Monday 24 November, 2008

என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)

வாரணம் ஆயிரம் நானும் பார்த்துட்டேனே:):):) அதால நானும் விமர்சன ஜோதில ஐக்கியாமாகுறேன். இங்கயே சொல்லிடறேன், எனக்கு சூர்யாஅவர்களையும் பிடிக்காது, கௌதம் சாரையும் பிடிக்காது. அதால பதிவு ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும்.

எனக்கு படத்தோட மொதோ அஞ்சு நிமிஷம் பிடிச்சது. அது ஒரு அழகான செல்ப் பில்ட் அப்பா பத்தின படம்னு நெனக்க வெச்சுது. ஆனா அப்புறம் தான் எங்கப்பாவை பத்தி என்னை உணர்வுப்பூர்வமா சிந்திக்கவெக்கப்போற படம்னு புரிஞ்சது. எப்டின்னு கடசீல சொல்றேன்.

எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை. அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது. அடுத்தது படம் முழுக்கபல காட்சிகளில் cliché தூவிட்டா போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ, செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

அப்பாவை இவர்(பையன் சூர்யா) நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. திடீர்னு பாத்தா ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். இதுக்கு 'யாரடி நீ மோகினி'ல தனுஷ் செஞ்ச ஒரே நைட் கோடிங் அளப்பரயே பரவாயில்ல. போதைக்கு அடிமயானப்புறம் பாடற அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.

என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட அழகியலோட காட்சிப்படுத்தலே. இன்னும் சொல்லப்போனா, இவங்க புரிதலை நமக்குப் புரியவெக்கிறேன் பேர்விழின்னு, தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா, அவர் ஹிந்திப்பாட்டை ரசிக்கிறது, பீட்டர் புத்தகம் படிக்கிறது, மனைவியை டார்லிங்க்னு கூப்பிடறதுன்னு 'ரம்பம்'பம் ஆரம்பம்தான்.

சூர்யாக்கு 'டாடி'ன்னு கூப்பிடறது பிடிக்காதுன்னா, முதல்லயே இயக்குனர் கிட்ட சொல்லிருக்கலாம், இப்டி படம் முழுக்க அதை ஒருவித அவஸ்தையோட சொல்லிருக்கவேணாம். சூர்யா கெட்டப் சேஞ் ஓகே, ஆனா அவங்க ரிலீஸ் பண்ண புகைப்படங்கள்ல இருந்த பிரம்மிப்பு படம் பார்த்தப்போ ஏற்படலை:(:(:(

சிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது. திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.

'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.

பிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.

கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? நடைமுறை எப்டின்னு எனக்குத் தெரியல. என் கிளாஸ்மேட் ஒரு பையன், நேவில சேர எக்கச்சக்கமா உழைச்சான், அந்த எக்சாம்கு அவ்ளோ படிச்சான். இதுல சர்வ சாதரணமா எல்லாம் முடிஞ்சிடுது. பிளஸ், வயசு, கணக்குல கொஞ்சம் இடிக்குது. சரி, நான் ஜாஸ்தி சொல்லமுடியாது, ஏன்னா அது ஒரு பெரிய துறை, எனக்கு நெறைய விஷயம் தெரியாம இருக்கும்.

நானெல்லாம் நாலு மணிநேர படம்னாக் கூட ஒழுங்கா இருந்தா பாப்பேன்(வேலையா வெட்டியா:):):)) .அப்டிப்பட்ட என்னயே அரைமணிநேரத்துல கடிகாரம் பாக்க வெச்சுட்டாங்க.

பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?

பொதுவா எனக்கு கற்பனைகளில் மிதக்க வெக்கிற படங்கள் பிடிக்கும், அதே மாதிரி நம்மளை யோசிச்சு புரிஞ்சிக்க வெக்கிற படங்களும்(அப்போதானே நமக்கு மூளைன்னு ஒரு வஸ்து இருக்கறதே ஞாபகத்துக்கு வருது)ஆனா அநியாத்துக்கு முழு படத்தோட லீடையும் கற்பனையிலையே ஓட்டிக்கோன்னு சொல்றதுதான் கடுப்பா இருக்கு.

முதல்ல சொன்ன விஷயம், இந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் அல்லது ஒரு சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.

என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.

159 comments:

முரளிகண்ணன் said...

me the first

முரளிகண்ணன் said...

அப்பாடா, பல நாள் கனவு. இன்னைக்கு நிறைவேறிருச்சு. இதோ, படிச்சிட்டு வந்துர்றேன்

குசும்பன் said...

me the 2nd

குசும்பன் said...

அப்பாடா, பல நாள் கனவு. இன்னைக்கு நிறைவேறிருச்சு. இதோ, படிச்சிட்டு வந்துர்றேன்

rapp said...

ரொம்ப நன்றிங்க முரளிகண்ணன் சார்:):):)

rapp said...

வாங்க குசும்பன்:):):)
ஏன் நீங்க ரெண்டாவதா இருக்கணும்னு கனவு காணறீங்க?

வெண்பூ said...

ம்ம்ம்ம்ம்... உங்க விமர்சனமும் அந்த படம் மாதிரியேத்தான் இருக்குது :))))

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நக்கலா சம்மந்தி:):):) உங்களுக்கு சரியான தண்டனை, படத்துக்கு ஒரு டிக்கட்தான்.

Thamiz Priyan said...

அப்ப படத்தைப் பார்க்கலாமா? வேண்டாமான்னு சொல்லலியே?...;)

ராஜ நடராஜன் said...

//எனக்கு சூர்யாஅவர்களையும் பிடிக்காது, கௌதம் சாரையும் பிடிக்காது. அதால பதிவு ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும்.//

இதுக்கும் மேலே பதிவைப் படிச்சேன்னு நினைக்கிறீங்க:)

ambi said...

//பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?//

ஹஹா செம குத்து.

விமர்சனம் டர்ர்ர்னு கிழிச்சுட்டீங்க போல!

கார்க்கிபவா said...

சரியா சொன்னிங்க தலைவி.. (வாரணம்) ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம தல படம் மாதிரி வருமா? நீங்க அந்த அளவுக்கு எதிர்பார்ப்போட போயிருப்பிங்க..

தமிழ் அமுதன் said...

''எங்க சித்தப்பா மன்னார் சாமி''

''எங்க பெரியப்பா வெள்ளாங்கோயில் வீராசாமி''

''எங்க தாத்தா தர்மலிங்கம்''

''எங்க மாமா ஆவுடையப்பன்''

உங்க தலைப்ப பார்த்தோன தோணினது
முழுசா படிச்சுட்டு அப்புறம் வரேன்

ஐயோ ஒன்னு மறந்துட்டேன்!


