Monday 9 March, 2009

கல்லூரிச்சாலை

கல்லூரிச் சாலைன்னு பேர் வெச்சாலும், எங்க கல்லூரிக்கு வர்ற சாலையை நான் சேர்ந்த ரெண்டாவது வருஷம்தான் போட்டாங்க.

ஈசிஆர்ல இருக்கிற பற்பல பொறியியல் கல்லூரியில ஒண்ணுலதான் நான் படிச்சது. அப்போ இருந்த கடைசி வருஷ பசங்கதான் , எங்க கல்லூரியோட முதல் செட். அக்கா தங்கை குரூப்பாட்டம், ஒரு பொறியியல் காலேஜ் வெச்சா இன்னொன்னுக்கு அனுமதி இலவசம்ங்கர மாதிரி இஷ்டத்துக்கு தொடங்கினாங்கல்ல, அதுல ஒண்ணுதான் எங்க கல்லூரியும். ஒரு மிக பேமசான கல்லூரியோட லொடுக்கு தான் எங்க காலேஜ். மெயின் காலேஜை காமிச்சு இதுக்கு ஆள் பிடிப்பாங்க. பின்னாடி இதுவே ஒரு நல்ல நிலைமைக்கு வரும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கையில்லைப் போல. அதத் தொடங்கினதே சினிமாக்கு ஷூட்டிங் லொக்கேஷனுக்கு வாடகைக்கு விட நேர்ந்துக்கிட்டதுக்குதான்னு அப்போ தெரியாது.

இதுல இன்னொரு முக்கிய மேட்டரையும் பாக்கணும், எங்க தல காலேஜ் செம ஸ்டைலிஷான காலேஜ்ன்ற இமேஜ் உள்ள காலேஜுங்கறதுதான் நெறைய பேருக்குத் தெரியும். ஆனா மொதோமொதோ காலேஜுக்குள்ளயே கெஸ்ட் ஹவுஸ் கட்னது எங்க சேர்மேன்தானாம்:):):) குடுகுடுன்னு பேர் சொல்லிக் கண்டுபிடிக்கிறேன் பேர்விழின்னு கெளம்பிரக் கூடாது. நான்தான் முக்காவாசிப் பேருக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனில்ல.

நான் எப்டின்னா, நகை வாங்கணும்னா கூட மல்லூஸ் கடைக்கு போகக் கூடாதுன்னு நெனைக்கிற புத்தி சிகாமணி. குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் அப்டிங்கற கொள்கை சிங்கம். அவங்க நல்லவங்க கெட்டவங்க, இப்டி அப்டின்னெல்லாம் பாகுபாடே பாக்கறதில்ல, மல்லூசா , மாங்காவக் கொட்டயோட முழுங்கரவங்கன்னு ஒரு முடிவோட , ஏமாந்தாலும் மத்தவங்க அரைக்கிற மொளகாயில குளிர் காய்வேனே ஒழிய மலையாளக் கரையோரம் ஒதுங்குவதில்லைன்னு செம காண்டா திரிவேன்.

காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். அதப் பாக்குறத்துக்கு முன்ன இன்னொரு சின்ன ரம்பம்பம் ஆரம்பம்.

நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன். அதால பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு. அடுத்தது, ஸ்டேட்போர்ட்ல பதினொன்னும், கட்டம்கட்டி கலக்கினதுதான். இங்க என்ன கவனிக்க வேண்டிய விஷயம்னா, ஸ்டேட்போர்ட் பசங்க பத்தாவதிலே நல்ல மார்க் எடுத்தா, இந்த சூனாவானா மெட்ரிக் பசங்க அதை நக்கலடிப்பாங்க. ஆனா அடுத்த வருஷம், அந்த ஸ்டேட்போர்டுலயே தலையால தண்ணி குடிப்பாங்க. சரி, நம்ம விஷயத்துல நானும் பனிரெண்டாம் வகுப்பு பாதிவரை கலக்கலோ கலக்கல் தான். நானும் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு மன்த்லி டெஸ்ட்ல இருந்து எல்லாத்திலையும் வாந்தி எடுக்கிறதுதான்.

'பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான். ஆனா அந்த பத்தாங்கிளாசு பயாலஜி ஹேமா மிஸ் மட்டும் உள்ளதிலயே மோசம், அவங்கள மட்டும் இந்த ஆட்டத்துல சேத்துக்க வேணாம்.'
அப்டின்னு, (அடடா இதென்ன சயின்ஸ் பிக்ஷன் கதையான்னு பயந்திட வேணாம்)இப்டியாப்பட்ட ரேஞ்சில் பழைய தினத்தந்தியையும் ஹிந்துவையும் பாத்து பேட்டிக்காக மக்கடிக்கறதுதான், பிராக்டீஸ் பண்றதுதான்னு செம பார்முல இருந்தேன்.

