Thursday 9 April, 2009

கிலோ என்ன விலை?

விகடன்ல இந்த வாரம் பள்ளிக்கல்வி குறிப்பா கிராமப்புற ஆரம்பக் கல்வியின் நிலை பத்தி ஒரு அருமையான கட்டுரை வந்திருக்கு. அதுல விரிவா வந்திருக்குன்னாலும் பெரிய, சிறிய நகரங்களிலும், ஏன் ஒரு காலத்தில் அருமையாக இயங்கிக்கிட்டிருந்த டவுன்ஷிப் ஏரியா பள்ளிகளிலும் கூட இன்னைக்கு நிலைமை மோசமாத்தான இருக்கு.

பொதுவா, ஸ்டேட்போர்ட் சிலபஸ் எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்னாலும் துரதிஷ்டவசமா எங்க வீட்டுப்பக்கத்தில் அப்போ தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இல்லாததால, நான் மெட்ரிக்ல சேர்ந்தேன். அதோட எங்கம்மா வேற தான் பியூசில பிராக்டிகல்ஸ்ல தனிச்சு விடப்பட்டதால ஸ்டேட்போர்டு வேணாம்னுட்டாங்க. அதிருக்கட்டும், ஆனா இன்னிவரை ஒருவேளை அதுல படிச்சிருந்தா நான் அடிப்படைகளில் இன்னும் வலுவா பலப் பாடங்களில் இருந்திருப்பேனோன்னு தோணும். இங்க நான் வெறும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை பத்தி தெரிஞ்சதை முதல்ல எழுதறேன்.

எங்கப்பா சென்னையில் இருக்கிற ஒரு பிரபலமான அரசு உதவிப்பெறும் பள்ளியில் வேலைப்பார்த்தவர். சென்னையோட வியாபார மற்றும் பொருளாதார இதயம்னு சொல்லலாம். எந்த ஏரியாவில் எந்த நகைக்கட, துணிக்கடை, உணவகம் அது இதுன்னு போனாலும் எங்க வீட்ல எல்லாருக்கும் சிறப்பு கவனிப்பு கொடுக்கறாப்போல குறைந்தபட்சம் அந்த பள்ளி மாணவர் ஒருத்தராவது இருப்பார். இன்னும் சொல்லனும்னா, ஷங்கர்ல ஆரம்பிச்சி, அஜீத் விஜய்னு ரெண்டுபேரையும் வெச்சி உலகமகா தொம்மைப்படமெடுத்த சவுந்தர்லருந்து, நம்ம பவர் பாண்டியன் வரை எல்லாரும் அந்தப் பள்ளிக்கூடத்தோட முத்துக்கள்தான். இந்தப் பள்ளிக்கூடம் இப்போ ஓரளவுக்கு அதோட கரஸ்பாண்டென்டால ஒகேவாகிக்கிட்டிருக்குன்னாலும் மத்த பல பள்ளிகளோட நிலைமை இப்டி இருக்கறதால இதை உதாரணமா வெச்சிப்போம். எல்லாப் பள்ளிக்கும் தெய்வநாயகங்கள் பிறந்து வர்றதில்லையே.

மேலே குறிப்பிட்டவங்கல்லாம் எங்கப்பாவை மரியாதையா ஐயாங்கும்போது ஜாலியாயிருக்கிற எனக்கு, அதேப்பள்ளியோட (அதாவது 1992-2002 காலகட்ட)ஜூனியர் மாணவர்கள் மட்டும், வினோதமா ஜயான்னு விளிக்கும்போது கடுப்பாகிடும். இவங்க இப்டி எழுதனும்னு அவங்களுக்கொன்னும் வேண்டுதல் இல்ல. அந்தளவுல அவங்களோட பள்ளியில் கல்வியின் தரம் இருக்குன்னு அப்புறம்தான் புரிஞ்சது.

