஞானத்துலையும் நம்பிக்கைப் பொங்கும்.

அதுல எப்டி ஒரே பாட்டுல சூர்யா, பிரெண்டோட புராஜக்டை வெச்சு, பணம் சம்பாதிச்சு, கடன் தீர்த்து, வீட்டைக் கட்டி, பாட்டுப் பாடி காம்படிஷனும் ஜெயிச்சு, அமெரிக்கா போறாரோ, அதுப் போலவே இதுலயும் gaptain செய்றார். என்ன, கவுதமால இங்கிலிபீசுல தான் சிந்திக்க முடியும், சனியன் புடிச்ச தமிழ்ல ஒன்னியும் வெளிப்படுத்த முடியாததுனால அதை தம்மாத்தூண்டுக் கூட என்னாதுன்னு சொல்லலை. இதுல அகிலாண்ட நாயகனுக்குப் போட்டியா, இனிவரும் காலங்களில், gaptain டப் பைட் கொடுக்கணும்னு, திட்டத்தையும், அதுக்கான முதலீடு கெடச்ச விதத்தையும் வெளக்குமாறால வெளுத்தெடுக்குற மாதிரி வெளக்குறாங்க.

நம்மள பதைபதைக்க வெக்குற திருப்புமுனயானக் கதாப்பாத்திரத்துல குண்டான் கணக்கா மெரட்டிருக்காங்க மீனா. மீரா ஜாஸ்மின் இந்தப் படத்துக்கப்புறம், சமீபத்துல நடிக்க வந்திருக்க அவங்க அக்காவுக்கு செமப் போட்டியா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன். இப்டி வித்தியாசமா தேர்ந்தெடுத்து நடிச்சாதான் அம்பிகாவாட்டம் சீக்கிரம் ஆக முடியும்.

அதுல சூர்யா காதலை சென்னைலையும் அமெரிக்காலயும் வெளிப்படுத்தின விதத்தைப் போய், க்யூட்டா இருக்கு அது இதுன்னு, இஷ்டத்துக்கு அள்ளிவிட்டவங்க, இதுல ராஜ் டிவிக்கே போய் gaptain துறுதுறுன்னு துருப்பிடிச்ச இரும்புக் கணக்கா காதலை வெளிப்படுத்தறார் பாருங்க.

டைரெக்டர் விக்ரமன், காலேஜ்ல தலைவாசல் விஜயோட சீனியர்னு நெனைக்கிறேன். ஆனா இந்தப் படத்துக்கப்புறமாவது விஜயை ராகிங் பண்றதை விக்ரமன் நிறுத்திடனும்.

மீனா - சம்பத் நிச்சயத்தை gaptain நிறுத்துற காட்சியில இருக்க லாஜிக் இருக்கே, தெய்வமேன்னு கதறனும் போலிருக்கும். அதுல சூர்யா நெனச்சவுடன் ஆர்மில சேர்ந்து அப்டியே உயர உயரப் போகுற லாஜிக்குக்கே போட்டி.

படத்துல வர்ற காதல் காட்சிகள், ரமேஷ் கண்ணாவின் காட்சிகளுக்குக் கடும் சவால். ஒரு சொலவடை இருக்குல்ல, சீப்பை ஒளிச்சு வெச்சிட்டா கல்யாணம் நின்னிடுமான்னு, ஆனா எனக்கொரு தீவிர சந்தேகம். குமுதம், விகடன் மாதிரியான பத்திரிக்கைகள்ல இருக்கிற ஜோக்கெல்லாம் திடீர்னு மறைஞ்சிட்டா, விக்ரமன் படமெடுக்கிறதயே நிறுத்திடுவாரோன்னு.

இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, கோவம், அதிர்ச்சி, காதல்/நகைச்சுவைன்னு எந்த நிலையிலையும் தன் உணர்ச்சியைக் காட்டிக்காம, காசியில மப்புல திரிவாங்களாமே ஞானிங்க, அது மாதிரியே, ஒரே வித முகபாவத்தோட எல்லா சவால்களையும் சந்திக்கிற gaptain முத்தலமைச்சரானா, நமக்கெல்லாம் எம்புட்டு பெரிய விடிவுகாலம் மற்றும் அதிர்ஷ்டம் பாருங்க.

