Tuesday 18 November, 2008

உண்மைத்தமிழன் அவர்களுக்கு போட்டியாக...

என்னை இந்தத் தொடருக்கு அழைத்த கார்க்கி அவர்களுக்கு ரொம்ப நன்றி.
எனக்கு நூலகங்கள் சுத்தமா பிடிக்காது. காரணம் அங்கெல்லாம் திருப்பி கொடுக்கணுமே, அப்போதானே அடுத்த புக்கை எடுக்க முடியும். அதேப்போல புது புத்தகங்களும் பிடிக்காது. காசு ஒரு காரணம்னாலும், இது 'ஆகி வந்த புக்குங்கர' பீல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்பென்சர் எதிர்லையும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல இறங்கி சூளை சைட்ல போனீங்கன்னா இருக்கிற பழைய புத்தகக்கடக்காரங்கக்கிட்டயும்(இவங்கக் கிட்ட எல்லா புது புக்சும் இருக்கும்) என் போட்டோ காமிச்சீங்கன்னா நம்ம பெருமை புரியும்(இத வெச்சு தாராளமா நக்கல் பண்ணுங்கப்பா:):):)).

புத்தகம் வாசிக்கும் பழக்கம்ங்கறது எனக்கு ரொம்பச் சின்ன வயசுல இருந்தே உண்டு. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் என்னுடன் விளையாடக் கூடிய வயதில் யாருமில்லையாதலால், இந்தப் பழக்கம் வந்துச்சி. எங்க வீட்டை வீடுன்னு சொல்றதவிட சிறிய சமையலறையும் படுக்கைகளும் கூடிய நூலகம்னு சொல்லலாம். எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).

எங்கப்பா தமிழாசிரியர்ங்கரதாலயும், திமுக அனுதாபிங்கரதாலையும் சின்ன வயசுல முக்காவாசி தமிழில்தான் இருக்கும். அப்புறம் எங்கக்கா ரொம்ப நல்ல மாணவிங்கரதால அப்போ இருந்த ஸ்கூல் ஹெச்எம் சிஸ்டர் அவங்களே நெறைய நல்ல ஆங்கில புத்தகங்களை தருவாங்க. சோ, எனக்கு இவங்க ரெண்டு பேரோட புத்தகங்கள் பிரச்சினையே இல்லாமக் கிடைச்சிடும். அப்புறம் எங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பல ஆங்கில மாத இதழ்களுக்கு சந்தாதாரரா இருந்தார். பல புத்தகங்கள் வந்தாலும் அவற்றில் என்னை ரொம்ப கவர்ந்தது, சோவியத் யூனியன் மேகசின் ஒன்று. அதில் அந்தந்த மாதத்தில் உலகத்தில் நடந்த முக்கியமான சமூக, அறிவியல் நிகழ்வுகள் படங்களோட வரும். அதை நான் தனியா சேமிச்சு வெச்சு, எங்க குடும்ப நண்பர் ஒருத்தங்களோட தீசிஸ்கு கொடுத்திட்டேன்:):):) முன்னல்லாம் யார்வீட்டுக்குப் போனாலும் ரீடர்ஸ் டயஜஸ்ட் தூக்கிட்டு வந்திடுவேன். அதெல்லாம் இப்போக் கூட என்கிட்டே இருக்கு.

நான் நாளிதழ்கள் படிக்கிறதை கணக்குல சேர்த்துக்கலை, மத்தபடி ஆனந்த விகடன், குமுதம், முத்தாரம் இதெல்லாம் ஒன்னாங்கிலாசுலே இருந்தே படிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் சின்ன வயசுல பிஞ்சுல பழுத்த குரங்குக் குழந்தையா இருந்ததுக்கு இதுவும் காரணும்னு நினைக்கிறேன். நாலாங்கிலாசு போனப்புறம் எல்லா தொடர்கதைகளையும் படிப்பேன். நானும் எங்கக்காவும் எப்டின்னா காலையில் எழுந்ததில் இருந்து டான்ஸ் கிளாசு, பாட்டு, வீணை(எங்கக்கா மட்டும்), வயலின், ஹிந்தி, டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேன்ட்(எங்கக்கா மட்டும்) இப்டி கால்ல ரெக்கயக் கட்டிக்கிட்டு திரிவோம், அப்டி இருந்தப்போ இந்தப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்தான் எங்களுக்கு பெரிய பொழுதுபோக்கு.எனக்கு தமிழில் இப்படி எழுத்தாளர்களின் அனுபவங்கள், சுயசரிதைகள், கட்டுரைகள் இவற்றை படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகளும் பிடிக்கும். ஆனா நாவல்கள் படிக்கவே பிடிக்காது. அதே ஆங்கிலத்தில் சுயசரிதைகள் மற்றும் நாவல்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகள், கட்டுரைகள் இதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கப் பிடிக்காது. காரணம் தெரியல.

நான் முதல்ல படிச்ச புத்தகம்னா 'மெரீனா' அவர்களோட சுயசரிதைதான். இன்னிவரைக்கும் என்னோட பேவரிட்னா இதுதான். திமுக குடும்பங்கரதால திராவிட எழுத்துக்கள் குவிஞ்சிருக்கும். பெரியாரோட எழுத்துக்களை படிச்சப்புறம்தான் பலத்தில் எனக்குக் கொஞ்சமாவது என்ன எதுன்னு விடைகள் கிடைச்சுது. இதற்கு முன்னர் அண்ணாவோட கட்டுரைகள் படிச்சிருக்கேன். கதைகள் சிலதும் படிச்சிருக்கேன். குமரிக்கோட்டம் படிச்சிட்டு என்னடாது அண்ணா அவர்கள் இப்டி ஒரு மேட்டர் கதை எழுதிருக்காரேன்னு நெனச்சேன். அதை எப்படி பார்க்கணும், புரிஞ்சுக்கணும்னு சொல்லிக்கொடுத்தது பின்னர் படிச்ச பெரியாரின் கட்டுரைகளும், எழுத்துக்களும்தான்.