அப்போல்லாம் அப்பா திருத்த வீட்டுக்கு கொண்டுவர்ற பேப்பர்கள எடுத்துப் படிச்சுப்பாத்து சிரிக்கிறது எனக்கும் எங்கக்காவுக்கும் பெரிய பொழுதுபோக்கு. அப்பா ஸ்கூலுக்கு போனா, பிரேக் சமயத்துல வேணும்னே பெரிய கிளாஸ் பசங்க கிட்ட போய் நக்கல் விடறதுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கறதுதான் பொதுவாழ்வுன்னு இருப்பேன். அவங்க பொதுவா ராவிடுவாங்கன்னாலும், தவ்ளூண்டுக்கிட்ட என்னாத்தப் பேசறதுன்னு விட்டிருவாங்க. டீல எச்சத் துப்பித்தர்றத்துக்கு நான் அப்ப டீயும் குடிக்கமாட்டேன்:):):)

இப்டியாக அப்பா கண்ல படாம நிம்மதியா ஓடிக்கிட்டிருந்த பொதுவாழ்க்கை, ஒரு நாள் பட்டு, பட்டுட்டேன் அறிவுரைகளால.


இத்தனைக்கும் இந்த பள்ளியோட ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள விட பசங்கக்கிட்ட நெருக்கமா இருப்பாங்க. பசங்கக் கிட்ட டீ வாங்கி வர சொல்றது உண்மைதான்னாலும், அதே பசங்களுக்கு வீட்ல கஷ்டம்னா தானே எக்சாம் பீஸ்லருந்து எல்லாத்தையும் அலட்டாம கட்டிருவாங்க. வருஷாவருஷம் பள்ளி மாணவர்களுக்கு தாங்களே காசைப்போட்டு சரவணபவன்லருந்து விருந்து ஏற்பாடு பண்ணிடுவாங்க. பசங்களுக்கு ஒண்ணுன்னா, ஹைகோர்ட் வக்கீல்களாட்டம் அப்டியே பொங்கி எழுவாங்க. எல்லாம் சரிதான், ஆனா அவங்களாட்டமே (நான் சொல்ற காலக்கட்டத்துல) தங்களோட இன்னொரு முக்கிய கடமையான கல்விப்புகட்டுதலை மறந்துட்டாங்க.

ரெண்டாங்கிலாசு படிச்சிட்டிருந்த நானு எட்டாங்கிலாசு ஒம்பதாங்கிலாசு பசங்க பேப்பரை படிச்சு கேலிப்பண்ற ரேஞ்சில இருந்திச்சுன்னா எப்டி? நான் கொழுப்பெடுத்து பண்ண வேலையாவே இருக்கட்டும், அவங்கள்ள பலர் அசாதாரண சூழல்ல படிக்கிறாங்கன்னே இருக்கட்டும், சரவணா ஸ்டோர்ஸ் குலக்கொழுந்துகள் கஜக்கர்ன சூர்ணமாகவே இருக்கட்டும், அதுக்காக அந்தளவுலையா வெச்சிருக்கறது?

இது எதுவும் புதுமையான சூழல் கெடயாதே. முன்னையும் இதே சூழல்ல இருக்கத்தானே செஞ்சாங்க? அப்போ இதே பள்ளில நல்ல வசதியான குடும்பத்து பசங்களும், முக்காவாசி ஆசிரியர்களோட பிள்ளைகளும் படிச்சதால ஒழுங்கா நடத்த முடிஞ்சதுன்னா, அப்புறம் இப்போ மட்டும் ஏன் முடியல?என்னத்த பெருசா நகரங்கள்ல கல்வி வாழுது?

அதெப்படி போதுமான ஆசிரியர் நியமனங்கள ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நிறுத்தி வெச்சு, கிட்டத்தட்ட ஒரு மாணவனோட வாழ்க்கையயே கேள்விக்குறியாக்குதுன்னு தெரிஞ்சும் யாரும் பெரிய பிரச்சினை ஆக்க மாட்டேங்குறாங்க? இது சம்பந்தமா பொதுநல வழக்கு போட்டாலும் ஏன் மீடியாவுல இன்னும் பெருசுப்படுத்த மாட்டேங்குறாங்க?