இவ்ளோத்துக்கப்புறம் இதையும் forrest gump தழுவல்னு மானசாட்சயில்லாம பொரளிக் கெளப்புனாக்கா, ஒன்னு tom hanks லெட்டரெழுதி வெச்சிட்டு தூக்கு மாட்டிப்பாராம், இல்லைன்னா Angels & Demons படத்துக்கு ரிலீசப்போ அண்டசராசர நாயகன் டி.ஆரோடவும் அவர் புள்ளயோடவும் பாக்கறத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணிடுவாராம். இதை வாரணம் ஆயிரத்தை தன் படத்தோட தழுவல்னு சொன்னதக் கேட்டு கொலவெறியோட திரியுற forrest gump பட இயக்குனர் சொன்னதா சமீபத்துல என்டிடிவில சொன்னாங்க(இப்போல்லாம் நாம அவங்க சொல்ற கேனத்தனமான செய்திகளத்தானப் பாத்து தான புளகாங்கிதப்படுறோம்).

Tuesday 21 April, 2009

Happy Earth Day :(:(:(

இதோ இன்னைக்கு இங்க வெளிநாட்ல இருந்தாலும் கொஞ்சம் கூட கஷ்டமில்லாம தமிழ்நாட்டு சாப்பாடுலருந்து, எதையும் மிஸ் பண்ணாத மாதிரி பாத்துக்கிறவங்க. நம்மூர்ல சின்ன பிரச்சினைன்னாலும் அதுக்கு எவ்ளவோ முக்கியத்துவம் கொடுக்கிறவங்க. சிங்கம், பாம்புலருந்து ஏதேதோ அழிவிலருந்து காக்கப்படனும்னு நடவடிக்கை எடுக்கப்படுது. என் எருமமாட்டுத் தோலுக்கே ஒரைக்கிது. அங்கருந்து வந்தவங்க சொல்ற கொடுமையக் கேக்குறதா, இல்ல அதச் சொல்லக் கூட இனி யாரும் அங்க இருப்பாங்களா?

Thursday 9 April, 2009

கிலோ என்ன விலை?

விகடன்ல இந்த வாரம் பள்ளிக்கல்வி குறிப்பா கிராமப்புற ஆரம்பக் கல்வியின் நிலை பத்தி ஒரு அருமையான கட்டுரை வந்திருக்கு. அதுல விரிவா வந்திருக்குன்னாலும் பெரிய, சிறிய நகரங்களிலும், ஏன் ஒரு காலத்தில் அருமையாக இயங்கிக்கிட்டிருந்த டவுன்ஷிப் ஏரியா பள்ளிகளிலும் கூட இன்னைக்கு நிலைமை மோசமாத்தான இருக்கு.

பொதுவா, ஸ்டேட்போர்ட் சிலபஸ் எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்னாலும் துரதிஷ்டவசமா எங்க வீட்டுப்பக்கத்தில் அப்போ தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இல்லாததால, நான் மெட்ரிக்ல சேர்ந்தேன். அதோட எங்கம்மா வேற தான் பியூசில பிராக்டிகல்ஸ்ல தனிச்சு விடப்பட்டதால ஸ்டேட்போர்டு வேணாம்னுட்டாங்க. அதிருக்கட்டும், ஆனா இன்னிவரை ஒருவேளை அதுல படிச்சிருந்தா நான் அடிப்படைகளில் இன்னும் வலுவா பலப் பாடங்களில் இருந்திருப்பேனோன்னு தோணும். இங்க நான் வெறும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை பத்தி தெரிஞ்சதை முதல்ல எழுதறேன்.

எங்கப்பா சென்னையில் இருக்கிற ஒரு பிரபலமான அரசு உதவிப்பெறும் பள்ளியில் வேலைப்பார்த்தவர். சென்னையோட வியாபார மற்றும் பொருளாதார இதயம்னு சொல்லலாம். எந்த ஏரியாவில் எந்த நகைக்கட, துணிக்கடை, உணவகம் அது இதுன்னு போனாலும் எங்க வீட்ல எல்லாருக்கும் சிறப்பு கவனிப்பு கொடுக்கறாப்போல குறைந்தபட்சம் அந்த பள்ளி மாணவர் ஒருத்தராவது இருப்பார். இன்னும் சொல்லனும்னா, ஷங்கர்ல ஆரம்பிச்சி, அஜீத் விஜய்னு ரெண்டுபேரையும் வெச்சி உலகமகா தொம்மைப்படமெடுத்த சவுந்தர்லருந்து, நம்ம பவர் பாண்டியன் வரை எல்லாரும் அந்தப் பள்ளிக்கூடத்தோட முத்துக்கள்தான். இந்தப் பள்ளிக்கூடம் இப்போ ஓரளவுக்கு அதோட கரஸ்பாண்டென்டால ஒகேவாகிக்கிட்டிருக்குன்னாலும் மத்த பல பள்ளிகளோட நிலைமை இப்டி இருக்கறதால இதை உதாரணமா வெச்சிப்போம். எல்லாப் பள்ளிக்கும் தெய்வநாயகங்கள் பிறந்து வர்றதில்லையே.