''எங்க பெரிய மாமா கலிய மூர்த்தி''

கபீஷ் said...

//அதால பதிவு ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும்.
//
என்ன ஒரு தெளிவு!!

கபீஷ் said...

//திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.
//

பாவங்க நீங்க, ஏன்னு நீங்களே திங்க் பண்ணிக்கோங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப். .. காப்பி நல்லா இருக்குதுன்னு என் மகளே கண்டுபிடிச்சிட்டா..பாட்டெல்லாம் நல்லா இருக்கு ஆனா ஒரே மாதிரி இருக்குன்னு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆனா இந்த பதிவில் ராப் டச் மிஸ்ஸிங்க்.. அவசர அவசரமா எழுதிட்ட..உன் கமெண்டுக்கு நான் என் பதிவில் பதில் போட்டிருக்கேன்..

rapp said...

தமிழ் பிரியன் அண்ணே, நான் குருவி கூட பாக்கச் சொல்வேன். அது நீங்க எனக்கு எத்தனப் பின்னூட்டம் போடரீங்கங்கரதப் பொறுத்து:):):)

கபீஷ் said...

//என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.//

படத்துல யானை வரல்லைன்றீங்களா?

rapp said...

ஹி ஹி ராஜநடராஜன் சார், நாமதான் உண்மையைத்தவிர வேறொன்னும் எழுத மாட்டோம்ல:):):)

rapp said...

அம்பி அண்ணே, எனக்கு நானே சாம்பார் வைத்துக் கொள்ளும் தன்னம்பிக்கயால இத எழுதிருக்கேன்:):):)

rapp said...

ஆமாங்க கார்க்கி, தல (அகிலாண்ட நாயகன) போல வருமா:):):)

லெனின் பொன்னுசாமி said...

halloo.. enakku een pathivu podda matterai sollala..:(

vanmaiyakaa kandikkiReen.

rapp said...

ஜீவன் சார் இப்டித்தான இருக்கு படத்தோட தலைப்பு:):):)

rapp said...

me the 25TH

rapp said...

கபீஷ், அவங்க மொத்தமா நாலு சீன்ல தான் வராங்க. நான் வேற சூர்யாவைத் திட்ட சீன் பை சீனா பாத்துக்கிட்டு இருந்தேனா, அதுல அவங்கள எங்க திட்ற அளவுக்கு பாக்குறது.

rapp said...

ஹி ஹி முத்து, பதிவு உங்க பதிவுல போட்ட பின்னூட்டத்தோட தொடர்ச்சிதான்:):):) ஆனா என்னைய இப்டில்லாம் கலாசக் கூடாது:):):)

rapp said...

//படத்துல யானை வரல்லைன்றீங்களா?//

ரெண்டு யானை இருக்குங்க. ஆனா படத்தை பார்த்து நீங்களே முடிவுப் பண்ணிக்குங்க:):):)

முரளிகண்ணன் said...

\\ஜாலி பீட்டோரோஸ்பதி \\
\\அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது\\

ராப் டச்

\\திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.
\\

அருமை


\\பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?
\\

ஹா ஹா ஹா ஹா


ராப் உங்க விமர்சனத்த படிக்கும் போது எனக்கு சுப்புடு தான் ஞாபகம் வர்றார்

rapp said...

வாங்க லெனின் சார். உங்க மெயில் ஐடி இல்லையே.

rapp said...

ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், முரளி சார், ரொம்ப ரொம்ப நன்றி:):):)நீங்க ஜாலியா சொன்னாலும் அவர் நெஜமாவே நல்ல மனசோட விமர்சனம் எழுதுவார். நியாயமாவும் இருக்கும்ல:):):)நான் ஹீரோவும், இயக்குனரும் பிடிக்காதுன்னு காண்டுப் பதிவுல்ல எழுதிருக்கேன்:):):) அட்லீஸ்ட் படத்துல பாடல்களை அழகா படமாக்கியிருந்தாலாவது சூப்பரா இருக்கும்:):):)

கபீஷ் said...

//பொதுவா எனக்கு கற்பனைகளில் மிதக்க வெக்கிற படங்கள் பிடிக்கும், அதே மாதிரி நம்மளை யோசிச்சு புரிஞ்சிக்க வெக்கிற படங்களும்(அப்போதானே நமக்கு மூளைன்னு ஒரு வஸ்து இருக்கறதே ஞாபகத்துக்கு வருது)ஆனா அநியாத்துக்கு முழு படத்தோட லீடையும் கற்பனையிலையே ஓட்டிக்கோன்னு சொல்றதுதான் கடுப்பா இருக்கு.
//
இது உங்க மூளையின் முழு திறனுக்கு விடப்பட்ட சவால்

SK said...

சோ நோ வாரணம் ஆயிரம் ஆல்சோ யா..

குட் குட்

rapp said...

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், கபீஷ் நீங்க இவ்ளோ நேரமா யோசிச்சு யோசிச்சு கலாய்க்கரா மாதிரி, அவங்களும் ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வா இழுத்து கலாய்க்கறாங்க:):):)

rapp said...

அய்யயோ எஸ்கே, ஜாலியாப் பாருங்க:):):) நான் பதிவோட மொதல்ல சொன்ன விஷயத்தையும் கணக்குல எடுத்துக்கணும் நீங்க:):):)

Unknown said...
This comment has been removed by the author.
பரிசல்காரன் said...

உங்க பதிவை விட..

//ஜீவன் said...

''எங்க சித்தப்பா மன்னார் சாமி''

''எங்க பெரியப்பா வெள்ளாங்கோயில் வீராசாமி''

''எங்க தாத்தா தர்மலிங்கம்''

''எங்க மாமா ஆவுடையப்பன்''

உங்க தலைப்ப பார்த்தோன தோணினது
முழுசா படிச்சுட்டு அப்புறம் வரேன்

ஐயோ ஒன்னு மறந்துட்டேன்!


''எங்க பெரிய மாமா கலிய மூர்த்தி''
//

இதை ரொம்ப ரசிச்சேன்ப்பா!

பரிசல்காரன் said...

உங்க பதிவுல கமெண்ட்ஸ் ரெட்டை இலக்கத்தைத் தாண்டறதுக்குள்ள நான் ஒரு கமெண்ட் போடணும்ங்கற என் பலநாள் கனவு, இன்னைக்கு நிறைவேறிடுச்சு!

Unknown said...

//என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.//

Highlight.. :))
Super review.. :))

Unknown said...

me the 40 ;))

rapp said...

சூப்பர் பதிவுங்க கார்க்கி

rapp said...

வாங்க கிருஷ்ணா சார்:):):) தோடா நாங்க தலைப்பே கொடுத்துட்டோம், இவர் லீட் எடுத்தவங்களை ரசிக்கிறார்:):):) ரொம்ப நன்றி:):):)

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க ஸ்ரீமதி:):):)

சந்தனமுல்லை said...

//ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.

என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை. //

ROTFL ராப்!!

சந்தனமுல்லை said...

வழக்கம் போலவே முழு மூச்சோட படிச்சிட்டேன்! :-) நல்ல யதார்த்தமா செம ப்ளோவுல போகுது பதிவு! சூப்பர்!

Sanjai Gandhi said...

தியேட்டர் போய் படம் பாத்தவங்க கூட இப்டி விமர்சனம் பண்ணலை.. நெட்ல ஓசியைல பாத்துட்டு லொள்ள பாரு.. லோலாயி பாரு.. எகத்தாளத்த பாரு..
:))))

//என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை. //

ஹிஹி.. ஆனாலும் இது சூப்பரு :))

கலைஞரின் வாரிசுகள் ஏன் இப்படி கலை வெறி... சாரி கொலை வெறியோட அலையாறங்கன்னு தெரியலை..
குருவி, காதலில் விழுந்தேன், வாரணம் ஆயிரம்... இன்னும் என்ன டார்ச்சர் எலலாம் தரப் போறாங்களோ? :(

லெனின் பொன்னுசாமி said...

enna innikku pinnuddam koraiyuthu? y?

rapp said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க சந்தனமுல்லை:):):) ஹி ஹி, நான்தான் மொதல்லயே ஒருதலைபட்சமா இருக்கும்னு சொல்லிட்டேனே, நீங்க வேற எதுக்கு யதார்த்தம் அது இதுன்னு நக்கல் பண்றீங்க:):):)

rapp said...

சஞ்சய், ரொம்ப ரொம்ப நன்றிங்க:):):) நாங்கெல்லாம் யாரு, இதுக்கே இப்டி அசந்துட்டீங்களே, ஆயிரம் கொடுமைகள் தொடர்ந்தாலும் லைப் ஹேஸ் டு கோ:):):)

rapp said...

me the 50TH:):):)

rapp said...

ஆமாங்க லெனின், எல்லாரும் திங்கக்கிழமைன்னு வேலைப் பாக்கறாங்க போல. திட்டக் கூட யாரையும் காணோம்:):):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla pathivu

நசரேயன் said...

இதை விட கேவலமா ஒரு படத்துக்கு விமர்சனம் பண்ண முடியுமாங்கிறது சந்தேகம் தான் :):)

லெனின் பொன்னுசாமி said...

//வாங்க லெனின் சார். உங்க மெயில் ஐடி இல்லையே.//
plenin@gmail.com - nammalodathu ithu.

நசரேயன் said...

நான் படம் பார்க்கலாமுன்னு இருந்தேன், உங்க விமர்சனத்தை படிச்சு புட்டு முடிவை மாத்திட்டேன்

சென்ஷி said...

இந்த மாதிரில்லாம் மிரட்டுனா நாங்க சமீரா ரெட்டிய பார்க்காம விட்டுருவோமா.. கண்டிப்பா சினிமா பார்க்கத்தான் போறோம் :)

rapp said...

ரொம்ப நன்றிங்க ராதாகிருஷ்ணன் சார்:):):)

rapp said...

ஹி ஹி நசரேயன் நீங்க விமர்சனத்த திட்டறீங்களா, இல்ல நல்லாருக்குன்னு சொல்றீங்களா?:):):) ஹி ஹி என்னையெல்லாம் கன்சிடர் பண்ணாதீங்க, நீங்கக் கண்டிப்பா படத்தைப் பாருங்க:):):) எவ்வளவோ செஞ்சிட்டோம், இதச் செய்ய மாட்டோமா:):):)படத்தைப் பார்த்துட்டு, கலக்கலா ஒரு விமர்சனமும் போடுங்க:):):)

rapp said...

லெனின் சார் அடுத்த தரம் கண்டிப்பா சொல்றேன் புதுப் பதிவு போட்டவுடன்:):):)

rapp said...

me the 60TH:):):)

rapp said...

சென்ஷிண்ணே, எச்சரிக்கை செய்றது எங்கக் கடமை, செஞ்சிட்டோம்:):):) அப்புறம் உங்க இஷ்டம்:):):)

//அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை தன் கூட்டுக்காய் தன் குஞ்சுக்காய் அலைமோதிக் கரைகிறது எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும் இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.//

பார்க்கரத்துக்கு முந்தியே இப்டின்னா, பாத்தப்புறம் எப்டி இருப்பீங்க:):):)

சென்ஷி said...

//அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை தன் கூட்டுக்காய் தன் குஞ்சுக்காய் அலைமோதிக் கரைகிறது எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும் இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை.//

அக்கா.. இது கவிதை கலாப்ரியாவோடது...

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெரியாதா எங்களுக்கு, அதையும் சேர்த்துத்தானே அங்க போட்டிருந்தீங்க:):):) என் பாயிண்டை புரிஞ்சுக்கோங்க, பொதுவா நீங்க பின்நவீனத்துவ ரேஞ் விஷயங்களத்தான ரணகளமா டீல் பண்ணுவீங்க:):):) இது அழகான எல்லாருக்கும் புரியற வரியாகயிருக்கில்லையா:):):)

கார்க்கிபவா said...

//rapp said...
சூப்பர் பதிவுங்க கார்க்கி//

என்னக்கா இது? சம்பந்தமில்லாமல் இங்க இருக்கு

சென்ஷி said...

//பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது? //

உண்மையிலேயே இது அசத்தல்...

சென்ஷி said...

//rapp said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தெரியாதா எங்களுக்கு, அதையும் சேர்த்துத்தானே அங்க போட்டிருந்தீங்க:):):) என் பாயிண்டை புரிஞ்சுக்கோங்க, பொதுவா நீங்க பின்நவீனத்துவ ரேஞ் விஷயங்களத்தான ரணகளமா டீல் பண்ணுவீங்க:):):) இது அழகான எல்லாருக்கும் புரியற வரியாகயிருக்கில்லையா:):):)
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

காஞ்சு போன நதியெல்லாம் வத்தாத கடலே பார்த்து ஆறுதலடையும்..

அந்த கடலே வத்திப்போச்சுன்னா..

வாட் வீ டூ :(((

இப்படித்தான் அடுத்தவங்க கவிதைய உதாரணம் காட்ட முடியும் :))

சென்ஷி said...

அதுக்காக நான் என்னிய கடலுன்னு உதாரணம் சொன்னேன்னு நினைக்கப்படாது... இப்பவே சொல்லிப்புட்டேன்..

சென்ஷி said...

//என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.//

ஓ.. பதிவோட மெசேஜ் இங்கதான் உக்கார்ந்திருக்குதா :))

சென்ஷி said...