பெரிய நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத எங்க ஊர்ல இருக்குற அரசுப் பள்ளியின் நிலையும் இதுதான், அந்த ஆசிரியர்களோட பிள்ளைகள் அங்க படிச்சிட்டிருந்த வரைக்கும் அவ்ளோ நல்லா நடந்திட்டு இருந்துச்சி, இப்போ அதுலயும் நிலைமை மோசம்தான். எனக்கு இந்த ஆசிரியர்களோட அக்கறையே புரியறதில்ல. ஏதோ ஒரு பிராடு வாத்தி, ஒரு பத்தாங்கிளாசு பொண்ணு கணக்கு பேப்பர் ரீகவுண்டிங்க்ல வேலையக் காமிச்சத்தை மெனக்கெட்டு, பாடுபட்டு அந்தப் பொண்ணு வீட்டுக்கு தெரியப்படுத்தறவங்க, பையன் ரெண்டுநாள் பள்ளிக்கு வரலைன்னா வீட்டுக்கே போய் என்னா எதுன்னு பாக்குறவங்க ஏன் நார்மலான விஷயமான பயிற்றுவித்தலை செம்மையா செய்றத்துக்கு விசனப்படறாங்க? அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் முக்காவாசிப்பேர் எதுக்கு தனியா ட்யூஷன் சென்டர் ஆரம்பிக்கறாங்க? இவங்கல்லாம் அரசு ஊழியர்கள்தான?


சரி, இவங்கள விட்டுட்டு மெட்ரிக்குலேஷன் பாடத்திட்ட பள்ளிகள் பக்கம் வந்தா, பெரும்பான்மையா அங்கயும் நிலைமை தூன்னு துப்பற அளவுலதான் இருக்கு. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பிரபலமான பள்ளிகளைத்தவிர மத்ததெல்லாம் மோசம்தான். அங்கெல்லாம் புத்திசாலின்னா, என்னோட மறுபதிப்புகள்தான் ஏராளம். மக்கடிச்சு மார்க்கெடுக்கணும் அவ்ளவுதான். புரிஞ்சு படிச்சதா சரித்திரமே இல்ல. போனதரம் கூட சிலப்பேர் கேட்டிருந்தாங்க எப்டி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மக்கடிச்சேன்னு, பத்தாங்கிலாசு வரை நான் ஒரு பாடம் விடாம எல்லாத்தையும் அப்டித்தான் படிச்சேன். வேறவழியில்ல, சொல்லிக்கொடுக்க ஆளில்ல, ஆனா நல்ல மார்கெடுத்து பாசாகணும்னு நெருக்கடி பிளஸ் ஒருவித காம்பிளக்ஸ் இருந்தா எதையும் மக்கடிக்கலாம்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அனுப்பலைன்னா குடும்பத்துல தள்ளி வெச்சிடுவாங்கன்னு அனுப்பறவங்கக் கூட, ட்யூஷனுக்கு ஏன் அரசு பள்ளி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கறாங்க? அதுக்கும் அந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் டீச்சர்கிட்டயே அனுப்ப வேண்டியதுதான? அனுப்பமாட்டாங்க, ஏன்னா, அங்க இருக்குறவங்க முக்காவாசி அனுபவமும் விஷயஞானமும் இல்லாதவங்களா இருக்காங்க, இல்லைன்னா, இன்னும் ஒருபடி மேல போய் அங்க பிசிக்ஸ் மேத்சுக்கெல்லாம் டீச்சரே இருக்க மாட்டாங்க, வேறொரு ஏற்பாட்டில் ஸ்கூல் நடக்கும். இதெல்லாம் தெரிஞ்சும் கேக்கமாட்டாங்க. ஏன்னா அங்க கொட்டிக் கொடுக்க பிறவி எடுத்தவங்களாச்சே எல்லாரும்.