மேலே குறிப்பிட்டவங்கல்லாம் எங்கப்பாவை மரியாதையா ஐயாங்கும்போது ஜாலியாயிருக்கிற எனக்கு, அதேப்பள்ளியோட (அதாவது 1992-2002 காலகட்ட)ஜூனியர் மாணவர்கள் மட்டும், வினோதமா ஜயான்னு விளிக்கும்போது கடுப்பாகிடும். இவங்க இப்டி எழுதனும்னு அவங்களுக்கொன்னும் வேண்டுதல் இல்ல. அந்தளவுல அவங்களோட பள்ளியில் கல்வியின் தரம் இருக்குன்னு அப்புறம்தான் புரிஞ்சது.

அப்போல்லாம் அப்பா திருத்த வீட்டுக்கு கொண்டுவர்ற பேப்பர்கள எடுத்துப் படிச்சுப்பாத்து சிரிக்கிறது எனக்கும் எங்கக்காவுக்கும் பெரிய பொழுதுபோக்கு. அப்பா ஸ்கூலுக்கு போனா, பிரேக் சமயத்துல வேணும்னே பெரிய கிளாஸ் பசங்க கிட்ட போய் நக்கல் விடறதுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கறதுதான் பொதுவாழ்வுன்னு இருப்பேன். அவங்க பொதுவா ராவிடுவாங்கன்னாலும், தவ்ளூண்டுக்கிட்ட என்னாத்தப் பேசறதுன்னு விட்டிருவாங்க. டீல எச்சத் துப்பித்தர்றத்துக்கு நான் அப்ப டீயும் குடிக்கமாட்டேன்:):):)

இப்டியாக அப்பா கண்ல படாம நிம்மதியா ஓடிக்கிட்டிருந்த பொதுவாழ்க்கை, ஒரு நாள் பட்டு, பட்டுட்டேன் அறிவுரைகளால.


இத்தனைக்கும் இந்த பள்ளியோட ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள விட பசங்கக்கிட்ட நெருக்கமா இருப்பாங்க. பசங்கக் கிட்ட டீ வாங்கி வர சொல்றது உண்மைதான்னாலும், அதே பசங்களுக்கு வீட்ல கஷ்டம்னா தானே எக்சாம் பீஸ்லருந்து எல்லாத்தையும் அலட்டாம கட்டிருவாங்க. வருஷாவருஷம் பள்ளி மாணவர்களுக்கு தாங்களே காசைப்போட்டு சரவணபவன்லருந்து விருந்து ஏற்பாடு பண்ணிடுவாங்க. பசங்களுக்கு ஒண்ணுன்னா, ஹைகோர்ட் வக்கீல்களாட்டம் அப்டியே பொங்கி எழுவாங்க. எல்லாம் சரிதான், ஆனா அவங்களாட்டமே (நான் சொல்ற காலக்கட்டத்துல) தங்களோட இன்னொரு முக்கிய கடமையான கல்விப்புகட்டுதலை மறந்துட்டாங்க.

ரெண்டாங்கிலாசு படிச்சிட்டிருந்த நானு எட்டாங்கிலாசு ஒம்பதாங்கிலாசு பசங்க பேப்பரை படிச்சு கேலிப்பண்ற ரேஞ்சில இருந்திச்சுன்னா எப்டி? நான் கொழுப்பெடுத்து பண்ண வேலையாவே இருக்கட்டும், அவங்கள்ள பலர் அசாதாரண சூழல்ல படிக்கிறாங்கன்னே இருக்கட்டும், சரவணா ஸ்டோர்ஸ் குலக்கொழுந்துகள் கஜக்கர்ன சூர்ணமாகவே இருக்கட்டும், அதுக்காக அந்தளவுலையா வெச்சிருக்கறது?