எங்க வீட்ல இல்லாத இலக்கிய இலக்கண புத்தகங்களே இல்லை.எனக்கு கவிதைகள் ஒன்னுமே புரியாது, அதனால் பிடிக்காது. ஆனா எங்க அப்பா ஒரு கவிஞர்:):):) எங்கக்காவும் சூப்பரா கவிதை எழுதுவாங்க, ரசிப்பாங்க.
சோ அவர்களோட பல நாடகங்களின் புத்தக வடிவம் படிச்சிருக்கேன். வேலன் சார் சொன்னா மாதிரி ஒரு காலத்தில் சூப்பரா இருந்தது, இப்போ சப்பையா தெரியுங்கரத்துக்கு இவர் ஒரு வாழும் உதாரணம். கல்கி அவர்கள் காலத்து கட்டுரைகள் கூட எங்க பாட்டி(அப்பாவோட அம்மா) சேர்த்துவெச்சிருந்தது எங்க வீட்ல இருக்கு. அவரோட கட்டுரைகள் கல்கில வருதே, அதுல பலதை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். இது மட்டுமில்லாம ஐம்பதுகளில் இருந்து எண்பதுகளின் இறுதிவரை வந்த வாரயிதழ்களிலிருந்து பலக் கட்டுரைகள், கதைகள், திரைப்பட விமர்சனங்கள் எல்லாத்தையும் எங்கப்பா சேர்த்து வெச்சிருக்கார். நான் எல்லாத்தையும் ஜாலியா படிப்பேன்.

இப்போ வலையில் ஜெயமோகன் அவர்களோட அனைத்து படைப்புகளையும் படிப்பேன். அனைத்திலும் இவர் வல்லவர் எனினும், இவரோட பகடி, நகைச்சுவை வகை எழுத்துக்களுக்கு நான் அடிமை:):):) சுஜாதா அவர்களோட பல்சுவை கட்டுரைகள் பிடிக்கும். ஆனா சிலசமயம், தொடர்ந்து வித்தியாசம் இல்லாம இவரோட கட்டுரைகள் வரும்போது போரடிக்கும். பயணக் குறிப்புகளையும் அது சார்ந்த விஷயங்களையும் இப்டி சுவாரசியப் படுத்த முடியுமா என வியக்க வைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் எழுத்துக்களின் கலெக்ஷன் என்னிடம் உண்டு. சுந்தரராமசாமி அவர்களோட படைப்புகள் படிச்சதில்லை, ஆனா அவரோட கடிதங்கள் ரொம்பப் பிடிக்கும். அதுவே ஒரு தனி அனுபவம். எங்கக்காவோட கடிதங்களுக்கு அவர் பல சமயம் பதில் எழுதி அதனால் கிடைத்த அறிய அனுபவம்.

கலைஞரோட சட்டமன்ற அனுபவங்களின் தொகுப்பகளை கொண்ட புத்தகங்களை அவர் எங்கக்காவுக்கு பரிசா கொடுத்தார். அவர் கையெழுத்தோட இருக்கிற அந்தப் புத்தகம் என்னோட பேவரிட். இவரோட கடிதங்கள் அருமையோ அருமையா இருக்கும். அதேப்போல ராஜிவ் காந்தி அவர்களைப் பற்றி சோனியா அவர்கள் எழுதின புத்தகத்தையும் அவரோட கடிதத்தோடவும் கையெழுத்தோடவும் அனுப்பி வைத்தார்கள். அது தெரியாம இவ எனக்கு வரலைன்னு சொல்லவும், இன்னொரு புத்தகமும் அனுப்பினார்கள். அப்போல்லாம் எங்கக்கா காலேஜ் லீவில் தான் வருடம் முழுதும் படித்த எழுத்துக்களைப்பற்றி, அதன் ஆசிரியருக்கும் அதில் கூறப்பட்டவர்கள் இப்பொழுது இருந்தால் அவர்களுக்கும் தான் உணர்ந்ததை பற்றி கடிதங்களையும் விமர்சினங்களையும் அனுப்புவார். அதில் முக்காவாசிப்பேர் தன் கைப்பட பதில் எழுதுவார்கள். அப்படித்தான் பல விலைமதிப்பற்ற கடிதங்கள், புத்தகங்கள் எங்கள் வீட்டில் அப்பொழுது சேர்ந்தது. எழுத்துக்கள் அவர்களின் எண்ணங்களை பிரதிபலித்தாலும் கடிதங்கள் அதுவும் அழகான நீண்ட கடிதங்கள் அவர்களின் வேறொரு சுவாரசியமான உலகை நமக்கு திறக்கும்ங்கர்த்து என்னோட அனுபவம்.


archie பிடிச்சாலும் மத்த படக்கதை வடிவங்கள் அதனளவு கவர்ந்ததில்லை. லிட்டில் ரெட் ரைடிங் ஹுட்ல இருந்து சிந்த்பாத் தி சைலர் வரை எல்லாமே புத்தக வடிவில்தான் படிச்சிருக்கேன். அப்புறம் ஆறாங்கிலாசுலருந்து ஸ்டார் டஸ்ட் சினி பிளிஸ் ஆரம்பிச்சு படிக்காத சினிமா இதழ்களே கிடையாது.அப்பால எட்டாங்கிளாசு டீனேஜ் வயசு,கேக்கனுமா, பெண்களின் சரோஜாதேவியாகிய mills & boon, harlequinல ஆரம்பிச்சு எல்லாத்தையும் படிப்போம். அப்புறம் எல்லா நடிகைங்களும் படிக்கிறாங்களேன்னு சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் புக்ஸை படிக்க ஆரம்பிச்சேன். இவங்களோட பிளஸ் என்னன்னா, நாவலோட தீம் சப்பையா இருந்தாலும் முக்கிய மேட்டர் நல்லா இருக்கும். விடாது கருப்பு ஆரம்பிச்சவுடனே ஸ்பிலிட் பர்சனாலிட்டின்னு கண்டுபிடிச்சதுக்கு சிட்னி ஷெல்டன் தான் காரணம்:):):)

அப்புறம் கல்யாணக் கனவு ஆரம்பிக்கிற சீசன்ல டேனியல் ஸ்டீல் நாவல்கள் படிக்க ஆரம்பிச்சேன். முதல் நாவல் ஓகே, அப்புறம் நான் இதை படிக்கிறதுக்கு டிவி சீரியலே பார்ப்பேனேன்னு தோணிடுச்சி. அப்புறம்தான் நான் john grisham, michael connelley மாதிரியானவர்களின் நாவல்கள் படிக்கும் பழக்கம் ஆரம்பிச்சுது. இவங்கெல்லாம் மினிமம் கேரண்டி ஆளுங்கல்லையா:):):)

