Monday 15 September, 2008

என்டிடிவியும் நானும்

இதன் முதல் பாகம் இங்கே.

எங்கக்கா பார்க்க ரதி மாதிரி(அதாவது பாரதிராஜாவோட புதியவார்ப்புகள் ரதி மாதிரி, ஒடனே எங்கக்காவுக்கு பொளந்த வாயா, வயத்துக்குள்ள தினம் எத்தனை ஈ, கொசு குடிபோகும்னெல்லாம் கேக்காதீங்க, ஏன்னா அவங்களும் இப்போ ப்ளாகர் ஆகிட்டாங்க, அவ்வ்வ்வ்வ்...................) ஓடி வந்து என்கிட்டே நின்னு, "ஏய் உனக்குத்தான்டி போன், என்டிடிவியில் இருந்து ஒரு பல்பு டி, வர்ற வியாழக்கிழமை, நம்ம தமிழ்நாட்டோட தேர்தல் ரிசல்ட் பத்தி ஒரு டிஸ்கஷனாம், அதில் பங்கெடுத்துக்க உன்னை செலெக்ட் பண்ணி இருக்காங்களாம்", அப்டின்னு கிழக்கே போகும் ரயில் ராதிகா கணக்கா சிரிக்கறா.

என்னடா இது ஒருத்தருக்கொருத்தர் சூனியம் வெச்சுக்கறளவுக்கு விரோதம் இல்லைனாலும், இப்டியெல்லாம் ஒருத்தர் நலனில் ஒருத்தர் அக்கறை செலுத்துவோம்ங்கற ஆக்டிங்கெல்லாம் நம்ம வீட்ல வொர்கவுட் ஆகாதுன்னு தெரிஞ்சும் தன்னம்பிக்கையோட முயற்சி பண்றாளே, என்னா விஷயமா இருக்கும்னு தீவிரமா, அந்த நம்பிக்கையோட கைய எடுக்க யோசிக்க ஆரம்பிச்சேன்(யப்பா, இதை எழுதறதுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, என் மூளைய வழக்கம்போல செயல்படவிடாம ஊக்குவிச்சிருப்பேன்) .

என் தொலைநோக்குப் பார்வையை தெளிவா புரிஞ்சிக்கிட்டு, அவளும் விஷயத்துக்கு வந்தா, "நீ, கூட ஒருத்தங்களையும் கூட்டிக்கிட்டு வரணும்னு சொன்னாங்கடி, நானும் வேறவழியில்லாம என் பேரை கொடுத்திட்டேண்டி, பேசின ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்டா வேற பேசினார்டி" அப்டின்னு அடிச்சு விட்டுக்கிட்டே போறா, சரி தீட்டின கம்பியிலயே கூர் பாக்கிறாப் போலன்னு, ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து அதில் லயிச்சேன். திருவாளர் பீட்டர் இறுதி முடிவு தெரிஞ்சிக்க நாளை திரும்பவும் என்னைக் கூப்பிடுவதாக சொன்னதாக சொல்லிட்டு, எங்கக்கா நடையக்கட்டிட்டா.

எனக்கோ டென்ஷனாகிடுச்சி, ஏன்னா என்கிட்டே பல குறைகள் இருந்தாலும், எதிராளி என்னை ஜென்ம விரோதியா பாக்குற அளவுக்கு ஒரு குறை உண்டு. அது என்னன்னா, சாதாரணமா எல்லார் கிட்டயும் சகஜமா பழகற நான், இந்த மாதிரி கூட்டம், விவாதம், கலந்துரையாடல்னா இன்னும் ஜாலியாகிடுவேன். இந்தக் கலை எனக்குள்ள எந்த வயசில் துளிர் விட்டுச்சின்னு தெரியல, ஆனா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து போஷாக்கா வளர்ந்துக்கிட்டே இருக்கு.