இது எதுவும் புதுமையான சூழல் கெடயாதே. முன்னையும் இதே சூழல்ல இருக்கத்தானே செஞ்சாங்க? அப்போ இதே பள்ளில நல்ல வசதியான குடும்பத்து பசங்களும், முக்காவாசி ஆசிரியர்களோட பிள்ளைகளும் படிச்சதால ஒழுங்கா நடத்த முடிஞ்சதுன்னா, அப்புறம் இப்போ மட்டும் ஏன் முடியல?என்னத்த பெருசா நகரங்கள்ல கல்வி வாழுது?

அதெப்படி போதுமான ஆசிரியர் நியமனங்கள ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நிறுத்தி வெச்சு, கிட்டத்தட்ட ஒரு மாணவனோட வாழ்க்கையயே கேள்விக்குறியாக்குதுன்னு தெரிஞ்சும் யாரும் பெரிய பிரச்சினை ஆக்க மாட்டேங்குறாங்க? இது சம்பந்தமா பொதுநல வழக்கு போட்டாலும் ஏன் மீடியாவுல இன்னும் பெருசுப்படுத்த மாட்டேங்குறாங்க?

பெரிய நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத எங்க ஊர்ல இருக்குற அரசுப் பள்ளியின் நிலையும் இதுதான், அந்த ஆசிரியர்களோட பிள்ளைகள் அங்க படிச்சிட்டிருந்த வரைக்கும் அவ்ளோ நல்லா நடந்திட்டு இருந்துச்சி, இப்போ அதுலயும் நிலைமை மோசம்தான். எனக்கு இந்த ஆசிரியர்களோட அக்கறையே புரியறதில்ல. ஏதோ ஒரு பிராடு வாத்தி, ஒரு பத்தாங்கிளாசு பொண்ணு கணக்கு பேப்பர் ரீகவுண்டிங்க்ல வேலையக் காமிச்சத்தை மெனக்கெட்டு, பாடுபட்டு அந்தப் பொண்ணு வீட்டுக்கு தெரியப்படுத்தறவங்க, பையன் ரெண்டுநாள் பள்ளிக்கு வரலைன்னா வீட்டுக்கே போய் என்னா எதுன்னு பாக்குறவங்க ஏன் நார்மலான விஷயமான பயிற்றுவித்தலை செம்மையா செய்றத்துக்கு விசனப்படறாங்க? அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் முக்காவாசிப்பேர் எதுக்கு தனியா ட்யூஷன் சென்டர் ஆரம்பிக்கறாங்க? இவங்கல்லாம் அரசு ஊழியர்கள்தான?


சரி, இவங்கள விட்டுட்டு மெட்ரிக்குலேஷன் பாடத்திட்ட பள்ளிகள் பக்கம் வந்தா, பெரும்பான்மையா அங்கயும் நிலைமை தூன்னு துப்பற அளவுலதான் இருக்கு. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பிரபலமான பள்ளிகளைத்தவிர மத்ததெல்லாம் மோசம்தான். அங்கெல்லாம் புத்திசாலின்னா, என்னோட மறுபதிப்புகள்தான் ஏராளம். மக்கடிச்சு மார்க்கெடுக்கணும் அவ்ளவுதான். புரிஞ்சு படிச்சதா சரித்திரமே இல்ல. போனதரம் கூட சிலப்பேர் கேட்டிருந்தாங்க எப்டி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மக்கடிச்சேன்னு, பத்தாங்கிலாசு வரை நான் ஒரு பாடம் விடாம எல்லாத்தையும் அப்டித்தான் படிச்சேன். வேறவழியில்ல, சொல்லிக்கொடுக்க ஆளில்ல, ஆனா நல்ல மார்கெடுத்து பாசாகணும்னு நெருக்கடி பிளஸ் ஒருவித காம்பிளக்ஸ் இருந்தா எதையும் மக்கடிக்கலாம்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அனுப்பலைன்னா குடும்பத்துல தள்ளி வெச்சிடுவாங்கன்னு அனுப்பறவங்கக் கூட, ட்யூஷனுக்கு ஏன் அரசு பள்ளி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கறாங்க? அதுக்கும் அந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் டீச்சர்கிட்டயே அனுப்ப வேண்டியதுதான? அனுப்பமாட்டாங்க, ஏன்னா, அங்க இருக்குறவங்க முக்காவாசி அனுபவமும் விஷயஞானமும் இல்லாதவங்களா இருக்காங்க, இல்லைன்னா, இன்னும் ஒருபடி மேல போய் அங்க பிசிக்ஸ் மேத்சுக்கெல்லாம் டீச்சரே இருக்க மாட்டாங்க, வேறொரு ஏற்பாட்டில் ஸ்கூல் நடக்கும். இதெல்லாம் தெரிஞ்சும் கேக்கமாட்டாங்க. ஏன்னா அங்க கொட்டிக் கொடுக்க பிறவி எடுத்தவங்களாச்சே எல்லாரும்.