//கார்க்கி said...
//rapp said...
சூப்பர் பதிவுங்க கார்க்கி//

என்னக்கா இது? சம்பந்தமில்லாமல் இங்க இருக்கு
//

அட! அக்கா பதிவைப்பத்தி பாராட்டியிருக்காங்க.. (யாரோட பதிவுன்னு கேக்க மாட்டீங்களே?)

குடுகுடுப்பை said...

இது என்னாது சினிமா விமர்சனமா.?
//பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?//

அவர இன்னாதான் பண்ண சொல்றீங்க, அவரு டீ போட்டா யாரு குடிக்கறது. பேசரத மட்டும் பாருங்க ராத்திரி பகல உலைச்சாராம்.

குடுகுடுப்பை said...

என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.

இது ரொம்பச்சரி திருமதி இராப்.

குடுகுடுப்பை said...

மனைவியை டார்லிங்க்னு கூப்பிடறதுன்னு 'ரம்பம்'பம் ஆரம்பம்தான்.
//

நான் இன்னைக்கு கூப்பிட்டு பாக்கிறேன்

rapp said...

அட ஆமாம் சென்ஷிண்ணே, இது கார்க்கி பதிவுல போட வெச்சிருந்தது, இங்க போட்டுட்டேன். கவனிக்கலே. இப்போ என்னாங்கறீங்க வாரணம் ஆயிரம்ல சமீரா அழகாயிருக்காங்கன்னு சொல்லனுமா:):):) எனக்கு அவங்க நடிச்ச ஹிந்திப் படங்களில் அழகாயிருக்காங்கன்னு தோனுது, எண்ணப் பண்ணச் சொல்றீங்க:):):)

குடுகுடுப்பை said...

கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? நடைமுறை எப்டின்னு எனக்குத் தெரியல

//
இந்தப்படம் அப்பா பாசத்தை மிகைப்படுத்தி காட்ட ராணுவம் அமெரிக்கா அப்படின்னு என்னோட கணிப்பு, அப்புறம் கவுதம் தமிழோ,கிரமாமோ தெரியாது

சென்ஷி said...

//"என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)"//

நான், சென்ஷி (I, Robot மாதிரி :))

குடுகுடுப்பை said...

நெறய இடம் எரிச்சல் கொடுத்தாலும் மொத்ததில எனக்கு படம் பிடிச்சதுங்க.

குடுகுடுப்பை said...

போதுமா 77

சென்ஷி said...

ஹை.. நான் தான் 75 :))

சென்ஷி said...

//என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட அழகியலோட காட்சிப்படுத்தலே.//

ஹி..ஹி.. நான் கூட இதுவரைக்கும் எந்த எலக்கியத்தந்தையையும் பார்த்ததில்ல.. சோ வெயிட்டீஸ் :))

சென்ஷி said...

//குடுகுடுப்பை said...
போதுமா 77
//

பத்தாது.. இது 80 :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த படத்தை பார்க்கவைக்க நான் பதிவு போட்டா.. நீ யாரும் பாக்காம இருக்கனும்ன்னே இந்த எதிர்பதிவ போட்டிருக்க.. ஆனா யாரும் அப்படி எல்லாம் பயந்தவங்க இல்ல.. எல்லாரும் அப்படி என்னதான் ராப்புக்கு பிடிக்கலன்னு பார்க்கவாவது பாப்பாங்க..நிச்சயமா..

rapp said...

ஹா ஹா ஹா, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க குடுகுடுப்பை:):):)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதே ராப் அம்பி பதிவில் போய் இந்த ப்டத்துல நல்ல நல்ல பாயிண்ட்லாம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்ட உண்மையை யாருக்கும் சொல்லாம மறைக்கிறாங்க.. விசாரணைக்கமிஷன் தான் வைக்கனும்..

சென்ஷி said...

//எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை.//

ஆஹா! தெரியாம போச்சே.. இது உங்க வீட்டுப்படமா... அதனாலதான் கௌதம் மேல இந்த கொலவெறியா :))

குடுகுடுப்பை said...

ஹா ஹா ஹா, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க குடுகுடுப்பை:):):)

நான் எங்க கருத்து சொன்னேன், சும்மா பொய் நன்றியெல்லாம் சொல்லக்கூடாது.

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
இந்த படத்தை பார்க்கவைக்க நான் பதிவு போட்டா.. நீ யாரும் பாக்காம இருக்கனும்ன்னே இந்த எதிர்பதிவ போட்டிருக்க.. ஆனா யாரும் அப்படி எல்லாம் பயந்தவங்க இல்ல.. எல்லாரும் அப்படி என்னதான் ராப்புக்கு பிடிக்கலன்னு பார்க்கவாவது பாப்பாங்க..நிச்சயமா..
//

அப்ப இது முத்துக்காவோட எதிர்வினை பதிவா....

நாராயணா..நாராயணா..

சென்ஷி said...

//குடுகுடுப்பை said...
ஹா ஹா ஹா, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க குடுகுடுப்பை:):):)

நான் எங்க கருத்து சொன்னேன், சும்மா பொய் நன்றியெல்லாம் சொல்லக்கூடாது.
//

சபாஷ்.. சரியான போட்டி... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சரி நீங்கள்ளாம் நூறு போடறதுக்காக ஒரு பின்னூட்டம் உதவிக்கு.. குட்நைட்ப்பா எல்லாருக்கும்..

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
இதே ராப் அம்பி பதிவில் போய் இந்த ப்டத்துல நல்ல நல்ல பாயிண்ட்லாம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்ட உண்மையை யாருக்கும் சொல்லாம மறைக்கிறாங்க.. விசாரணைக்கமிஷன் தான் வைக்கனும்..
//

விசாரணை கமிஷனுக்கு எவ்வளவு கமிஷன் தருவீங்கக்கா... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

க்ளோபலா நம்ம வேலை (?) செய்யறதால.. பகல் வந்தவங்களுக்கு .. நற்பொழுது அதாங்க குட் டே..

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
சரி நீங்கள்ளாம் நூறு போடறதுக்காக ஒரு பின்னூட்டம் உதவிக்கு.. குட்நைட்ப்பா எல்லாருக்கும்..
//

குட் நைட்க்கா உங்களுக்கும் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அச்சச்சோ எல்லாரும் 90 ஐ விட்டுட்டீங்களே ..!

rapp said...