இப்போ காலேஜ் வந்தாச்சு. இப்போதான் என்னோட நண்பர்களான பழைய புத்தகக் கடைக்காரங்க அறிமுகமானாங்க. என் ரங்கமணி சில சமயம் இவங்கக்கிட்ட படிப்பு சம்பந்தமா சிலப் பொக்கிஷம் இருக்குன்னு அள்ளிக்கிட்டுப் போவார். ஆனா நான் அந்த லூசுத்தனமெல்லாம் செய்யாம, மத்ததைத்தான் வாங்குவேன். olivia goldsmithல இருந்து பல ரொமாண்டிக் நாவல்கள், mad collections, பல பகடி வகை கார்ட்டூன் தொகுப்புகள், ஆர்.கே.நாராயணனோட பெரும்பான்மையான புத்தகங்கள், ஸ்ரீதர் சார்ல இருந்து பலப் பேரோட சுயசரிதைகள், கண்ணதாசன் அவர்களோட மனவாசம் படிச்சிருந்தாலும் வனவாசம் படிக்காததால ஒரு நிறைவே இல்ல, அதெல்லாம் இங்க வாங்கினேன். அவரோட கேள்வி பதில்கள் புக் ரொம்பப் பிடிக்கும். பாரதிதாசன் அவர்களோட நிஜஇல்லற வாழ்க்கையை பத்தின ஒரு சுவாரசியமான நூல் இங்கக் கிடைச்சுது, எங்கப்பாவே அசந்துட்டார்.

நான் காலேஜ் படிச்சப்போ the da vinci code படிக்கிறது செம ஹாட்டா இருந்துச்சி. ஆனா செம போங்கா எனக்கு தோணினதால பாதியிலயே விட்டுட்டேன். என் ரங்கமணி இத வெச்சு நிஜமாவே இருக்கிற எல்லாக் கதைகளையும் சூப்பரா சொல்வார், அதால் இதவிட இவரோடது நிஜமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.

இப்போ என்னோட ஆதர்ச எழுத்தாளர்கள் Madeleine Wickham/Sophie Kinsella, nick hornbyமற்றும் marian keyes. இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger, candace bushnell, jennifer weiner,Cecily Von Ziegesar,helen fielding இப்டி நெறயப் பேர். இவங்கெல்லாம் பொதுவா ரொம்ப நல்லா விமர்சிக்கப் படுறதில்லை. ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஏன்னா இவங்களோட கதையில் இருக்கிற ஒரு சாதாரண கேரெக்டர் மற்றும் அதிலுள்ள நிஜ வாழ்வில் சந்திக்கக்கூடிய மாந்தர்கள், அவர்களின் குணாதிசயங்கள், சூழ்நிலை, சின்ன சின்ன வித்தியாசங்கள், அவை கொண்டுபோகும் பாதைகள், மிக மிக பணக்காரத்தனமான சூழல், அவர்களின் எதிர்பாப்புகள், அவர்களின் சாதாரணங்களும் நியாயங்களும் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகின்றன இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். stephen clarke அவர்களோட merde novels சொன்னா மாதிரி வித்தியாசமான(அதாவது முக்காவாசி உண்மை, கால்வாசி உடான்ஸ்) பிரெஞ்சு வாழ்க்கை முறையை ஜனரஞ்சகமா சொல்றது கொஞ்சம் சுலபமா நமக்கு சில வாழ்வியலை புரியவைக்கும்னு எனக்குத் தோணும்.

இந்திய வேருடைய ஆங்கில எழுத்தாளர்கள் ஒரு தனி அழகான அணியைச் சேர்ந்தவர்கள். ரொம்ப ஜாஸ்தி பரிச்சியமில்லைன்னாலும் இவர்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது chitra banerjee divakaruni, preethi nair, anita desai(kiran desai அம்மா), anita nair, chetan bhagat இவங்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும். இவங்களோட முக்காவாசி நூல்களை படிச்சிருக்கேன். சிலது செக்கண்ட்ஸ்ல வர்றவரைக்கும் காத்திருக்கணும்:):):)

எப்பவுமே எனக்கு சரித்திர பின்னணிக் கொண்ட கதை, புதினங்களை விட, பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் மற்றும் வாய்வழி தகவல்கள் ரொம்பப்பிடிக்கும். இந்தக் கலெக்ஷன்ஸ் ஒரு பொக்கிஷம் மாதிரி என் ரங்கமணி வெச்சிருப்பார்.இப்போ நெட்லயும் கெடைக்காததே இல்லையே. science fiction எப்போவாவது படிப்பேன். பயணக் கட்டுரைகள் சிலப் பேரோடது நல்லா இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் புவியியல் பாடம் படிக்கிற மாதிரி ஒரு பீல் ஏற்படுத்திடுவாங்க. தன்னோட பார்வையில் அழகான நகைச்சுவையோட இல்லைன்னா எளிமையான வகையில் எழுதினவைகள் ரொம்பப் பிடிக்கும்.

என்னோட மிகப் பெரிய வெறுப்புக்குள்ளான புத்தகங்கள் என்னன்னா தன்னம்பிக்கை ஏற்படுத்தரேன் பேர்விழி புத்தகங்கள். அவைகளைப் படிச்சா சாதாரணமான சூழலிலுள்ள ஒருத்தனுக்கு ரொம்ப ஈசியா சுயவிரக்கம் (self pity) வந்திடும். நமக்கு அந்த புக்கில் சொல்ற வெறியில்லையே, அவ்ளோ துணிவு இல்லையே, அசாதாரண சூழ்நிலைகள் இல்லையே, எல்லாம் நார்மலா இருக்கே, இப்டி வித விதமா தோணி ஒழுங்கா இருக்கிறவன் கூட முன்னேறாமப் போக வாய்ப்புண்டுன்னு தோணும்.

தெனாலிராமன், பீர்பால், முல்லா இப்படிப்பட்ட அத்துணை அப்பாவி அறிவுஜீவி கதைகளும் ரொம்பப்பிடிக்கும்.பக்திக்கதைகள், கட்டுரைகள் எனக்கு போரடிக்கும். பிலசாபிக்கள் நாவல்கள், நூல்கள் எல்லாம் எனக்கு பேத்தலா தெரியும். அன்றாட வாழ்விலிருந்தும், சாதாரண நூல்களிலிருந்தும் புரிஞ்சுக்காததயா இதுல சொல்லிடப் போறாங்கன்னு தோணும். பிளஸ் சிலப்பேர் இத படிக்கிற ஒரே காரணத்தால ரொம்ப அதிமேதாவித்தனமா இருக்க முயன்று, முழு லூசா சுத்தரதாலையும்:):):)

இதுக்கு மேல பிளேடு போட பயமாயிருக்கரதால இத்தோட முடிச்சிக்கரேன்.