இந்த நிலை அங்க வர காரணம் என்ன, ஒன்னு புற்றீசல் போல பலது தொறந்தது, இன்னொன்னு பசங்கக்கிட்ட கொள்ளையடிச்சு பில்டிங்கா ஏத்திக்கிட்டு போறது, வாகனங்களா வாங்கிக் குவிக்கிறது, ஆனா ஆசிரியர்களுக்கு அதுலருந்து கிள்ளிக் கொடுக்கக் கூட மனசு வராது. என்னதான் காலக் கொடுமைன்னு வந்தாலும், கடைநிலை ஊழியரோட பொண்ணும் பையனும், அவர் வாங்குற சம்பளத்தையே டீச்சரா போய் வாங்கினா அவரு 'ஆஹா இதல்லவோ சமத்துவம்னு சந்தோஷமாப் படுவாரு?'. ஒரு காலத்துல மெட்ரிக் ஸ்கூல்ல வேலப்பாக்குறது பெரிய அதிகாரிகளோட கான்வென்ட் எஜுக்கேட்டட் மனைவிகளுக்கு பெருமையா இருந்துச்சி, இப்போ அப்டியா இருக்கு நிலைமை? ஐடி செக்டர்லையும் கால்செண்டர்லையும் இவங்க போக ஆரம்பிச்சப்புறம் மெட்ரிக் பள்ளிகள் பாடு இன்னும் திண்டாட்டமாச்சு. அப்பவும்கூட திருட்டுத்தனமா பிசிக்ஸ் டீச்சருக்கு தனியா கணக்குல இல்லாம சம்பளம் தருவாங்களே தவிர கொஞ்சம் கூட மனசாட்சிப்படி நடந்துக்க மாட்டாங்க.

ஜனவரி பிப்ரவரி மாதங்களில், மானங்கெட்டத்தனமா கல்வியதிகாரிக்கிட்ட ஏன் முக்காவாசி (எக்சாம் சென்டராக இருக்கும் பட்சத்தில்)மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் எல்லாம் திட்டு வாங்கறாங்க? (கல்வியதிகாரிகள் மட்டும் குறைச்சலா என்ன, வருஷம் பூரா உப்பைத்தின்னுட்டு இருந்தா கடசீல செண்டர்னு வரும்போது தண்ணிக்குடிச்சித்தான ஆகணும். இன்னும் பாதிப்பேர் பதவிய உபயோகப்படுத்தி, பெரிய பள்ளிகளில் பையனுக்கும் பேரனுக்கும் சீட் வாங்குறத்துக்கு காட்ற ஆற்றலை மத்ததுலையும் கொஞ்சூண்டு காமிச்சாலே போதும்). எப்டி உங்க பள்ளிகளில் சீட்டிங் அரேஞ்ச்மென்ட் போடறீங்கன்னு கேட்டா பதில் சொல்ல முடியுமா எல்லாராலையும்?
அந்த மெட்ரிக் போர்டுல இருக்குறவங்களோட மிக நெருக்கமானவங்களே பள்ளிகள் நடத்துனா, நூத்துக்கு நூறு பர்சென்ட்னு பக்கம் பக்கமா பேப்பர் விளம்பரம் கொடுக்கறதுல என்னா அதிசயம்? ஏன் , நெறைய மாநிலங்களில் நம்ம மெட்ரிக் பிராக்டிகல்ஸ் மார்க் பத்தி கிண்டல் பண்ணி பேப்பர்ல ஆர்ட்டிகல் வரும்போது மட்டும் பம்முறாங்க?ஸ்டேட் போர்டுல படிக்கிறவங்களுக்கு பிராக்டிகல்ஸ் கிடையாது, அவங்க புதுசா உயர்நிலைப்பள்ளில கத்துக்கலாம், மெட்ரிக் பசங்களும் அதே கான்கேவ் லென்சை ஏன் புதுசா பாக்குறாங்க?