இப்டி இருக்கிற ஒரு நேரத்தில் சினிமால என்னாகும், எதிர்பாராத சம்பவம் ஒன்னு நடந்து அந்தப் பொண்ணோட கனவுகள சிதைக்கும்ல, அது மாதிரியேத்தான் இங்கயும் ஆச்சு. உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு. கனவென்னமோ விக்ரமன் பட கதாநாயகியாட்டம் ஒரே பாட்டுல கலெக்டராகிடனும்னு இருந்தாலும், நானும் பி.வாசு சினிமாவின் யதார்த்தை புரிஞ்சிக்கக் கூடிய காலகட்டம் வந்திச்சு. ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, ஆனா சொல்லி பீத்திக்க முடியாத ரேஞ்சில் வெற்றி. புரட்யூசர்சுக்கு (அம்மாப்பாவுக்கு) நஷ்டமில்லைன்னு தோணினாலும், குரங்கு, நாய் (பள்ளி நிர்வாகம்) எல்லாத்துக்கும் லாபம்தான்னாலும், அதோட (செகன்ட்) ஹீரோ ஹீரோயின் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுவாங்கல்ல அதுமாதிரி.

சொல்றத்துக்கு வேணும்னா பொருளாதார நெருக்கடில்லாம் ஒண்ணுமில்ல, அது இதுன்னு நல்லா இருக்கும். ஆனா அதை பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும், வெத்தலையும் பாக்கும் இல்லாமயே வாய் வெத்தலப்பாக்கு போடுவது எப்படி அப்டீங்கறது.

இதுல இன்னொரு சோதனைன்னா, அக்காக்கு அப்போதான் குழந்தை பிறந்திச்சு. அவங்க மாசமா இருக்கிறப்போ அதை மறைக்கணும், ஏன்னா அவங்க மனசு பாதிக்கப்படக் கூடாது. அது குழந்தைய பாதிக்கும்னாங்க. இதெல்லாம் லாஜிக்கலா வேல செய்யுமா? அதை மறைக்க பாடுபடறேன் பேர்விழின்னு பட்ட டென்ஷன்ல, எரிச்சல் பல்வேறு விதமா அக்காமேலையே திரும்பும். சும்மாவே பிளஸ்டூ படிக்கிறவங்க மனசுல குத்தவுணர்ச்சி, குத்தவெச்சு உக்காந்திருக்கும். ஏன்னா, பொதுவா கண்டுக்காத விஷயத்து மேலயெல்லாம் நமக்கு அப்டி ஒரு ஆர்வம் வரும்ல. எனக்கோ இந்த பொருளாதார நெருக்கடி ஒருவித பொழுதுபோக்காகிடுச்சின்னு நெனைக்கிறேன். சுயவிரக்கம், பிளஸ் குற்றவுணர்ச்சி போதாதா, மக்கடிக்கிறதையும் நிறுத்தியாச்சு. மக்கடிக்கிற கலையோட பூர்ணத்துவமே(இல்ல பூர்ணத்தோட தத்துவமோ), நாம எப்போ புக்கை தொறந்தாலும், பிரஷ்ஷா, புத்தம்புது காப்பியா இருக்கும். ஸெலெக்டிவ் அம்னீஷியா அவங்கண்ணன், சாதா அம்னீஷியாவெல்லாம் துணைக்கு வந்திடும்.

இந்த கேட்டகிரில்லாம் என்ன செய்வாங்க, அதையேத்தான் நானும் செஞ்சேன். ஒடனே ஆர்வமா, தற்கொலை முயற்சியா, அப்டி இப்டின்னு ஆசைப்பட்டிரக்கூடாது. நாம இந்த மாதிரி சாதாரண மேட்டருக்கெல்லாம் என்னைக்கு பீல் ஆகியிருக்கோம், இந்தியா உலகக் கோப்பை ஸெமி பைனலில் தோத்துச்சுன்னா, சச்சின் அப்பா முக்கியமான நேரத்தில போய்ட்டதுக்கு அப்புறம் இந்தியாவோட நிலமைன்னு ஆயிரம் காரணத்துக்காக வர்ற ஒரு யோசனை, இப்டி சப்ப விஷயத்துக்கெல்லாம் சும்மான்னா வருமா?