166 comments:

SK said...

me the first

SK said...

உஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ் அப்பாடா

என்ன பாடு பட வேண்டி இருக்கு.. இருங்க பொய் பதிவையும் படிக்கிறேன் :))))

அது சரி இது என்ன இம்புட்டு பெரிய பதிவு

ambi said...

cha just missu .
me the secondu. :)

ambi said...

சும்மா டேமை தொறந்தா மாதிரி என்னா ப்ஃளோவுல எழுதி இருக்கீங்க ராப். :))

சாண்டில்யன் படிச்சதில்லையா?

rapp said...

வாங்க எஸ்கே , அதான் தலைப்புலயே சொல்லிட்டேனே:):):) பதிவோட நீளத்தைப் பத்தி:):):)

rapp said...

அம்பி அண்ணா, உங்க பதிவுல நான் மிஸ் பண்ணிட்டேனே அது போல நீங்க இங்க மிஸ் பண்ணிட்டீங்க:):):)

rapp said...

//சாண்டில்யன் படிச்சதில்லையா?//

ம்ஹூம், நான்தான் சொல்லிருக்கேனே அண்ணே, தமிழில் நாவல்கள் படிச்சதில்லைன்னு.

SK said...

/// ம்ஹூம், நான்தான் சொல்லிருக்கேனே அண்ணே, தமிழில் நாவல்கள் படிச்சதில்லைன்னு. //

வாட் நோ ரீடிங் டமில் நாவல் யா

வாட் யா :))))

SK said...

// cha just missu .
me the secondu. :) //

அண்ணே ஜஸ்ட் இல்லைனே

த்ரீ மினிட்ஸ்

மூணு நிமிஷம்

ட்ரை மினுடேன்

தீன் மினிட்ஸ்

:))))))

SK said...

// வாங்க எஸ்கே , அதான் தலைப்புலயே சொல்லிட்டேனே:):):) பதிவோட நீளத்தைப் பத்தி:):):) //

பதில் செஞ்ச உடனே தான் யோசிச்சேன் என்னவா இருக்கும்னு :))

SK said...

பை த பை மீ த டென்த் :)))))))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rapp said...

ஹி நோ யா, மீ ட்ரூலி பாரின், சீ தி லேபில் யா:):):)

கார்க்கிபவா said...

யப்பா.... நீங்க படிச்சத படிக்கவே இவ்ளோ நேர‌ம் ஆகுது.. உங்களுக்கு ஒரு 40 வருஷம் ஆகியிருக்குமே!! அப்படின்னா 5 வயசுலே படிக்க ஆரம்பிச்சிட்டிங்களா?

கார்க்கிபவா said...

jokes apart, பெரிய ஆளுங்க நீங்க. ஆழ்ந்த வாசிப்பனுபவம். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு ராப்

கார்க்கிபவா said...

/இருங்க பொய் பதிவையும் படிக்கிறே//

பொய் பதிவா? என்ன எஸ்.கே?

கார்க்கிபவா said...

//சும்மா டேமை தொறந்தா மாதிரி என்னா ப்ஃளோவுல எழுதி இருக்கீங்க ராப். :))//

எந்த டேம்முங்க?

கார்க்கிபவா said...

//சாண்டில்யன் படிச்சதில்லையா//

அத அவருகிட்ட கேளுங்க.. அக்காக்கிட்ட கேட்டா அவ்ங்க எப்படி சொல்லுவாங்க?

கார்க்கிபவா said...

/வாங்க எஸ்கே , அதான் தலைப்புலயே சொல்லிட்டேனே:):):) பதிவோட நீளத்தைப் பத்தி:):):)//

இதையெல்லாம் அவ‌ருக்கு போட்டினு சொல்லி அவரு மதிப்ப குறைக்காதீங்க.. இது அவரு பின்னூட்டம் மாதிரி

கார்க்கிபவா said...

/ஹி நோ யா, மீ ட்ரூலி பாரின், சீ தி லேபில் யா:):):)
//


எனக்கு ஃபிரெஞ்சு தெரியாது ராப்

கார்க்கிபவா said...

அப்புறம் மீ த 20

rapp said...

அடப்பாவி கார்க்கி, நீங்க என்னோட ரெண்டு வயசு பெருசு. கண்ணாலங்கட்டிக்கிட்டா இப்டித்தான் சொல்றதா? இந்தப் ஆம்பளைங்களே இப்படித்தான் எசமான் :):):)

rapp said...

//பெரிய ஆளுங்க நீங்க. ஆழ்ந்த வாசிப்பனுபவம். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு //

கார்க்கி ஒரு சின்ன சந்தேகம், நீங்க பதிவ படிச்சாச்சா இல்லையா?:):):)

SK said...

/// கார்க்கி ஒரு சின்ன சந்தேகம், நீங்க பதிவ படிச்சாச்சா இல்லையா?:):):) ///


இப்படி கிராஸ் கொஸ்டின் எல்லாம் கேக்க கூடாது :)))

SK said...

// அடப்பாவி கார்க்கி, நீங்க என்னோட ரெண்டு வயசு பெருசு. கண்ணாலங்கட்டிக்கிட்டா இப்டித்தான் சொல்றதா? இந்தப் ஆம்பளைங்களே இப்படித்தான் எசமான் :):):) //

யு சி தட்ஸ் உநிவேர்சல் ருள் எசமான் :)))

SK said...

me the 25th ammani

SK said...

// பொய் பதிவா? என்ன எஸ்.கே? //

மாட்டினேன் இந்த தடவை

வில் மீட் நெக்ஸ்ட் டைம்..
அடுத்த தடவை பாக்கலாம்னு சொன்னேன் :))))

SK said...