படிப்புலதான் இப்டின்னா, இதுல எந்த விதத்திலும் பசங்க யோசிக்கிறத்துக்கு, கிரியேட்டிவிட்டிய வளக்கறத்துக்கு வழிவகை உண்டா இந்த பள்ளித்திட்டத்தில்? இந்த பள்ளித்திட்டத்தை தூக்கினாலே தானா தனியார் பள்ளி நிறுவனங்களோட நிலைமை கேவலமா போய், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளோட நிலைமை ஒசந்திடும்.

ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் மட்டும் எப்டி இன்ட்ரஸ்டிங்கா பள்ளியை நடத்துறாங்க? இதுலயும் செயல்வழிக் கல்விதான் ஆரம்பக் கல்வி அப்டிங்கும்போது, அங்க மட்டும் சரிப்படற ஒரு விஷயம் மத்த பாடத்திட்ட பள்ளிகளில் மட்டும் ஒத்துவராதத்துக்கு மாணவர் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை மட்டும் காரணமா, இல்ல, நல்ல ஒரு முயற்சியை வேணும்னே ஒதுக்கனுங்கற மனநிலையா? அங்கருந்து வர்ற பசங்க எப்டி எல்லா பாடங்கள்ளையும் பலமான அஸ்திவாரத்தோட வர்றாங்க? அங்கருந்து வர்ற பசங்க பெரியளவுல படிப்புல கெட்டிக்காரர்களா இல்லைன்னா கூட எல்லாத்தோட அடிப்படையும் புரிஞ்சி, தானா யோசிக்கிற திறன் ஜாஸ்தி உள்ளவங்களா இருக்கறாங்களே அதெப்படி? காலங்காலமா வசதியான, மேல்தட்டு குழந்தைகள் பெரும்பான்மையாக படிக்கிறதால இப்டியா?

சிபிஎஸ்சி பாடத்திட்டம் நம்மூர்ல கையாளப்பட்ட விதமே வேறங்கறதால அதுப்பத்தி சொல்றத்துக்கு ஒண்ணுமில்ல.

Monday 9 March, 2009

கல்லூரிச்சாலை

கல்லூரிச் சாலைன்னு பேர் வெச்சாலும், எங்க கல்லூரிக்கு வர்ற சாலையை நான் சேர்ந்த ரெண்டாவது வருஷம்தான் போட்டாங்க.

ஈசிஆர்ல இருக்கிற பற்பல பொறியியல் கல்லூரியில ஒண்ணுலதான் நான் படிச்சது. அப்போ இருந்த கடைசி வருஷ பசங்கதான் , எங்க கல்லூரியோட முதல் செட். அக்கா தங்கை குரூப்பாட்டம், ஒரு பொறியியல் காலேஜ் வெச்சா இன்னொன்னுக்கு அனுமதி இலவசம்ங்கர மாதிரி இஷ்டத்துக்கு தொடங்கினாங்கல்ல, அதுல ஒண்ணுதான் எங்க கல்லூரியும். ஒரு மிக பேமசான கல்லூரியோட லொடுக்கு தான் எங்க காலேஜ். மெயின் காலேஜை காமிச்சு இதுக்கு ஆள் பிடிப்பாங்க. பின்னாடி இதுவே ஒரு நல்ல நிலைமைக்கு வரும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கையில்லைப் போல. அதத் தொடங்கினதே சினிமாக்கு ஷூட்டிங் லொக்கேஷனுக்கு வாடகைக்கு விட நேர்ந்துக்கிட்டதுக்குதான்னு அப்போ தெரியாது.

இதுல இன்னொரு முக்கிய மேட்டரையும் பாக்கணும், எங்க தல காலேஜ் செம ஸ்டைலிஷான காலேஜ்ன்ற இமேஜ் உள்ள காலேஜுங்கறதுதான் நெறைய பேருக்குத் தெரியும். ஆனா மொதோமொதோ காலேஜுக்குள்ளயே கெஸ்ட் ஹவுஸ் கட்னது எங்க சேர்மேன்தானாம்:):):) குடுகுடுன்னு பேர் சொல்லிக் கண்டுபிடிக்கிறேன் பேர்விழின்னு கெளம்பிரக் கூடாது. நான்தான் முக்காவாசிப் பேருக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனில்ல.