//நான், சென்ஷி (I, Robot மாதிரி :))//

எப்டி இந்த ஜெயில்ல எல்லாம் அடைக்கரத்துக்கு முன்ன பெசவேச்சு ரெக்கார்ட் பண்றதா காமிப்பாங்களே, அப்டியா சென்ஷிண்ணே:):):)



//நான் கூட இதுவரைக்கும் எந்த எலக்கியத்தந்தையையும் பார்த்ததில்ல.. சோ வெயிட்டீஸ் //

சென்ஷிண்ணே, நீங்க எப்போ லவ் பண்றது, எப்போ அவங்க ஒத்துக்கறது, அப்புறம் எப்போ கல்யாணம் பண்றது, அப்புறம் எப்போ நீங்க அப்பாவாகி, இலக்கியத்தந்தையாகிறது, அதை எப்போ நாங்க பாக்கறது:):):)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
க்ளோபலா நம்ம வேலை (?) செய்யறதால.. பகல் வந்தவங்களுக்கு .. நற்பொழுது அதாங்க குட் டே..
//

எது பிஸ்கட்டா :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

90 பத்தி பேச வந்ததால திரும்பவும் குட்நைட்..அண்ட் குட் டே சொல்லிக்கிறேன்ப்பா.. பிறகு சந்திக்கலாம்..

rapp said...

ஹா ஹா ஹா குடுகுடுப்பை நான்தான் சொல்லிருக்கேனே படத்தை ஒருதலைபட்சமா விமர்சனம் பண்ணிருக்கேன்னு, அதால என் விமர்சனத்தை ஜாலியா விட்டிருங்க:):):)
எவ்வளவோ செய்றீங்க இதச் செய்ய மாட்டீங்களா:):):)

rapp said...

ஹி ஹி, எப்டியோ முத்து, நான் அடிக்கிற ஜல்லிக்கே இவ்ளோ எபெக்டு இருக்கும்னு நெனைக்கறீங்களா:):):) நல்லவேள மைபிரண்ட் வரலை, வந்திருந்தா, ஹே டண்டனக்கா, ஹே டனக்குனக்காதான் இங்க:):):)

rapp said...

100:):):)

சென்ஷி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
அச்சச்சோ எல்லாரும் 90 ஐ விட்டுட்டீங்களே ..!
//

இல்லியே.. நாந்தான் 90 :))

அதுக்குள்ள நீங்க முந்திக்குவீங்கன்னு பார்த்தேன் :))

rapp said...

சூடிக்கொடுத்த சுடர்கொடி மாதிரி, நான் தன் பதிவுல தானே அடித்த தனக்கொடி:):):)

சென்ஷி said...

//சென்ஷிண்ணே, நீங்க எப்போ லவ் பண்றது, எப்போ அவங்க ஒத்துக்கறது, அப்புறம் எப்போ கல்யாணம் பண்றது, அப்புறம் எப்போ நீங்க அப்பாவாகி, இலக்கியத்தந்தையாகிறது, அதை எப்போ நாங்க பாக்கறது:):):)//

போச்சு.. போச்சு.. ஆரம்பமே எப்போ எப்போன்னு கேக்கப்போய்த்தான் எதுவுமே நடக்காம இருக்குது... நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்ல்லு :))

குடுகுடுப்பை said...

"என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)"

எப்படியோ டிஆர் மாதிரி ராப்பும் எப்படியும் பதிவ 100க்கு மேல ஓட்டிடுராங்க

சென்ஷி said...

//rapp said...
சூடிக்கொடுத்த சுடர்கொடி மாதிரி, நான் தன் பதிவுல தானே அடித்த தனக்கொடி:):):)
//

:((

என்னடா.. அக்கா பதிவுல உடாம ஒருத்தன் கும்மி அடிக்கறானேன்னு கொஞ்சமாச்சும் ஈவு, இரக்கம் இருந்ததுன்னா 100 விட்டுக்கொடுத்திருப்பீங்க...

அரவிந்த் said...

\\என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.\\

எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கு.. ஏன்னா அவன் என் தம்பி.. எனக்கும் எனக்குமே சம்பந்தம் இருக்கு... ஏன்னா நாந்தான் சம்பந்தம்..

அண்ணே, அவனுக்கு புரிஞ்ச மாதிரியே தெரியலைண்ணே...

Check "http://www.youtube.com/watch?v=lDj7rvKUcpA"

(ஹி..ஹி.... படித்தவுடன் ஞாபகம் வந்தது.. அதான்..)

சென்ஷி said...

// வருங்கால முதல்வர் said...
"என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)"

எப்படியோ டிஆர் மாதிரி ராப்பும் எப்படியும் பதிவ 100க்கு மேல ஓட்டிடுராங்க
//

இல்லைன்னா ஓட்டி விட்டுர்ரோம் :))

சென்ஷி said...

//அரவிந்த் said...
\\என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.\\

எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இருக்கு.. ஏன்னா அவன் என் தம்பி.. எனக்கும் எனக்குமே சம்பந்தம் இருக்கு... ஏன்னா நாந்தான் சம்பந்தம்..

அண்ணே, அவனுக்கு புரிஞ்ச மாதிரியே தெரியலைண்ணே...

Check "http://www.youtube.com/watch?v=lDj7rvKUcpA"

(ஹி..ஹி.... படித்தவுடன் ஞாபகம் வந்தது.. அதான்..)
//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. அப்ப அந்த படத்துல யாரோட பேரு சம்பந்தம்..??

சென்ஷி said...

மீ த 110 :)

சென்ஷி said...

111.....

ஓக்கே.. வந்தவய்ங்க.. வரப்போறவங்க எல்லோருக்குமே குட் நைட், குட் மார்னிங், குட் ஆஃப்டர் நூன், குட் ஈவினிங், குட் பை சொல்லி விடை பெறுவது உங்கள் அபிமான

சென்ஷி..சென்ஷி..சென்ஷி..சென்ஷி..சென்ஷி..

மறுக்க்கா நாளைக்கு வந்து குட் நைட்ல கும்மிய ஆரம்பிப்பேன்னு நினைக்குறேன். பார்ப்போம் :))

rapp said...

//இதே ராப் அம்பி பதிவில் போய் இந்த ப்டத்துல நல்ல நல்ல பாயிண்ட்லாம் இருக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்ட உண்மையை யாருக்கும் சொல்லாம மறைக்கிறாங்க.. விசாரணைக்கமிஷன் தான் வைக்கனும்//

விசாரனைக்கமிஷன்லாம் எதுக்குங்க முத்து, அதுல என்ன பிரியாணியா தருவாங்க:):):) அதான் அங்க சொன்னேனே மருமக உடைச்ச பொன்குடம்னு:):):)ஹையா முத்து என் பதிவில்தான் இவ்ளோ பின்னூட்டம் போடறாங்களே:):):) சென்ஷிண்ணே இதுக்கு என்ன சொல்றீங்க:):):)


//நீங்கள்ளாம் நூறு போடறதுக்காக ஒரு பின்னூட்டம் உதவிக்கு.. //

ஹி ஹி, நான்தானே நூறாவது பின்னூட்டம் தட்டினேன்:):):)

//க்ளோபலா நம்ம வேலை (?) செய்யறதால//

இவ்ளோ சொல்றீங்க, ஆனா பதிவை மட்டும் சீக்கிரம் போட்டு, என்னை மீ த பர்ஸ்ட் போட விடாம சதி பண்றீங்க:):):)

rapp said...