// முன்னல்லாம் யார்வீட்டுக்குப் போனாலும் ரீடர்ஸ் டயஜஸ்ட் தூக்கிட்டு வந்திடுவேன். அதெல்லாம் இப்போக் கூட என்கிட்டே இருக்கு. //

அது எல்லாம் இருக்கு சரி.. படிச்சு இருக்கீங்களா :))))

கபீஷ் said...

//(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)
டபுள் ஓகே

கபீஷ் said...

//திமுக குடும்பங்கரதால//
பயமாயிருக்குங்க...

பரிசல்காரன் said...

நல்லாயிருக்கு.

சூப்பர்.

கலக்கல்.

அழகாக எழுதியுள்ளீர்கள்.

பரிசல்காரன் said...

வரப்போற 200, 300 பின்னூட்டங்களுக்கு நடுவுல என்னோடதை படிக்கப் போறதில்லை நீங்க.

நசரேயன் said...

இப்போதைக்கு உள்ளேன் போட்டுக்கிறேன், அப்புறமா கண்டிப்பா படிப்பேன்

புதுகை.அப்துல்லா said...

என்னோட மிகப் பெரிய வெறுப்புக்குள்ளான புத்தகங்கள் என்னன்னா தன்னம்பிக்கை ஏற்படுத்தரேன் பேர்விழி புத்தகங்கள். அவைகளைப் படிச்சா சாதாரணமான சூழலிலுள்ள ஒருத்தனுக்கு ரொம்ப ஈசியா சுயவிரக்கம் (self pity) வந்திடும். நமக்கு அந்த புக்கில் சொல்ற வெறியில்லையே, அவ்ளோ துணிவு இல்லையே, அசாதாரண சூழ்நிலைகள் இல்லையே, எல்லாம் நார்மலா இருக்கே, இப்டி வித விதமா தோணி ஒழுங்கா இருக்கிறவன் கூட முன்னேறாமப் போக வாய்ப்புண்டுன்னு தோணும்.
//


நச்சுனு சொன்ன???

புதுகை.அப்துல்லா said...

சரி...சரி..டைம் போட்டு மெயில் அனுப்பு, கும்மி ஸ்டார்ட் பண்ணுவோம் :)))

முரளிகண்ணன் said...

உண்மைத் தமிழச்சி வாழ்க.

நல்லா படிச்சிருக்கீங்க. தொடருங்க.

எப்படியும் 300 க்கு மேல வரும். அப்ப திரும்ப வர்றேன்

முரளிகண்ணன் said...

ஜான் க்ரிஷம் நாவல்களை சுருக்கி நீங்க பதிவு எழுதலாமே?

முரளிகண்ணன் said...

\\நான் முதல்ல படிச்ச புத்தகம்னா 'மெரீனா' அவர்களோட சுயசரிதைதான்.\\

இது ஆனந்த விகடனில் தொடராக வந்ததுதானே? அந்தக்கால சென்னையை கண்முண்ணே நிறுத்தியிருப்பார்

முரளிகண்ணன் said...

முழுபதிவையும் படித்து அசந்து விட்டேன். நீங்கள் படித்த பலவற்றில் இருந்து பதிவு போட்டால் எங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைக்கும்

கோபிநாத் said...

உள்ளேன் அக்கா ;))

குசும்பன் said...

//நான் முதல்ல படிச்ச புத்தகம்னா 'மெரீனா' அவர்களோட சுயசரிதைதான். இன்னிவரைக்கும் என்னோட பேவரிட்னா இதுதான்.//

படிச்சது அதுமட்டும் தான் என்கிற பொழுது பேவரிட்டாதான் இருக்கும்!!

(நடுவில் இருந்து எடுத்துப்போட்டதால் நான் பதிவை முழுதாக படிச்சிட்டேன் என்று நம்பனும்!!!)

குசும்பன் said...

//அன்றாட வாழ்விலிருந்தும், சாதாரண நூல்களிலிருந்தும் புரிஞ்சுக்காததயா இதுல சொல்லிடப் போறாங்கன்னு தோணும்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படிங்க இப்படி எல்லாம்!

குசும்பன் said...

// பிளஸ் சிலப்பேர் இத படிக்கிற ஒரே காரணத்தால ரொம்ப அதிமேதாவித்தனமா இருக்க முயன்று, முழு லூசா சுத்தரதாலையும்:):):)//

இருங்க இருங்க சஞ்சய்கிட்ட சொல்லி இங்க வர சொல்லுறேன், இருந்தாலும் சஞ்சய இப்படி எல்லாம் திட்டக்கூடாது!!!

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

குசும்பன் said...
//எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்//

அண்டங் காக்கா தெரியும் அது இன்னா அண்ட அக்கா!

SK said...

// அண்டங் காக்கா தெரியும் அது இன்னா அண்ட அக்கா! //

:)))))))))))))

SK said...

அக்கா பதிவில்
அரை மணிக்கு மேல்
ஆகியும்
அம்பது பதில்
ஆகவில்லையா
அட
ஆண்டவா

கார்க்கி எப்படி :))))))

மோகன் கந்தசாமி said...

ஏனுங்கம்மணி, எல்லாம் வியாக்யானமா படிச்சி போட்டீங்க சரி, இஸ்கூல் புஸ்தகம் எல்லாம் படிச்சிங்களா? எட்டாங்கிளாசில் படிச்ச ஐசக் நியூட்டன் ஐடியல் -பற்றி கொஞ்சம் எழுதியிருக்கலாமல்லோ! :-))


திருமா வளவன் பேட்டி -யை குமுதம் வெப் டிவி -யில் பாத்திங்களா? என்னோட கேள்வியை எடுத்து கடைசியில் போட்டுட்டாங்க பாவிங்க!

Anonymous said...

ராப்,

சுயமுன்னேற்றப் புத்தகங்கள் பற்றிய உங்கள் பார்வைதான் எனக்கும். அதிலும் ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே தமிழ்ப் படுத்தியதில் சும்மா காமெடி பிச்சுக்கும். ஒரே விதி விலக்கு எம் எஸ் உதயமூர்த்திதான். அவர்தான் கொஞ்சம் பிரக்டிக்கலா எழுதுனாரு.

அதே போல ஷெல்டன், ரபின்ஸ், வாலஸ் வகையில ஆர்ச்சரச் சேர்த்ததுல கொஞ்சம் வருத்தம்தான். ஆர்ச்சரோட fourth estate எனக்குப் பிடிச்ச புத்தகம்.