என்ன பில்டப் ஜாஸ்தியாகிடுச்சா, சரி விஷயத்துக்கு வர்றேன். ஒரு கூட்டத்தில் நான் போய் உக்காந்தாலே, அங்கு நிகழ்ச்சிய நடத்துறவர்ல இருந்து, கலந்துக்கற மத்த மைக் மோகன்கள் வரை எல்லாரையும் வித விதமா கலாய்க்கறது, அவங்க நடந்துக்கறதை வெச்சும், பேசுறதை வெச்சும் அவங்களை டிஆர், பேரரசு, குரோதம் பிரேம் மாதிரியான தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண்களோட கம்பேர் பண்றது, இல்ல அவங்களோட விவாதம் நடத்தினா எப்படி இருக்கும்னு யோசிக்கறதுன்னு, ஆக்கப்பூர்வமா அறிவ வளப்பேன். இன்னும் அவங்க என்னை மதிக்கறதா தெரிஞ்சா ஒரே கொண்டாட்டம்தான், என்னை ஒருவேளை கேள்விக்கேட்டா, "சீ போ, சொல்ல முடியாது"ன்னோ, "வெவ்வெவ்வே உன் வேலையப் பாத்துக்கிட்டு போ"ன்னோ, இல்லை வேற விதமாக நங்குக் காட்டியோ அவங்களை வெறுப்பேத்தினா எப்படி இருக்கும்னு குஷியா கற்பனைக் குதிரைய தட்டிவிட்டுக்கிட்டு, ஒரு ஸ்மைலிங் பேசோடவே இருப்பேன். இதனால் அந்த நிகழ்ச்சிய நடத்துறவங்க நேர்மாறா புரிஞ்சிக்கிட்டு, என்னையே சுத்தி சுத்தி வருவாங்க.

நான் இப்படி கவலைப்பட்டுக்கிட்டே(எதுக்குன்னா ஒரு வாரத்துக்கு முன்னருந்தே ஒரு பொறுப்பு, பருப்பு பீலுக்கு போக. பின்ன அந்தச் சின்ன விஷயத்துக்காக வாழ்நாள் முழுசும் நாலுபேரை வெறுப்பேத்துற வாய்ப்பை விடுவனா நானு)அடுத்த நாள், நிகழ்ச்சியில் கலந்துக்க சம்மதமும் சொல்லிட்டேன்.

வழக்கம்போல எங்கக்கா முக்கியமான வேலை இருக்கு, அங்க வந்து ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு, கடமையே கண்ணா செல்போனை வீட்டில் மறந்து வெச்சிட்டு போயிட்டா. சாந்தோம் தேவாலயப் பின்புறம் படப்பிடிப்பு. என் ராசிப்படி எல்லா விதத்திலும் தாமதமாகி டென்ஷனாகி, சர்ச்சுக்கு போனப்புறமும் எங்கக்காவைத் தேடி முழிச்சி, ஆட்டோவைக் கட் பண்ண சில்லறை இல்லாத பரிதாப நிலையில், ஆட்டோக்காரர் நவீன கர்ணனா மாற(மாற்ற) முயற்சி நடந்துக்கிட்டிருக்கும்போது, எங்கக்காவை பார்த்து, மினி சண்டை போட்டு, பிரச்சினைய சால்வ் பண்ணிக்கிட்டு படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு போய் சேர்ந்தேன்.

அப்போ என்ன நடந்துச்சின்னா..................

டிஸ்கி: நாளைக்கே இதன் தொடர்ச்சியை கண்டிப்பா போட்டிடறேன், இந்தப் பதிவும் எக்கச்சக்க நீளமாகிடுச்சில்லையா:):):)(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

Saturday 6 September, 2008

முக்கிய அறிவிப்பு(ப்ளாஷ் நியூஸ், யு நோ)

நண்பர்களே, என்னோட மொக்கைய இன்னைக்கு மோகன் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் பிரசுரித்துள்ளார். தலைப்பு, ' லொடுக்கு சுந்தரிகள் : ஒரு பார்வை'. இந்த ஆராய்ச்சிக்கட்டுரை லொடுக்கு சுந்தரிகளின் குமுறல்களை கூறுகின்றது. வந்து உங்கள் ஆதரவை அள்ளி விடுங்க எனக் கேட்டுக்கொள்கிறேன்:):):)

Tuesday 2 September, 2008

என் முதல் கொடூர சஸ்பென்ஸ் கதை

டிஸ்கி 1: கிருஷ்ணா கொஞ்ச நாளைக்கு முன்ன நம்மளோட முதல் அனுபவங்களை பத்தி எழுதச் சொல்லி ஒரு பதிவு போட்டிருந்தார்ல, அதுக்குத்தான் இந்தப் பதிவு.இன்னும் கூட நெறைய இந்த மாதிரி எழுதலாம்னு இருக்கேன்.