//நான் எங்க கருத்து சொன்னேன், சும்மா பொய் நன்றியெல்லாம் சொல்லக்கூடாது.//

குடுகுடுப்பை, கருத்து சொல்லைன்னா, அப்புறம் நீங்க கருத்துப் போலீஸ் இல்லைன்னு ஆகிடும். அப்புறம் பதிவுலகே ஆஆடிடும்:):):)

rapp said...

அரவிந்த், ஒரு உரையில் ஒரு கத்திதான் இருக்கலாம். அதுப்போல ஒரு ஷேவிங் செட்டில் ஒரு பிளேடுதான் இருக்கலாம். அது மொக்க பிளேடா இருந்தாலும்:):):) நீங்க இப்டி போட்டிக்கு வர்றது நல்லால்ல:):):)

rapp said...

//இது உங்க வீட்டுப்படமா... அதனாலதான் கௌதம் மேல இந்த கொலவெறியா//

சென்ஷிண்ணே, இதைவிட கர்ணகொடூரமால்லாம் நாங்க சில பீட்டரோச்பதிகல பாத்திருக்கொம்ள, பின்ன நம்மக்கிட்டயே இவரு டகிலு பிகுலு ஆல் ஷோஸ் ஹவுஸ்புல்லுனா:):):)

//அப்ப இது முத்துக்காவோட எதிர்வினை பதிவா....

நாராயணா..நாராயணா//

தோடா, கண்டுப்பிடிச்சுட்டாரு அண்ணன், அவங்கக்கிட்ட சொல்லிட்டுத்தான் நாங்க இப்டி செஞ்சோம். நாங்க எல்லாம் வீரம் வெளஞ்ச மண்ண சேர்ந்தவங்கண்ணே:):):) ஹே டண்டனக்கா, ஹே டனக்குனக்கா:):):)


//சென்ஷி said...
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
க்ளோபலா நம்ம வேலை (?) செய்யறதால.. பகல் வந்தவங்களுக்கு .. நற்பொழுது அதாங்க குட் டே..
//

எது பிஸ்கட்டா
//
ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........கொலை கொலை கொலப்பண்றாங்க, பிளேடுகள் சங்கத் தலைவிக்கே இப்டியா:):):) போன பதிவாட்டம் ஒன்னு போட்டாத்தான் சரிவரும் உங்களுக்கு:):):)

// ஆரம்பமே எப்போ எப்போன்னு கேக்கப்போய்த்தான் எதுவுமே நடக்காம இருக்குது//

நீங்க பின்நவீனத்துவத்த வெச்சு பூச்சாண்டி காட்டினா அப்டித்தான்:):):) எங்கள மாதிரி டெர்ரரா இருக்கணும்:):):)

//எப்படியோ டிஆர் மாதிரி ராப்பும் எப்படியும் பதிவ 100க்கு மேல ஓட்டிடுராங்க//

வாங்க வருங்கால முதல்வர்:):):) இதுக்கு சென்ஷி அண்ணனே பதில் சொல்லிட்டாரு:):):)



//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. அப்ப அந்த படத்துல யாரோட பேரு சம்பந்தம்..??//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................

Anonymous said...

//பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது? //

என் கருத்தும் இதேதான். தாம் தூம் விமர்சனத்துல இதேதான் எழுதியிருக்கேன்.

Unknown said...

"பையன் அப்பாவை உள்வாங்கிக்கிற மாதிரி ஒரு பீலே வரலை","ஒரு அழகியல் உணர்வே இல்லாமப் படமாக்கப் பட்டிருக்கு."

intha varikalodum ,unga pathivodum migavum othu pogiren ..

neengaa intha interview padichathu unda .. ilena avasiyam padikavum ..
http://www.desipundit.com/baradwajrangan/2008/06/05/interview-gautam-vasudev-menon/
http://www.desipundit.com/baradwajrangan/2006/12/17/interview-gautham-menon/

antha interview vijay sonna mathiri ..

"Reading this interview, I again get the impression again that the guy just thinks too much of himself, for having given just one good film so far.
"Like I said it is not the “peter” per se which is the problem. It is the framing of those phrases that is the problem."

“There’s a line in the film where Divya looks at Surya and says, “You look like a million bucks.” Now, how do I write that in Tamil? We tried. Then I said, “Forget it.””

"See, this is his problem. why does he want to write THAT line in Tamil? Cant he think of a totally different line in Tamil that conveys the same? Stop watching Hollywood DVDs, you kid. If you cant communicate or think in Tamil, get a screenwriter like Mani Rathnam did."

http://www.desipundit.com/baradwajrangan/2008/11/22/between-reviews-in-the-name-of-the-father/


thanks for posting ..
vivek.j

rapp said...

வந்ததற்கும் கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் ரொம்ப நன்றிங்க வேலன் சார்:):):)

rapp said...

வாங்க விவேக், ரொம்ப நன்றிங்க:):):) நீங்க கொடுத்திருக்கும் சுட்டி அருமை. அதில் விஜய் அவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களை நான் அப்படியே வழிமொழிகிறேன். இந்தப் படத்தோட ஆங்கிலக் கலப்பு மட்டுமே படத்த அசுவாரிசியப்படுத்தல, அயர்ச்சியடயவெக்கல. ஆனா அதை அவரு டெலிபுரேட்டா செய்றதுதான் உறுத்துது. அவங்க எல்லாம் பேசறவிதம் அரவேக்காட்டுத்தனமா தோனுது, ஆனா இவர் அவங்களை அப்டிப்பட்ட அரைவேக்காட்டு குடும்பமா சொல்ல வரலை. இதுல இருந்து நாம எப்டி எடுத்துக்க முடியும்:):):) அஞ்சலி படம் கூடத்தான் அப்பர் மிடில்கிளாஸ், ஆனா அது நான் பாக்கிற, பார்த்த குடும்பங்களைப் பிரதிபலிச்சுது. அங்க விஜய் சார் சொல்லிருக்க மாதிரி எனக்கு தெளிவா விளக்கங்களை எடுத்துவெக்கத் தெரியல:):):)

நானேக் கூட மேஜிக் மொமன்ட்சை மிகவும் விரும்புவேன், அவைகள பலமுறை அனுபவிச்சு திக்குமுக்காடிருக்கேன், இன்னும் சொல்லப்போனா என் காதல் கல்யாணமே அப்டி ஒண்ணுதான், பட் படத்துல வர்ற சூர்யா(அப்பா அண்ட் மகன், ரெண்டு பேரோடதும்) காதல் காட்சிகளும், மேஜிக் மொமன்ட்சும் என்னை என் மேஜிக் மொமென்ட்ஸ் நோக்கி கொண்டுப்போகலை, ஏன் ஒரு சின்ன நாஸ்டால்ஜியாக் கூட ஏற்படலை. மேஜிக் சீன்சோட கான்செப்டே, நாமே அந்த இடத்துல இருந்து அனுபவிக்கிற மாதிரி தோணனும், ஆனா அது படத்துல சுத்தமா இல்லை.