ஃபொர்சித், லுட்லம், ஆர்ச்சர் மூவரும் வேறுவகை எழுத்தாளர்கள். மேட்டர நம்பாம எழுதுபவர்கள்.

Thamira said...

ய‌ப்பா.. பிரமித்துப்போய்விட்டேன், எவ்வளவு படித்திருக்கிறீர்கள். ஆமா இந்தத்தொடரை நாந்தான் ஆரம்பிச்சேன். யாராவது சொல்லுங்கப்பா, நானே பொலம்பிக்கிட்டு திரியறேன்.

Thamira said...

yeee.. me the 50.!

rapp said...

//இதையெல்லாம் அவ‌ருக்கு போட்டினு சொல்லி அவரு மதிப்ப குறைக்காதீங்க.. இது அவரு பின்னூட்டம் மாதிரி//

கார்க்கி, தலைப்பு வெச்சது எடிட்டிங்குக்கு முன்ன, இப்போ எடிட்டிங் முடிச்சு பதிவை பாத்தியா குறைச்சிருக்கேன்:):):)

//எனக்கு ஃபிரெஞ்சு தெரியாது ராப்//

அது பிரென்ச் இல்ல, தேவ பாஷை, நம்ம அப்துல்லா அண்ணனை மெட்ராஸ் தமிழ் பேச சொல்லுங்க அப்போப் புரியும்:):):)

rapp said...

//இப்படி கிராஸ் கொஸ்டின் எல்லாம் கேக்க கூடாது//

எஸ்கே, உங்கள இந்தப் பதிவை படிக்க வெக்கணும்னா நான் ஒரு கவுஜ எழுதக் கூட ரெடி:):):)

//யு சி தட்ஸ் உநிவேர்சல் ருள் எசமான் :)))//

ஹே எஸ்கே ட்யூட் தட் ஐ நோ ஆல்ரெடி யா. யூ த காலிங் மீ அக்கா நோ, மீ த பீலிங்கோ பீலிங்:):):)

//வில் மீட் நெக்ஸ்ட் டைம்..
அடுத்த தடவை பாக்கலாம்னு சொன்னேன்//

ஓகே, மேஜர் :):):)

//அது எல்லாம் இருக்கு சரி.. படிச்சு இருக்கீங்களா//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்படில்லாம் டெக்னிக்கல் கேள்விகள் கேக்குறாங்கன்னுதான் நான் வேலைக்குப் போகல:):):)

rapp said...

வாங்க கபீஷ்:):):) எதுக்கு பயம்?:):):)

rapp said...

ரொம்ப நன்றிங்க கிருஷ்ணா சார்:):):)
//வரப்போற 200, 300 பின்னூட்டங்களுக்கு நடுவுல என்னோடதை படிக்கப் போறதில்லை நீங்க//
உங்க வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்:):):)ஆனா இப்போல்லாம் எல்லாரும் வேலை செய்யணும் அது இதுன்னு தப்பு தப்பா என்னமோ செய்யப் போய், இங்க சுருசுருப்பா இருக்க மாட்டேங்குறாங்க. பாருங்க நம்ம முன்னாள் நியூ பாதரைக் கூடக் காணோம்:):):)

rapp said...

வாங்க நசரேயன், கண்டிப்பா படிக்க முயற்சி பண்ணுங்க, ஆனா நான் இவ்ளோ பெருசா எழுதி பிளேடு போடறதும் தப்புதானே:):):)

rapp said...

அப்துல்லா அண்ணே, என்னமோ யார் வீட்லயோ கேக்குற மாதிரி கேக்குறீங்களே, இங்க நீங்க பாட்டுக்கு கும்மிய ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதான, எஸ்கே உடனே வந்து கைக்கொடுத்திருப்பாரே, நானும் ஒடனே வந்திருப்பேனே:):):)

rapp said...

//ஜான் க்ரிஷம் நாவல்களை சுருக்கி நீங்க பதிவு எழுதலாமே//

வாங்க முரளிக்கண்ணன் சார்(இது சரோஜா பட சார்). 'சுருக்கி' அப்டின்னு எனக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தைய இதுல சொல்லிருக்கீங்களே:):):)

// நீங்கள் படித்த பலவற்றில் இருந்து பதிவு போட்டால் எங்களுக்கு ஒரு அறிமுகம் கிடைக்கும்
//

எனக்கும் ஆசைதான், அப்படி பண்ணா இப்டி ஒரேடியா பெருசா பதிவு போடற தப்பையும் குறைக்கலாம். ஆனா பாருங்க ஒவ்வொரு பதிவா போய் கருத்துப் போலீஸ் வேலை செய்ற மாதிரி சுறுசுறுப்பு நாமே பதிவு போடனும்னா வரமாட்டேங்குது. கண்டிப்பா முயற்சி பண்றேன்.

rapp said...

//உள்ளேன் அக்கா//

வாங்க கோபி அண்ணே, அப்புறம் பாதியாவது படிங்க அண்ணே:):):)

rapp said...

//(நடுவில் இருந்து எடுத்துப்போட்டதால் நான் பதிவை முழுதாக படிச்சிட்டேன் என்று நம்பனும்!!!)
//
குசும்பன் அண்ணே, அது பதிவோட ஆரம்பத்துலையே வருது. என் பதிவோட நீளத்தைக்கூடப் பார்க்காம குத்துமதிப்பா சொல்லிட்டீங்க:):):)

//எப்படிங்க இப்படி எல்லாம்!
//

நாங்கெல்லாம் ட்ரூலி பாரின், லேபில் பாக்கலையா நீங்க:):):)

//இருங்க இருங்க சஞ்சய்கிட்ட சொல்லி இங்க வர சொல்லுறேன், இருந்தாலும் சஞ்சய இப்படி எல்லாம் திட்டக்கூடாது//

அதனால்தான் இன்னும் அவரோட பின்நூட்டத்தக் காணோமா:):):) என்னடாது கூப்பிட்டு இவ்ளோ நேரமாகியும் காணோமேன்னு பார்த்தேன்:):):)

////எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்//

அண்டங் காக்கா தெரியும் அது இன்னா அண்ட அக்கா!
//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பர்ஸ்ட் என்னடான்னா பதிவோட ஆரம்பத்தை நடுன்னு சொன்னீங்க, இங்க 'அண்ட்' அப்படீங்கறதை அண்ட அப்படீங்கறீங்க:):):) கண்ணுலயே கார்ட்டூன் வரஞ்சுட்டாங்களா அண்ணி?:):):)

rapp said...