அதால நான் தெனமும் எக்சாம் இருக்கிறப்போ காலையில் எழுந்ததில் இருந்து, பேப்பரை கட்டி குடுத்திட்டு(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்) அப்பாடா ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம். இதுல கெடைச்ச ஆத்மதிருப்தியப் பாத்து நெறைய பேர் ஜாயின் ஆகிட்டாங்க. நம்ம பள்ளிக்கூடம் வேற சங்கர வித்யாலயா மாதிரி 'சுயவுதவிக்குழு' திட்டத்தில் நம்பிக்கையில்லாத பள்ளியா, அதால ஒரே இம்சை. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸை தவிர மத்ததோட மதிப்பெண்னெல்லாம், கண்முன்னாடி வந்து மதியில்லா பெண்ணேன்னு டான்சாடுது.

நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற. அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, பிசிக்சுக்கு வர்றவர் குத்தாலச் சாரலை விரும்புபவரா, கொத்தவரங்காவுக்கு தம்பியா அப்டின்னு அப்போதைய ஹாட் டாபிக்ஸ் பத்தி தனியே ஒரு பொது அறிவு வளர்ச்சி கோச்சிங் வகுப்பு நடக்கும்.

இப்டியாப்பட்ட நிலமையில...............................

47 comments:

ambi said...

Me the first. :)))

ambi said...

இதோ இனிமே நிம்மதியா பதிவை படிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு வரேன். :))

சந்தனமுல்லை said...

ஆகா..வாங்க ராப்! :-)) நீங்களும் கொசுவத்தியா! கலக்குங்க!

சந்தனமுல்லை said...

//நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன்/

:-)) நல்லாவேத் தெரியுமே!

சந்தனமுல்லை said...

//உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு.//

இதான் ராப் டச்!!

வால்பையன் said...

அதுகுள்ள 5 பேரு கமெண்டிட்டாங்களா!

வால்பையன் said...

//காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். //

செம ரைமிங்கா இருக்கே!

சந்தனமுல்லை said...

செம ஜாலி பதிவு ராப்! கோச்சிங் கிளாஸ் ஞாபகப்படுத்தி விட்டூட்டீங்களே..அங்கேதான் ஃப்ரெண்ஸ் புடிக்கறது.கதை பேசறதுன்னு... எங்கே படிக்க முடிஞ்சது!! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மேடம் க்யூரியைக் கூட விடாம திட்டி இருக்கீங்க.. ஹ்ம். :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சாலை ரொம்ப நீளமான சாலை.. திருப்பங்கள் நிறைந்ததா.. ஸ்ட்ரெயிட் ரோடா..?

வால்பையன் said...

//இப்டியாப்பட்ட நிலமையில.................//

தொடரும்
கொஞ்சம் வித்தியாசமா இருக்கு

முரளிகண்ணன் said...

வாங்க வாங்க. இப்பத்தான் வழி தெரிஞ்சதா?

ambi said...

பதிவை படிச்சப்றம் ஒன்னு நல்லாத் தெரியுது. உங்க புரடியுசர்ஸ் (பெத்தவங்க) ரெம்ப நல்லவங்க போல. இல்லாட்டி நீங்க பண்ற அக்கபோருக்கு முதுகுல டின்னு கட்டி இருக்க வேணாம்? சரி மீதி கதைய சீக்ரம போடுங்க. :))

ambi said...

அடிக்கடி டாக்டர் பட்டம் குடுப்பாங்களே அந்த காலேஜ் தானே நீங்க?

என்னால திட்ட கூட முடியாது, ஏன்னா தங்கமணியும் அங்க தான் படிச்சு மெடல் வாங்கினாங்களாம். :))

முரளிகண்ணன் said...

\\(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்\\

சொன்னா எல்லாத்தையும் சொல்லனும். ஒரு சாம்பிளுக்கு இதை மட்டும் போட்டிருக்கேன்.

செமை புளோ. நக்கல் பிரம்மபுத்திரா வாட்டம் பாயுது.

ஆனா காவேரி மாதிரி அடிக்கடி வராம் இருந்துடுறீங்க.

முரளிகண்ணன் said...

\\குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் \\

\\பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு\\

\\பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும்\\


\\மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான்\\

எப்படிங்க இப்படியெல்லாம்?

பட்டயக் கிளப்பீட்டீங்க

அடுத்த பார்ட்டுல லொடுக்கு சுந்தரிகள்ளாம் வருவாங்கள்ள?

எம்.எம்.அப்துல்லா said...

வா தாயி....தூங்கி எந்துருச்சுட்டியா???

எம்.எம்.அப்துல்லா said...

ஆணியெல்லாம் புடுங்கிட்டு அப்புறமா வர்றேன் :)

முரளிகண்ணன் said...