உங்க பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றிங்க விவேக்:):):)

rapp said...

me the 120th:):):)

புதுகை.அப்துல்லா said...

121

புதுகை.அப்துல்லா said...

125

அப்பாடா லேட்டா வந்ததுக்கு 5 பின்னூட்டம் தண்டம் கட்டியாச்சு :)

புதுகை.அப்துல்லா said...

4 நாளா கல்கத்தாவுகு அனுப்பிச்சு கொடுமை பண்ணீட்டாய்ங்க... அதான் லேட்டு. இன்னைக்குப் பங்காளி தாமிராவும் லீவு முடுஞ்சு வந்து ஜாய்ண்ட போட்டுருவாரு :)

புதுகை.அப்துல்லா said...

//சந்தனமுல்லை said...

வழக்கம் போலவே முழு மூச்சோட படிச்சிட்டேன்
//


அம்மாடி தாயி.. அரை மூச்சோட யாராவது படிக்க முடியுமா??? எக்ஸ்பிளைன் பிளீஸ் :)))

புதுகை.அப்துல்லா said...

மீ த 130

ஆளில்லா கடையில எம்மா நேரந்தான் குந்திகினுகீறது??? வர்ட்டா...

SurveySan said...

good one.

but 131 for this is too much ya :)

Anonymous said...

இன்னாமா கண்ணு, நாந்தான் சூர்யா புடிக்காதுன்னா படம் பாக்கவேணாம்னு சொன்னேன்ல. பாத்துட்டு இம்புட்டு புலம்புனா எப்படி.

Anonymous said...

//'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க//

எனக்கு நெசம்மாவ்வே இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. ஒரு பதிவாவே போடுங்களென்.

narsim said...

//கௌதம் சாரையும் பிடிக்காது//

பிடிக்காதவங்களை "சார்"னு கூப்பிடுவீங்கனு தெரிஞ்சுகிட்டேன்..

//அழகியலோட காட்சிப்படுத்தலே.//

சிற்றிதழ் ரேஞ்சு வார்த்தைகள்ல பின்னிட்டீங்க!!

//சூர்யாக்கு 'டாடி'ன்னு கூப்பிடறது பிடிக்காதுன்னா, முதல்லயே இயக்குனர் கிட்ட சொல்லிருக்கலாம்//

பளீர் பளார்!

//என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.
//

உதாரண முத்தாய்ப்பு!

rapp said...

அப்துல்லா அண்ணே, உங்கள புகந்து ஒரு போஸ்ட் போட்ட ஒடனே ஓடி வந்துட்டு இங்க சால்ஜாப்பா சொல்றீங்க:):):) சந்தமுல்லை கிட்ட இப்டி நக்கல் பண்ணீங்கன்னா, பப்பு டென்ஷனாகிடுவாங்க. இப்போ அவங்க அம்மாவை காக்குற பொறுப்பை ஏத்துக்கிட்டு இருக்காங்க:):):) அதால ஜாக்கிரதை:):):) உங்க பாதுகாவலர் ரெண்டு பேரும் ஊர்ல இருக்கறதால இப்போ வாயக் கொடுத்து வன்முறைய தூண்டாதீங்க:):):)

rapp said...

சின்ன அம்மிணி, நீங்க சொன்னா நாங்க கேக்கனுமா, நாங்கெல்லாம் அகிலாண்ட நாயகன் ரசிகர்கள்:):):) எங்க தல பேச்சையே நாங்கக் கேக்க மாட்டோம்:):):) போந்தான்னா ஒருமாதிரி பொதுக்குன்னு எப்பப்பார்த்தாலும் தூங்கிவிழுற மாதிரியே இருக்கறது:):):) ஆனா அவங்க அமேரிக்கா போனவுடன் நல்லா இருக்காங்க:):):) எப்டி விளக்கம் போதுமா:):):)

rapp said...

சர்வேசன் சார், நாமதான் பின்னூட்ட புயலாச்சே:):):) எப்புடி????:):):)

rapp said...

நரசிம் சார், உங்களால கம்னு இருக்க முடியாதே, எல்லாத்தையும் 'சலசல சலசல ரெட்டைக்கிளவின்னே' டீல் பண்ணுவீங்களே:):):) அது என்னன்னா, பேர் சொல்லி கூப்டு கூப்டு போரடிக்குது, இப்போ நம்ம பண்பாடு பகீர் அவதாரம் எடுத்து எல்லாருக்கும் மரியாதை கொடுக்க சொல்லுது:):):)
சிற்றிதழ், அதாவது என்னை மாதிரிப்பட்டவங்களை, உங்கள மாதிரிப்பட்டவங்க ஒப்பனா திட்டக்கூடிய பத்திரிக்கைகள்:):):)

புதுகை.அப்துல்லா said...

உங்க பாதுகாவலர் ரெண்டு பேரும் ஊர்ல இருக்கறதால

//

என்னாது பாதுகாவலராஆஆஆஆஆஆ...
நீ ஊருக்கு வர்றப்போ அந்த ரெண்டு பேரையும் பக்கத்துல இருந்து பார்த்துட்டு அப்புறமா சொல்லு :))

புதுகை.அப்துல்லா said...

உங்கள புகந்து ஒரு போஸ்ட் போட்ட ஒடனே ஓடி வந்துட்டு இங்க சால்ஜாப்பா சொல்றீங்க:):):)

//

ஹி..ஹி...ஹி... இப்படியெல்லாம் ஒப்பன்ல மானத்த வாங்கக்கூடாது :))

rapp said...

//இப்படியெல்லாம் ஒப்பன்ல மானத்த வாங்கக்கூடாது //

அண்ணே மானம்னா என்னண்ணே, அது கிலோ என்ன விலை?:):):)

கோபிநாத் said...

\\நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.\\


நான் இன்னும் பார்கல...;))

கைப்புள்ள said...

மீ தி 143ர்ட்

கைப்புள்ள said...

//எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை. அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது.//

படிச்சிட்டு தான் கமெண்ட் போடறேன்...இது 144த்து

கைப்புள்ள said...

//கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? //

டிபன் கேரியர்???
:)

கைப்புள்ள said...

//என் தந்தை சௌந்திரராஜன்//

அப்போ உங்க பேரு சௌ.ராப்... எப்படி கரெக்டா சொன்னேன் பாத்தீங்களா?

கைப்புள்ள said...

147

Sanjai Gandhi said...

/அப்போ உங்க பேரு சௌ.ராப்... எப்படி கரெக்டா சொன்னேன் பாத்தீங்களா?//

ஹிஹி :))

கைப்புள்ள said...

//(என் தங்கை கல்யாணி//

உங்க தங்கச்சி பேரு சௌ.கல்யாணி...ஆம் ஐ ரைட்?
:)

கைப்புள்ள said...

150...அடிச்சாச்சு

Sanjai Gandhi said...

:))

Sanjai Gandhi said...

கொஞ்சம் வெய்ட் பண்ணி இருக்கலாமோ? :(

கைபுள்ள.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு நாளைக்கு 13 வேளை மாவாட்டனும்னு சபிக்கிறேன்.. :)

கைப்புள்ள said...

கடைசியா கும்முனது 2006ல...பேச்சிலரா கும்மனதுக்கும் மேரீட் மேனா கும்மறதுக்க்கும் டிஃபரென்ஸ் பாக்கலாம்...சாப்புட்டுட்டு வாரேன்...வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ்.

கைப்புள்ள said...

//ஒரு நாளைக்கு 13 வேளை மாவாட்டனும்னு சபிக்கிறேன்.. :)//

அது என்ன 13 கணக்கு?

Unknown said...

"நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் அல்லது ஒரு சீன் வெக்க மாட்டேங்கறாங்க.."
entha mathiri appavai pathi ponunga prunchukka virupapadaranga ..

"நானேக் கூட மேஜிக் மொமன்ட்சை மிகவும் விரும்புவேன், அவைகள பலமுறை அனுபவிச்சு திக்குமுக்காடிருக்கேன், இன்னும் சொல்லப்போனா என் காதல் கல்யாணமே அப்டி ஒண்ணுதான்"
intha magic moments pathi koncham vilakkama solla muduncha sollunga ,yenna antha mathiri anupavichuthu illa , allathu ithu ponnungalaku mathum nadakira visayama ?..

ithellam pathi thaniya oru pathivu podungalen time irunthuna ..
ila short sonna kuda okay than ..

sorry for typing like this ..
thanks for the reply ..
vivek.j

rapp said...

ரொம்ப நன்றிங்க கோபி அண்ணே:):):)

rapp said...

ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், கைப்புள்ள வாட் இஸ் திஸ்?:):):)
//அப்போ உங்க பேரு சௌ.ராப்... எப்படி கரெக்டா சொன்னேன் பாத்தீங்களா?//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என் ரங்கமணியோட குடும்பப் பெயர் இராப்:):):) என் பேர் வேற.
//உங்க தங்கச்சி பேரு சௌ.கல்யாணி...ஆம் ஐ ரைட்?
:)//

உங்க நக்கலுக்கு என்னோட புது போஸ்ட் கவுஜதான் சரியான தண்டனை:):):)



//கடைசியா கும்முனது 2006ல...பேச்சிலரா கும்மனதுக்கும் மேரீட் மேனா கும்மறதுக்க்கும் டிஃபரென்ஸ் பாக்கலாம்//

கண்டுபிடிச்சீங்களா இல்லையா?:):):)

rapp said...

ஹா ஹா ஹா, சஞ்சய் 150 மிஸ் பண்ணிட்டீங்களா:):):)

rapp said...

me the 160th:):):)

rapp said...

//entha mathiri appavai pathi ponunga prunchukka virupapadaranga //

ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இப்டி ஏன் வினோதமா புரிஞ்சிக்கிட்டீங்க:):):)பொண்ணுங்களுக்கு அவங்கவங்க அப்பாவைப் பத்தி புரியும். நான் இங்க சொல்றது வாரணம் ஆயிரம் அப்பாவை:):):)


//intha magic moments pathi koncham vilakkama solla muduncha sollunga ,yenna antha mathiri anupavichuthu illa , allathu ithu ponnungalaku mathum nadakira visayama ?..//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுல என்ன பொண்ணு, பையன்:):):) உங்களுக்குக் குழந்தை பிறக்கும்போது டெலிவரி ரூம்ல உங்க மனைவியோட இருங்க, அப்போப் புரியும்:):):)

//ithellam pathi thaniya oru pathivu podungalen time irunthuna ..
ila short sonna kuda okay //

அது எவ்ளோ பெரியக் கத, ஏற்கனவே இப்பல்லாம் யாரும் கால்வாசிக் கூட என்பதிவ படிக்க பயப்படறாங்க, இதுல இந்தக் கதைய எழுதுனேன்னா அவ்ளோதான்:):):) சின்னதா ஒரு விஷயத்தை சொல்லத்தெரிஞ்ச ஆள் மாதிரியா இருக்கேன் நான்:):):) இந்த உலகம் இன்னுமா என்னைய நம்புது:):):)

Unknown said...

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இதுல என்ன பொண்ணு, பையன்:):):) உங்களுக்குக் குழந்தை பிறக்கும்போது டெலிவரி ரூம்ல உங்க மனைவியோட இருங்க, அப்போப் புரியும்:):):)"

ithuku mothalla poi oru kalyanam pananumnga , nan poi mothalla antha velaiya pakiren .. :))

anyway thanks for ur reply ..
vivek.j

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், விவேக் இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கலயா, அதுக்குள்ள மேஜிக் மொமன்ட்ஸ் தெரிஞ்சிக்கனுமா:):):)(ஓகே ஓகே,அது பொதுவானதுதான், மத்த நேரத்துல, எல்லாம் அவன் செயல்னுட்டு போவோம், லவ் பண்ணா, மேஜிக்னு ஜல்லியடிப்போம்:):):))

coolzkarthi said...

நாயகன் ரித்திஷ் கிட்ட tuition அனுப்பிடலாமா?

லிங்காபுரம் சிவா said...

You review is Total Bull Shit.

Just watch the movie and enjoy it (while watching the movie assume that samething is happening in your life).

rapp said...

கார்த்தி என்ன இருந்தாலும் தல போல வருமா:):):)

rapp said...

சிவா, உங்க பின்னூட்டம் கூட எனக்கு புல்ஷிட்டாத்தான் தெரியுது. நீங்க சொல்ற மாதிரி படம் பாக்கனும்னு எனக்கு அவசியமில்ல, உங்கள மாதிரி அரவேக்காடுகளுக்கான படமிதுன்னு இப்போ இன்னும் தெளிவாத் தெரியுது:):):)

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.

:))))))))