இந்த நிலை அங்க வர காரணம் என்ன, ஒன்னு புற்றீசல் போல பலது தொறந்தது, இன்னொன்னு பசங்கக்கிட்ட கொள்ளையடிச்சு பில்டிங்கா ஏத்திக்கிட்டு போறது, வாகனங்களா வாங்கிக் குவிக்கிறது, ஆனா ஆசிரியர்களுக்கு அதுலருந்து கிள்ளிக் கொடுக்கக் கூட மனசு வராது. என்னதான் காலக் கொடுமைன்னு வந்தாலும், கடைநிலை ஊழியரோட பொண்ணும் பையனும், அவர் வாங்குற சம்பளத்தையே டீச்சரா போய் வாங்கினா அவரு 'ஆஹா இதல்லவோ சமத்துவம்னு சந்தோஷமாப் படுவாரு?'. ஒரு காலத்துல மெட்ரிக் ஸ்கூல்ல வேலப்பாக்குறது பெரிய அதிகாரிகளோட கான்வென்ட் எஜுக்கேட்டட் மனைவிகளுக்கு பெருமையா இருந்துச்சி, இப்போ அப்டியா இருக்கு நிலைமை? ஐடி செக்டர்லையும் கால்செண்டர்லையும் இவங்க போக ஆரம்பிச்சப்புறம் மெட்ரிக் பள்ளிகள் பாடு இன்னும் திண்டாட்டமாச்சு. அப்பவும்கூட திருட்டுத்தனமா பிசிக்ஸ் டீச்சருக்கு தனியா கணக்குல இல்லாம சம்பளம் தருவாங்களே தவிர கொஞ்சம் கூட மனசாட்சிப்படி நடந்துக்க மாட்டாங்க.

ஜனவரி பிப்ரவரி மாதங்களில், மானங்கெட்டத்தனமா கல்வியதிகாரிக்கிட்ட ஏன் முக்காவாசி (எக்சாம் சென்டராக இருக்கும் பட்சத்தில்)மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் எல்லாம் திட்டு வாங்கறாங்க? (கல்வியதிகாரிகள் மட்டும் குறைச்சலா என்ன, வருஷம் பூரா உப்பைத்தின்னுட்டு இருந்தா கடசீல செண்டர்னு வரும்போது தண்ணிக்குடிச்சித்தான ஆகணும். இன்னும் பாதிப்பேர் பதவிய உபயோகப்படுத்தி, பெரிய பள்ளிகளில் பையனுக்கும் பேரனுக்கும் சீட் வாங்குறத்துக்கு காட்ற ஆற்றலை மத்ததுலையும் கொஞ்சூண்டு காமிச்சாலே போதும்). எப்டி உங்க பள்ளிகளில் சீட்டிங் அரேஞ்ச்மென்ட் போடறீங்கன்னு கேட்டா பதில் சொல்ல முடியுமா எல்லாராலையும்?
அந்த மெட்ரிக் போர்டுல இருக்குறவங்களோட மிக நெருக்கமானவங்களே பள்ளிகள் நடத்துனா, நூத்துக்கு நூறு பர்சென்ட்னு பக்கம் பக்கமா பேப்பர் விளம்பரம் கொடுக்கறதுல என்னா அதிசயம்? ஏன் , நெறைய மாநிலங்களில் நம்ம மெட்ரிக் பிராக்டிகல்ஸ் மார்க் பத்தி கிண்டல் பண்ணி பேப்பர்ல ஆர்ட்டிகல் வரும்போது மட்டும் பம்முறாங்க?ஸ்டேட் போர்டுல படிக்கிறவங்களுக்கு பிராக்டிகல்ஸ் கிடையாது, அவங்க புதுசா உயர்நிலைப்பள்ளில கத்துக்கலாம், மெட்ரிக் பசங்களும் அதே கான்கேவ் லென்சை ஏன் புதுசா பாக்குறாங்க?