நீங்க என்டிடிவிய தொடர்ந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாத நேரத்தில் பார்த்தவரா?
அதில் ஏதாவது நீயா நானா டைப் விவாதம் நடந்துச்சின்னா, படிக்கறதுக்கோ வேலைக்கோ போயே ஆகனுங்கர கட்டாயத்தால கொழாயடிச்சண்டையயும், பஞ்சாயத்தையும் மிஸ் பண்ணிட்ட பீலிங்க ஆத்திக்க, லோக்கல் முகத்த டார்ச்சடிச்சு ட்யூப்லைட்டாக்க முயற்சி பண்ணி, 'மீ த கருத்து சொல்லிங், யு ஆல் வார்த்த குஸ்தி பைட்டிங், நோ தீர்ப்பு கெடச்சிங், தென் வாட் திஸ் பஞ்சாயத்து நோ இண்டிரஸ்டிங்'னு புலம்பினவரா?

இதோட தொடர் நிகழ்வா, அந்த விவாதத்தில் இருந்த (நீங்க ஆணா இருந்தா) பட்சிகளையும், (பெண்ணா இருந்தா) எங்க தல மாதிரி ஹேண்ட்சம், மேச்சோ ரணகள கட்டிளங்காளைகளையும் லுக்கினவரா?

கட்டக்கடசீல எதப்பத்தி விவாதம் நடந்திச்சின்னு யாராவது கேக்கப்போறாங்கன்னு விவாதம் நடத்தின நிகழ்ச்சித் தொகுப்பாளர, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஆணியவியாதி, பெண்ணியவாதி, அது இதுன்னு திட்டிட்டு சேனல எரிச்சலா மாத்தறாப்புல மாத்திட்டு ஓடினவரா?
அப்போ உங்களுக்கும் எனக்கும் இடையில ஒரு பட்டர்ப்ளை எபெக்டு ரேஞ்சு தொடர்பிருக்கு.

எல்லாம் ஏன் இறந்தகாலத்தில் சொல்லிருக்கேன்னா இது பிளாஷ்பேக் பதிவு!!!

எனக்கு எல்லாத்துலயும் மூக்க நொழச்சு நாலு கருத்து சொல்லிட்டு போறதுதான் தொழில், எண்டர்டெயின்மேன்ட் எல்லாம். இங்க வந்தும் அதை தொடந்து செஞ்சேன், பலன், நான் பிளாக் எழுதி பொதுச்சேவை செய்ற மாதிரி ஆகிடுச்சி. இந்த ஆர்வம் என்னோட காலேஜ் நாட்கள்ல இன்னும் ஜாஸ்தி. எப்படின்னா, ஒரு பிரச்சினை, ஸ்டரைக்குன்னா நான் வர்றேன்னு தெரிஞ்சாலே போதும், சும்மா எல்லாரும் தெரிச்சிக்கிட்டு பிரச்சினைய மைக்ரோ செக்கண்டுல தாங்களே சால்வ் பண்ணிக்கறது, நிபந்தனயில்லாம கோரிக்கைகள வாபஸ் வாங்கவும், கோரிக்கைகள ஏத்துக்கவும் பசங்களுக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் போட்டி நடக்குறதுன்னு ஒரே சின்னப்புள்ளத்தனமா இருக்கும்.

இதனால பிரச்சினை இல்லாத ஒரு கொடூர உலகத்தில் தள்ளப்பட்டதை தாங்கிக்கமுடியாம, நான் அடுத்து பாஞ்ச இடம் என்டிடிவி. ஏன் என்டிடிவின்னா, பீயிங் எ மெட்ரோ சிட்டி(நாட் மண்சட்டி)கேர்ள் ஐ ஒன்லி வாட்ச் இங்கிலிபீஸ் சேனல்ஸ், நோ டமில் சேனல் சீயிங், ஓகே?!?!?! ஐ வாட்சிங் ஆல்வேஸ் எம் டிவி, வீ சேனல், என்டிடிவி, பிபிசி, சிஎன்என், ஸ்டார் மூவீஸ், ஸீ இங்கிலிபீஸ் எக்செட்ரா, கேட்ச் மை பாயின்ட்(நன்றி உலகநாயகன்)

இதுல நடக்கற எல்லா ஹாட் டிபேட்ஸ்லையும் நம்ம கருத்த எஸ்எம்எஸ்ல சொல்லச்சொல்லி என்னைய மாதிரி சுயமா சம்பாதிக்காத சோம்பேறிகள உசுப்பேத்துவாங்கல்ல, அதுல எல்லாம் பாஞ்சுக்கிட்டு போய் கருத்தடிச்சி நாட்டோட தலையெழுத்த மாத்தறதுதான் என்னோட மொதோ கடமை, இதுலன்னு இல்லாம அந்த டிவில என்னா கருத்து கேட்டாலும் சும்மா சொய் சொய்யின்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.