மோகன் வழக்கம்போல பார்க்க மறந்துட்டேன், கண்டிப்பா பாக்கணும். என்னாது பாட புஸ்தகமா, அதப் பத்தின ஆட்டம்னா என்னை சேர்த்திருப்பாங்களா?:):):) ( உங்களுக்கு என் கலெக்ஷன் எரிச்சல் வருதா:):):) )

rapp said...

வாங்க வேலன், ரொம்ப நன்றிங்க. நீங்க ஒருத்தர்தான் கன்னா பாயின்ட் புடிச்சி கலாசிட்டீங்க; நான் நெறயப் பேர் சொல்வாங்கன்னு நெனச்சேன், ஆனா இது சொன்னாலும் கேக்காதுன்னு கண்டுக்கலைப் போல:):):) எனக்கு என்னமோ ஆர்ச்சர் அவ்ளோ பிடிக்காது:(:(:(

rapp said...

வாங்க தாமிரா:):):)
//இந்தத்தொடரை நாந்தான் ஆரம்பிச்சேன். யாராவது சொல்லுங்கப்பா, நானே பொலம்பிக்கிட்டு திரியறேன்//
என்ன இப்படி சொல்லிட்டீங்க:):):) நான் இங்க என்னை தொடர கூப்பிட்ட கார்க்கியை மட்டும்தான் குறிப்பிட்டிருக்கேன்:):):)

வால்பையன் said...

எதோ நீங்ககறதால மன்னிக்கிறேன்!
இனிமே இது மாதிரி பெருசாஅ பதிவு போட்டா கன்னாபின்னான்னு கும்மி குத்துவேன்.
படிக்கிறதுகுள்ள தாவு தீருது

வால்பையன் said...

//எனக்கு நூலகங்கள் சுத்தமா பிடிக்காது.//

ஆமா அங்க பேசகூடாதுன்னு ரூல்ஸ் இருக்குள்ள

வால்பையன் said...

//அங்கெல்லாம் திருப்பி கொடுக்கணுமே,//

அது சரி

வால்பையன் said...

//என் போட்டோ காமிச்சீங்கன்னா நம்ம பெருமை புரியும்//

கட்டி வச்சு உதைக்க மாட்டாங்களே

வால்பையன் said...

//(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).//

என்ன தன்னடக்கம்

வால்பையன் said...

//முன்னல்லாம் யார்வீட்டுக்குப் போனாலும் ரீடர்ஸ் டயஜஸ்ட் தூக்கிட்டு வந்திடுவேன்.//

பீட்டரா நீங்க

வால்பையன் said...

//எனக்கு கவிதைகள் ஒன்னுமே புரியாது, அதனால் பிடிக்காது.//

அப்படினா நீங்கள் ஒரு பின்நவினத்துவ வாதியா

வால்பையன் said...

முடியல கொட்டாவி வருது

வால்பையன் said...

//அதிமேதாவித்தனமா இருக்க முயன்று, முழு லூசா சுத்தரதாலையும்:):):)//

நிறைய பேரு அப்படி தான் சுத்துரானுங்க

வால்பையன் said...

//இதுக்கு மேல பிளேடு போட பயமாயிருக்கரதால இத்தோட முடிச்சிக்கரேன்.//

நாங்கள்ள பயப்படனும்

வால்பையன் said...

வந்ததுக்கு ஒரு முக்கா ஃபுல் அட்ச்சிட்டு போயிடுறேன்

வால்பையன் said...

த்னியா உக்காந்த்து கும்மி அடிக்க பயமாயிருக்கு

வால்பையன் said...

75

வால்பையன் said...

இன்னைக்கு கோட்டா ஓவர்

கபீஷ் said...

//நான் காலேஜ் படிச்சப்போ the da vinci code படிக்கிறது செம ஹாட்டா இருந்துச்சி//

சின்ன கரெக்‌ஷன்
படிச்சப்போ = போனப்போ

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோ இதென்ன உண்மைத்தமிழனே கண்னீர் விடுவார் போலயே..இரு பாதி தான்படிச்சிருக்கேன்.. டயர்டாகிடுச்சு..மீதி நாளைக்குத்தான்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிள்ளை எத்தன படிச்சிருக்கு .. ஆத்தாடியோ..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மீத 80த்

நசரேயன் said...

இதே ஒரு புத்தகமா போடலாம், நீங்க படிச்சது கை அளவு இல்லை, காவிரி ஆத்து(நதி) அளவு

நசரேயன் said...

ஆமா,சோ.. சோ.. ன்னு நீங்க சொல்லுறது சோ.ராமசாமி யா இல்ல so வா :):)
இப்போதைக்கு இது ஒன்னுதான் சந்தேகம், அப்புறமா யோசிச்சுட்டு வாரேன்

நசரேயன் said...

மீ த 83 த்

rapp said...

வாங்க வால்பையன்:):):) ஹி ஹி எதுக்கு இப்படில்லாம் பாராட்டறீங்க:):):) நான்தான் ஜெயமோகன் ரசிகைன்னு சொல்லியாச்சுல்ல:):):)

//ஆமா அங்க பேசகூடாதுன்னு ரூல்ஸ் இருக்குள்ள//

கரெக்ட், அதோட இன்னொரு விஷயமும் இருக்கு, நான் பாட புஸ்தகங்கள் எதையுமே வாங்க மாட்டேன், எல்லாத்தையும் நூலகத்தில் இருந்துதான் எடுப்பேன், அதாளையும் இருக்கலாம்:):):)

//கட்டி வச்சு உதைக்க மாட்டாங்களே//

மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன். கடசியா எதையும் சுட்டதா நியாபகம் இல்லை. நம்பிக்கையா போங்க:):):)

//பீட்டரா நீங்க//

லேபில் பாக்கலையா நீங்க:):):)

//முடியல கொட்டாவி வருது//

படிக்கிற உங்களுக்கே இப்படி இருக்குன்னா, எழுதுனப்போ எனக்கு எப்டி இருந்திருக்கும்:):):)

//நாங்கள்ள பயப்படனும்//

அதான, அடுத்த பதிவுல இருந்து பாருங்க எடிட் பண்ணாம முழுசா டைப்பினத்தை போட்டுடறேன்:):):)

rapp said...