நான் எப்டின்னா, நகை வாங்கணும்னா கூட மல்லூஸ் கடைக்கு போகக் கூடாதுன்னு நெனைக்கிற புத்தி சிகாமணி. குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் அப்டிங்கற கொள்கை சிங்கம். அவங்க நல்லவங்க கெட்டவங்க, இப்டி அப்டின்னெல்லாம் பாகுபாடே பாக்கறதில்ல, மல்லூசா , மாங்காவக் கொட்டயோட முழுங்கரவங்கன்னு ஒரு முடிவோட , ஏமாந்தாலும் மத்தவங்க அரைக்கிற மொளகாயில குளிர் காய்வேனே ஒழிய மலையாளக் கரையோரம் ஒதுங்குவதில்லைன்னு செம காண்டா திரிவேன்.

காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். அதப் பாக்குறத்துக்கு முன்ன இன்னொரு சின்ன ரம்பம்பம் ஆரம்பம்.

நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன். அதால பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு. அடுத்தது, ஸ்டேட்போர்ட்ல பதினொன்னும், கட்டம்கட்டி கலக்கினதுதான். இங்க என்ன கவனிக்க வேண்டிய விஷயம்னா, ஸ்டேட்போர்ட் பசங்க பத்தாவதிலே நல்ல மார்க் எடுத்தா, இந்த சூனாவானா மெட்ரிக் பசங்க அதை நக்கலடிப்பாங்க. ஆனா அடுத்த வருஷம், அந்த ஸ்டேட்போர்டுலயே தலையால தண்ணி குடிப்பாங்க. சரி, நம்ம விஷயத்துல நானும் பனிரெண்டாம் வகுப்பு பாதிவரை கலக்கலோ கலக்கல் தான். நானும் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு மன்த்லி டெஸ்ட்ல இருந்து எல்லாத்திலையும் வாந்தி எடுக்கிறதுதான்.

'பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான். ஆனா அந்த பத்தாங்கிளாசு பயாலஜி ஹேமா மிஸ் மட்டும் உள்ளதிலயே மோசம், அவங்கள மட்டும் இந்த ஆட்டத்துல சேத்துக்க வேணாம்.'
அப்டின்னு, (அடடா இதென்ன சயின்ஸ் பிக்ஷன் கதையான்னு பயந்திட வேணாம்)இப்டியாப்பட்ட ரேஞ்சில் பழைய தினத்தந்தியையும் ஹிந்துவையும் பாத்து பேட்டிக்காக மக்கடிக்கறதுதான், பிராக்டீஸ் பண்றதுதான்னு செம பார்முல இருந்தேன்.

இப்டி இருக்கிற ஒரு நேரத்தில் சினிமால என்னாகும், எதிர்பாராத சம்பவம் ஒன்னு நடந்து அந்தப் பொண்ணோட கனவுகள சிதைக்கும்ல, அது மாதிரியேத்தான் இங்கயும் ஆச்சு. உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு. கனவென்னமோ விக்ரமன் பட கதாநாயகியாட்டம் ஒரே பாட்டுல கலெக்டராகிடனும்னு இருந்தாலும், நானும் பி.வாசு சினிமாவின் யதார்த்தை புரிஞ்சிக்கக் கூடிய காலகட்டம் வந்திச்சு. ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, ஆனா சொல்லி பீத்திக்க முடியாத ரேஞ்சில் வெற்றி. புரட்யூசர்சுக்கு (அம்மாப்பாவுக்கு) நஷ்டமில்லைன்னு தோணினாலும், குரங்கு, நாய் (பள்ளி நிர்வாகம்) எல்லாத்துக்கும் லாபம்தான்னாலும், அதோட (செகன்ட்) ஹீரோ ஹீரோயின் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுவாங்கல்ல அதுமாதிரி.