படிப்புலதான் இப்டின்னா, இதுல எந்த விதத்திலும் பசங்க யோசிக்கிறத்துக்கு, கிரியேட்டிவிட்டிய வளக்கறத்துக்கு வழிவகை உண்டா இந்த பள்ளித்திட்டத்தில்? இந்த பள்ளித்திட்டத்தை தூக்கினாலே தானா தனியார் பள்ளி நிறுவனங்களோட நிலைமை கேவலமா போய், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளோட நிலைமை ஒசந்திடும்.

ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் மட்டும் எப்டி இன்ட்ரஸ்டிங்கா பள்ளியை நடத்துறாங்க? இதுலயும் செயல்வழிக் கல்விதான் ஆரம்பக் கல்வி அப்டிங்கும்போது, அங்க மட்டும் சரிப்படற ஒரு விஷயம் மத்த பாடத்திட்ட பள்ளிகளில் மட்டும் ஒத்துவராதத்துக்கு மாணவர் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை மட்டும் காரணமா, இல்ல, நல்ல ஒரு முயற்சியை வேணும்னே ஒதுக்கனுங்கற மனநிலையா? அங்கருந்து வர்ற பசங்க எப்டி எல்லா பாடங்கள்ளையும் பலமான அஸ்திவாரத்தோட வர்றாங்க? அங்கருந்து வர்ற பசங்க பெரியளவுல படிப்புல கெட்டிக்காரர்களா இல்லைன்னா கூட எல்லாத்தோட அடிப்படையும் புரிஞ்சி, தானா யோசிக்கிற திறன் ஜாஸ்தி உள்ளவங்களா இருக்கறாங்களே அதெப்படி? காலங்காலமா வசதியான, மேல்தட்டு குழந்தைகள் பெரும்பான்மையாக படிக்கிறதால இப்டியா?

சிபிஎஸ்சி பாடத்திட்டம் நம்மூர்ல கையாளப்பட்ட விதமே வேறங்கறதால அதுப்பத்தி சொல்றத்துக்கு ஒண்ணுமில்ல.

15 comments:

Vidhya Chandrasekaran said...

ரொம்ப பெருசா இருக்கு. இருங்க படிச்சிட்டு வரேன்:)

Vidhya Chandrasekaran said...

நான் 8வது வரைக்கும் மெட்ரிக். அதுக்கபுறம் சிபிஎஸ்சி. திரும்பவும் +1, +2 ஸ்டேட் போர்டு. எனக்கு தெரிஞ்சு சிபிஎஸ்சி பாட முறைகள் நல்லாருக்கு. உருஅடிக்க வாய்ப்பே இல்லை.

கோபிநாத் said...

தாக்கிட்டிங்க..;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிலோ என்ன விலை ? எனக்கும் தெரியாது... நான் படிச்ச ஸ்கூல் சர்ச்சை சேர்ந்தது அங்க என்ன அரசியல் இருந்ததுன்னு தெரியாது.. எதோ படிச்சேன் பாஸாகினேன். .அவ்வளவு தான்ப்பா.

Thekkikattan|தெகா said...

ராப்,

அருமையான பதிவு! இதில ஒண்ண பாருங்க நேத்துதான் வீட்டில இதப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்... //எப்படி அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் முக்காவாசிப்பேர் எதுக்கு தனியா ட்யூஷன் சென்டர் ஆரம்பிக்கறாங்க? இவங்கல்லாம் அரசு ஊழியர்கள்தான?// இதுக்காகவே எப்படியெல்லாம் திருட்டு வேலை க்ளாஸ் எடுக்கிற பள்ளிகளில் பண்றாய்ங்கன்னு.

எல்லா இடத்திலும் மண்டிக்கிடக்கிற அரசியலையும், ஊழலையும் பார்த்தா இந்தியா இன்னும் நடக்க வேண்டிய தொலைவு கண்ணுக்கு தெரியற மட்டும் இல்லைன்னு வருது.