நியாயமா பாத்தா நான் அளிச்ச(எங்கப்பா சொத்தை அழிச்ச) பங்களிப்புக்கு என்னைய பிரணாய்ராய் ஒரு பங்குதாரராவே ஆக்கி இருக்கணும். சரி இந்தியால பல்பு நியூஸ் பசங்க சுய உதவிக்குழுவ ஆரம்பிச்சவராச்சே அதால விட்டுட்டேன். இப்படி வழக்கம்போல கணக்கு பரீட்சை கணக்கா, பலனை எதிர்பார்க்காம கடமைய செஞ்சதோட வினைப்பலன்(எப்படி என் பின்நவீனத்துவ வார்த்தை ஜாலம்) வழக்கம்போல நாம எதிர்பாக்குற மாதிரி க்ளைமேக்சுல கிடைச்சிது. என்ன பிரணாய் ராய் உங்க வீட்டுக்கு முட்ட வண்டி அனுப்பினாரான்னு கேக்கக்கூடாது, ஓகே.

அது 2006 மே மாச ஆரம்பத்துல ஒரு நாள், நான் வழக்கம்போல என்னோட ரங்கமணிக்கு 'நம்ம கல்யாணத்துக்கு தடையே இல்ல அன்பேன்னு' பீலா விட்டு மெயிலனுப்பிட்டு, அடுத்தக்கட்டமா மனசுல பெரிய ரகுவரன்னு நெனச்சிக்கிட்டு, வில்லத்தனமா இல்லாத உள்ளடி வேலையெல்லாம் சைலண்டா செஞ்சுக்கிட்டிருந்த எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்ணி கல்யாண வேலைய ஆரம்பிக்க வெக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு டி.ஆர்,'வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜின்னு' கத்தினார்(வேறொன்னுமில்லை, அப்போ அதுதான் என்னோட மொபைல் ரிங்டோன்). எடுத்து ஹலோன்னதும் ஒரு பீட்டர் பையன். அடடே புதுசா ஒரு பே(ங்)க்கு போல, ஹை மாட்னான்டான்னு எனக்கு ஜாலியாகிடுச்சி. ஆனா அந்தப்பையன் பேங்க் கிங்கரன் இல்லைன்னதும் இண்டிரஸ்ட் போய், எங்கக்கா இந்த நம்பரை அவளோட கல்லூரி/பள்ளி நண்பர்கள் யாருக்கோ விடுமுறையில வந்திருக்கறதால கொடுத்திட்டா போலன்னு, என்னா எதுன்னு விசாரிக்காம அவக்கிட்டப் போய் கொடுத்திட்டேன். மறுபடி எங்கப்பாவ எப்படி டார்ச்சர் பண்றதுன்னு யோசிக்க தூள் சொர்ணாக்காவாவே(நாமதான் கேரெக்டரா மாறிடுவோம்ல) கூடு விட்டு கூடு பாய, பீட்டரோஸ்பதி பீஜிஎம்மோட(அதாவது எங்கக்கா உள்ளே இங்கிலிபீஸ்ல டாக்கிங், வாக்கிங்) முயற்சி செய்ய ஆரம்பிச்சேன்.

அப்போ எங்கக்கா என்னமோ அஞ்சப்பர் கிளைய அரிசோனால ஆரம்பிக்கறதா நியூஸ் வந்தாப்போல சிரிச்சிக்கிட்டே வந்து, ஒரு விஷயத்தை சொன்னா, அது என்னன்னா......................... அஸ்கு புஸ்கு இதோட தொடர்ச்சியை வந்து அடுத்தப் பதிவுல பாருங்க :):):)

டிஸ்கி 2: உடனே எல்லாரும் என்னா நடந்திருக்கும்னு, செமையா யோசிக்கவும், மூளைய கொஞ்சமும் உபயோகப்படுத்தத் தேவையும் இல்லாத இந்த சஸ்பென்சுக்கு ஆப்பு வெக்கக் கூடாது. ஹி ஹி, நீங்க நினைக்கறதுதான் நடந்தது. இப்பவே பதிவு எக்கச்சக்க நீளமாகிட்டதால மீதிக்கொடுமய அடுத்த பதிவுல போடறேன், அவ்வ்வ்வ்வ்வ்வ்......................