சொல்றத்துக்கு வேணும்னா பொருளாதார நெருக்கடில்லாம் ஒண்ணுமில்ல, அது இதுன்னு நல்லா இருக்கும். ஆனா அதை பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும், வெத்தலையும் பாக்கும் இல்லாமயே வாய் வெத்தலப்பாக்கு போடுவது எப்படி அப்டீங்கறது.

இதுல இன்னொரு சோதனைன்னா, அக்காக்கு அப்போதான் குழந்தை பிறந்திச்சு. அவங்க மாசமா இருக்கிறப்போ அதை மறைக்கணும், ஏன்னா அவங்க மனசு பாதிக்கப்படக் கூடாது. அது குழந்தைய பாதிக்கும்னாங்க. இதெல்லாம் லாஜிக்கலா வேல செய்யுமா? அதை மறைக்க பாடுபடறேன் பேர்விழின்னு பட்ட டென்ஷன்ல, எரிச்சல் பல்வேறு விதமா அக்காமேலையே திரும்பும். சும்மாவே பிளஸ்டூ படிக்கிறவங்க மனசுல குத்தவுணர்ச்சி, குத்தவெச்சு உக்காந்திருக்கும். ஏன்னா, பொதுவா கண்டுக்காத விஷயத்து மேலயெல்லாம் நமக்கு அப்டி ஒரு ஆர்வம் வரும்ல. எனக்கோ இந்த பொருளாதார நெருக்கடி ஒருவித பொழுதுபோக்காகிடுச்சின்னு நெனைக்கிறேன். சுயவிரக்கம், பிளஸ் குற்றவுணர்ச்சி போதாதா, மக்கடிக்கிறதையும் நிறுத்தியாச்சு. மக்கடிக்கிற கலையோட பூர்ணத்துவமே(இல்ல பூர்ணத்தோட தத்துவமோ), நாம எப்போ புக்கை தொறந்தாலும், பிரஷ்ஷா, புத்தம்புது காப்பியா இருக்கும். ஸெலெக்டிவ் அம்னீஷியா அவங்கண்ணன், சாதா அம்னீஷியாவெல்லாம் துணைக்கு வந்திடும்.

இந்த கேட்டகிரில்லாம் என்ன செய்வாங்க, அதையேத்தான் நானும் செஞ்சேன். ஒடனே ஆர்வமா, தற்கொலை முயற்சியா, அப்டி இப்டின்னு ஆசைப்பட்டிரக்கூடாது. நாம இந்த மாதிரி சாதாரண மேட்டருக்கெல்லாம் என்னைக்கு பீல் ஆகியிருக்கோம், இந்தியா உலகக் கோப்பை ஸெமி பைனலில் தோத்துச்சுன்னா, சச்சின் அப்பா முக்கியமான நேரத்தில போய்ட்டதுக்கு அப்புறம் இந்தியாவோட நிலமைன்னு ஆயிரம் காரணத்துக்காக வர்ற ஒரு யோசனை, இப்டி சப்ப விஷயத்துக்கெல்லாம் சும்மான்னா வருமா?

அதால நான் தெனமும் எக்சாம் இருக்கிறப்போ காலையில் எழுந்ததில் இருந்து, பேப்பரை கட்டி குடுத்திட்டு(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்) அப்பாடா ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம். இதுல கெடைச்ச ஆத்மதிருப்தியப் பாத்து நெறைய பேர் ஜாயின் ஆகிட்டாங்க. நம்ம பள்ளிக்கூடம் வேற சங்கர வித்யாலயா மாதிரி 'சுயவுதவிக்குழு' திட்டத்தில் நம்பிக்கையில்லாத பள்ளியா, அதால ஒரே இம்சை. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸை தவிர மத்ததோட மதிப்பெண்னெல்லாம், கண்முன்னாடி வந்து மதியில்லா பெண்ணேன்னு டான்சாடுது.

நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற. அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, பிசிக்சுக்கு வர்றவர் குத்தாலச் சாரலை விரும்புபவரா, கொத்தவரங்காவுக்கு தம்பியா அப்டின்னு அப்போதைய ஹாட் டாபிக்ஸ் பத்தி தனியே ஒரு பொது அறிவு வளர்ச்சி கோச்சிங் வகுப்பு நடக்கும்.

இப்டியாப்பட்ட நிலமையில...............................

Wednesday 18 February, 2009

கார் இல்லாத கார் கீ / காமன் சென்ஸ் இல்லாத மனுஷன்:):):)