இந்தப் பதிவு நான் எழுதியிருக்க வேண்டியதுங்கிற மாதிரி தோணுது. நல்லா அழுத்தம சொல்லியிருக்கீங்க. இதப் போடச் சொல்லுங்க இந்த விகடன், ஜுனியர், போனியர், ஓல்ட், யங் விகடய்ங்கள்லே...

மணிகண்டன் said...

முழு பதிவையும் படிச்சேன்.

ஐசிஎஸ்சி பள்ளிகள் - இது சம்பந்தமா எனக்கு ரொம்ப தெரியாது.

மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியர் மகா மோசம்ன்னு சொல்லி இருக்கீங்க. மிக சரி. நான் போனா கூட சேர்த்துப்பாங்க.

அரசு பள்ளிகள் நடக்கற விதத்துல professionalism கம்மின்னு சொல்லி இருக்கீங்க. அதுவும் சரியானதே.

நான் படிச்சது ஸ்டேட் போர்டு தான். பல நல்ல ஆசிரியர்கள் இருந்து இருக்காங்க.

எல்லாத்துக்கும் மேல பசங்களுக்குல ஒருவித ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்து விடனும். அதை பண்ண கூடிய விதமான பள்ளிகள் அட்லீஸ்ட் academically brighter students produce பண்றாங்க. இப்ப என்னோட பள்ளிக்கூடமும் சொல்லிகற நிலைமைல இல்ல. அந்த குரூப் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற உடன அடுத்தது யாரும் இல்ல. அவ்வளவு தான். ஆசிரியர் பள்ளிகள், ஆசிரியருக்கு கொடுக்கப்படும் ட்ரைனிங் எல்லாம் பாத்தா, நல்ல ஆசிரியர்கள் வருவது தற்செயலான நிகழ்வாகவே படுகிறது.

சம்பளம் நன்றாகவே கொடுக்கப்பட்டாலும் ஆசிரியர்களின் ஈடுபாடு தேய்ந்து கொண்டே தான் வருது. இதுல மேலும் வருத்தம் தரும் விஷயம் "ஆரம்பக்கல்வி தரும் அரசு பள்ளிகளின் நிலைமை" மகா மோசமானதாகவே இருக்கு. மெட்ரிக் பள்ளிகளும் மோசம் தான். ஆனால் படிக்க வரும் குழந்தைகளின் குடும்ப நிலைமை காரணத்தால் இவர்கள் எப்படியோ கரை சேர்ந்து விடுகின்றனர்.

அரசு ஆசிரியர்களுக்கு சலுகை, அரசு ஆசிரியர்களின் யூனியன், யூனியன்களின் அடாவடித்தனம் - இவை அனைவற்றுக்கும் சாதகமாகவே ஒரு கட்சியை சார்ந்த அரசாங்கம் நடந்துவருகிறது. அந்த கட்சிக்கு சாதகமாகவே அரசு ஆசிரியர்களின் வாக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் விழுகிறது. இவர்களை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு செயல்படுகிறது மற்றொரு கட்சி. 80 களின் இறுதியிலும், 90 களின் ஆரம்பத்திலும் ஆசிரியர் வேலைநிறுத்தம் ஒரு வருடாந்திர நிகழ்வாகவே இருந்து வந்தது.