\\வா தாயி....தூங்கி எந்துருச்சுட்டியா???\\

:-)))))))))

\\ஆணியெல்லாம் புடுங்கிட்டு அப்புறமா வர்றேன் :)\\

தலைவி ரொம்ப நாளுக்கு அப்புறமா வந்துருக்காங்க. கடப்பாரையா இருந்தாலும் அப்புறம் பிடிங்கிக்கிலாம். உடனே வாங்க

அபி அப்பா said...

எங்கடா ஆளைக்காணும்ன்னு அறிவிப்பு பதிவு போடலாம்ன்னு இருந்தேன்.

ஏன் பதிவு இத்தன சின்னதா இருக்கு?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, //

நிறைய நல்ல நல்ல விஷயமெல்லாம் பேசியிருக்கீங்க..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான்.//


சூப்பருங்க அக்கா....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் //

அடப்பாவமே

gulf-tamilan said...

college name dpj ??

gulf-tamilan said...

me the 25??

gulf-tamilan said...

:))) ok byeeeeeeeeeee

Thamira said...

ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம்.//

நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற.////

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

புருனோ Bruno said...

வெல்கம் பேக்

புருனோ Bruno said...

//உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது//

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

//ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, //

நச்

வாழவந்தான் said...

//நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான்//
ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் செய்யமுடிஞ்சிதா??
இதுக்கே ஒரு பாராட்டுவிழா எடுக்கலாம் :-)

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

என்டிடிவி தொடர் போல ஒரு மாதத்திர்ற்கு இழுக்காமல் சீக்கிரமே இந்த தொடரை முடிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன் .
அடிக்கடி பதிவிட அன்புடன் கேட்டு கொள்கிறேன் !

கோபிநாத் said...

வாங்க வாங்க அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ;))

கோபிநாத் said...

யக்கோவ் பிளேடு ரொம்ப பெரிய பிளேடாக இருக்கே..!! ;)

கொஞ்சம் சுருக்க முடிங்க ;)

மேவி... said...

sema kalakkal padivu thaan ithu....

me rolling with laughter...

அது எப்படி எல்லோரும் +2 ல ஒரே மாதிரி பீல் பண்ணிருக்கோம் ????

வெண்பூ said...

ரொம்ப நாள் கழிச்சி பதிவு போட்டிருக்கீங்க ச‌ம்பந்தி.. இன்னும் படிக்கல (மன்னிக்கவும், ஆணி அதிகம் அதனால்தான்).. ஒரு அட்டன்டன்ஸ் மட்டும் போட்டுக்குறேன். அப்புறமா வந்து படிச்சிக்கிறேன்..

விஜய் ஆனந்த் said...

woowww!!!!

வாங்க யக்கோவ்...வாங்க!!!

ஆம்ம்மாஆஆஆ.....இம்மாம்பெரிய படிப்பாளியா நீங்க????

வருண் said...

உங்க ஆத்துப்பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுத்து :-)


***நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான்.***

பொதுவா கெமிஸ்ட்ரிதான் கஷ்டமான பாடம்னு சொல்லுவாங்க!


***வாழவந்தான் said...
//நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான்//
ஆர்கானிக் கெமிஸ்ட்ரி எல்லாம் மனப்பாடம் செய்யமுடிஞ்சிதா??
இதுக்கே ஒரு பாராட்டுவிழா எடுக்கலாம் :-)

10 March, 2009 5:37 AM***

அவங்க கெமிஸ்ட்ரில பெரிய ஆளுனு ஹம்பிலா சொல்றாங்க போல! :-)

பாபு said...

//காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். //

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க
இந்த மாதிரி படிச்சு ரொம்ப நாளாச்சு

सुREஷ் कुMAர் said...

நம்ம ஊரு குசும்பு அப்டியே இருக்கு போங்க..
சரி.., கடேசி வரைக்கும் காலேஜ் பேர சொல்லவே இல்ல..

coolzkarthi said...

ராப் ரிட்டன்ஸ்.....

coolzkarthi said...

கலக்கல்.....

coolzkarthi said...

இப்டியாப்பட்ட நிலமையில.....???????

கருணாகார்த்திகேயன் said...

நல்ல படிக்காம மார்க்கும் எடுக்காம
கொட்ட விட்டுட்டு... அத காமடி வேற பன்னுறிங்க

நல்ல பதிவு

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

மங்களூர் சிவா said...

\\பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும்\\

எதுக்கு தேவையில்லாம எங்களை எல்லாம் வம்புக்கு இழுக்குறீங்க!
:))))))))))

மங்களூர் சிவா said...

//ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, //

:))))))))