எனக்கு உங்களோட பதிவுல உடன்பாடு இல்லாத ஒரே விஷயம் இந்த டியூஷன் தான். நல்ல டியூஷன் ஆசிரியர்கள் யாரும் பள்ளிகளில் பாடம் ஒழுங்காக நடத்துவது இல்லைன்னு நினைச்சீங்கன்னா, அது முற்றிலும் தவறு. அதே மாதிரி டியூஷன் போறது தவறுன்னு சொல்றது கூட எனக்கு உடன்பாடு இல்ல. நம்ப ஊருல வாழ்க்கை தரத்த நிர்ணயிக்கறது பள்ளிகளில் எடுக்கும் மதிப்பெண்கள் மட்டும் தான் என்ற கண்ணோட்டம் இன்னமும் இருக்கு. எவ்வளவு தான் பள்ளிகளில் ஒழுங்கா நடத்தினாலும் இது ஒரு எக்ஸ்ட்ரா cushion. ஒருஅளவுக்கு economic freedom கிடைச்சவுடன இது தானாகவே மாறும். அப்ப இந்த டியூஷன் எல்லாம் இருக்காது. அட்லீஸ்ட், ஒரு 20 வருடமாவது ஆகும்.

வால்பையன் said...

எங்க போயிட்டிங்க!

பதிவையும் காணோம்!
பின்னூட்டத்தையும் காணோம்.!

Arizona penn said...

hi arul, do u write article on 9th of every month??? :):):):)

அரவிந்த் said...

உங்க பதிவே ஒரு மைல் நீளம்.. பின்னூட்டம் எல்லாம் ஒரு கிலோ மீட்டர் இருக்கு... உஷ்... அப்பா...

நான் படிச்சது(?) அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி... என்னப் பத்தி புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்.. பதினொன்னு, பன்னண்டாவதுல, "என்கிட்டே டியூஷன் வல்லேன்னா இன்டர்னல் அவ்வளவுதான்" என்று மிரட்டல்தான் வந்தது. வகுப்பில் ஒழுங்காக இல்லாததால் வேறொரு நல்ல டியூஷன் போய்த்தான் படித்தேன். நான் டியூஷன் படித்த ஆட்களும், வேறோர் அரசு பள்ளியில் வேலை செய்பவர்கள்தான். இப்போது தனியாக பள்ளியே ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எங்களுடன்தான் டியூஷன் வந்தனர். எல்லாம் நேரம்..

ஆனால், மாணவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு.. எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு பாதி பணம் வாங்கிக் கொண்டு வகுப்பெடுத்தனர். அதை பள்ளியிலே எடுத்திருக்கலாம்.. மற்றபடி சிபிஎஸ்சி, மெட்ரிக் பற்றி எனக்கு தெரியாது. மன்னிக்க..
[என்னுடைய பின்னூட்டமும் அரை மைல் வந்து விட்டதல்லவா???]

தமிழன்-கறுப்பி... said...

இருங்க ஆபீசர் படிச்சுட்டு வாறேன்..:)

ஆமா ரொம்ப நாளா காணலை...?

தமிழன்-கறுப்பி... said...

கோபிநாத் said...
\\
தாக்கிட்டிங்க..;)
\\

பதிவோட நீளத்தை தானே சொல்றிங்க... :)

எம்.எம்.அப்துல்லா said...

என்ன தாயி...நீம்பாட்டு பதிவுத் துரவறம் போயிட்ட. நீ இல்லாம நானும் உன் சம்பந்தி வெண்பூவும்,தாமிராவும் கும்மிங்குற வார்த்தையையே மறந்துட்டோம்

:(((

மங்களூர் சிவா said...

பாதி பதிவு படிக்கறதுக்குள்ளயே டயர்ட் ஆகீட்டேன்.

படிச்ச வரைக்கும், பதிவுல எதோ கருத்து சொல்ல வர்றீங்கன்னு புரியுது.

:)

மங்களூர் சிவா said...

ஒரு வழியா முழுசும் படிச்சேன். வியாபாரம் ஆகிடுச்சு கல்வி. என்ன பண்றது ஒன்னும் புரியலை.

☀நான் ஆதவன்☀ said...

அட ராப்! எங்கிருக்கீங்க ராப்? முன்ன மாதிரி பின்னூட்டெமெல்லாம் போடலனாலும் பரவாயில்லை...இந்த மாதிரி பதிவாவது அடிக்கடி போடுங்க