//சின்ன கரெக்‌ஷன்
படிச்சப்போ = போனப்போ//

ஹா ஹா ஹா கபீஷ் சூப்பரான கமென்ட்:):):)

rapp said...

//மீதி நாளைக்குத்தான்..
//
வாங்க முத்து வாங்க:):):) நாளைக்கு நமக்குப் பிறந்தநாளாச்சே, இவ கேட்டு செக் பண்ண மாட்டான்னு நினைக்காதீங்க. என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது:):):)

SK said...

அசந்த அடிக்கறது உங்க பாலிசி அசராம அடிக்கறது என் பாலிசி :)))

rapp said...

//இதே ஒரு புத்தகமா போடலாம், நீங்க படிச்சது கை அளவு இல்லை, காவிரி ஆத்து(நதி) அளவு//

நசரேயன் நல்லவரா சொன்ன மாதிரி படிச்சிருக்கீங்க :):):) இதெல்லாம் சும்மா, முக்காவாசிப்பேர் இதவிட ஜாஸ்தியா படிச்சிருப்பாங்க, ஆனா பிடிச்ச எழுத்தாளர்கள் கொஞ்சமா இருக்கும். எனக்கு பிடிச்ச நூல்கள் ஜாஸ்தி , அவ்ளோதான் வேறுபாடு:):):)

//ஆமா,சோ.. சோ.. ன்னு நீங்க சொல்லுறது சோ.ராமசாமி யா இல்ல so வா//

அடடா, ஆமாங்க, ஒரு இடத்தில்(நாடகம் பத்தி எழுதியிருக்கேனே) சோ ராமசாமி அவர்களை சொல்லிருக்கேன். மத்த இடங்களில் so சொல்லிருக்கேன்:):):)

Thamiz Priyan said...

அக்கா! பெருமையா இருக்குக்கா!

SK said...

யாரு எல்லாம் கை கொடுக்க வாறீங்க

Thamiz Priyan said...

நிறைய புத்தகங்கள் படிச்சு இருக்கீங்க .... உண்மையிலேயே பிரமிப்பா இருக்குக்கா..:)

Thamiz Priyan said...

வாங்க Sk 100 அடிக்கலாமா?

SK said...

நான் சாகர வரைக்கும் படிச்ச கூட இம்புட்டு படிக்க மாட்டேன் :)))

Thamiz Priyan said...

நிறைய ஆங்கில நாவல்கள் படிச்சு இருக்கீங்க.... அதைப் பற்றி எல்லாம் எழுதுங்கக்கா...:)

SK said...

என்ன அண்ணே இது எல்லாம் கேள்வியா அதுக்கு தானே கூடி இருக்கோம்

SK said...

100

SK said...

100

SK said...

அண்ணே இப்படி பண்ணிடீன்களே

ஜஸ்ட் எ மிஸ் யா

Thamiz Priyan said...

ஹா ஹா ஹா நான் தான் 100 போட்டேன்.. நன்றி ராப் ‘அக்கா’.. ஹிஹிஹிஹி

Thamiz Priyan said...

அக்கா! இதில் ஏதும் உள் அரசியல் இல்லீங்கக்கா...:)))

Thamiz Priyan said...

அக்கா! பாத்தீங்களா? உங்க பதிவுக்கு நான் வரும் போது 88 கமெண்ட் ஏற்கனவே இருக்கு... ;))

SK said...

நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ நோ

SK said...

மேல கூறி இருக்கும் 'நோ'வை ரகுவரன் பாணியில் படிக்கவும்

SK said...

நாம தூங்கி எந்திரிச்சு வரும் போது எப்படியும் ஒரு முன்னூறு பதில் இருக்கும் :))))))))

உண்மைத்தமிழன் said...

தங்கம்..

எனக்குப் போட்டியா..? அல்லது சப்போர்ட்டுக்கா..?

எது எப்படியோ கடைசி வரைக்கும் படிக்க வைக்குறாப்புல புல் ஸ்பீட்ல போகுது கதை..

இது மாதிரியே நிறைய எழுதி என் பேரை காப்பாத்தணும்.. சொல்லிட்டேன்..

ஏற்கெனவே அர்ச்சனை மாதிரி 108 கமெண்ட்டுகள் குவிஞ்சிருக்கு.. நான் 109-ஆ..? பரவாயில்லை..

உரிமையா, உண்மையா மொதல் கமெண்ட்டை நான்தான் போட்டிருக்கணும்.. ஆனா கோச்சுக்காத அம்மணி.. இப்பத்தான் பதிவைப் பார்த்தேன்..

அடுத்த தபா போடும்போது எனக்கு மட்டும் முன்கூட்டியே சொல்லிரு..

வாழ்க வளமுடன்

நசரேயன் said...

110 ரூபா மொய்

தாரணி பிரியா said...

ME THE 110

தாரணி பிரியா said...

சரியா 13 நிமிஷம் ஆகிருங்க உங்க பதிவை படிச்சு முடிக்க

தாரணி பிரியா said...

ஆத்தா எப்படிங்க இத்தனை படிச்சு இருக்கிங்க. உங்க‌ வாசிப்பு திற‌னை பார்த்து பிர‌மிச்சு போயிட்டேனுங்க‌.

தாரணி பிரியா said...

//பயணக் குறிப்புகளையும் அது சார்ந்த விஷயங்களையும் இப்டி சுவாரசியப் படுத்த முடியுமா என வியக்க வைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்//


சாதாரண விஷயங்களையும் ரசிச்சு படிக்கற மாதிரி எழுத இவரால மட்டும்தான் முடியும்.

தாரணி பிரியா said...

//என்னோட மிகப் பெரிய வெறுப்புக்குள்ளான புத்தகங்கள் என்னன்னா தன்னம்பிக்கை ஏற்படுத்தரேன் பேர்விழி புத்தகங்கள். அவைகளைப் படிச்சா சாதாரணமான சூழலிலுள்ள ஒருத்தனுக்கு ரொம்ப ஈசியா சுயவிரக்கம் (self pity) வந்திடும்.//

கரெக்ட் ராப் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப புரியாத மாதிரி சொல்லி குழப்பறதால முதல் இடம் இவங்களுக்குதான்.

தாரணி பிரியா said...

//எங்கப்பா தமிழாசிரியர்ங்கரதாலயும், திமுக அனுதாபிங்கரதாலையும் சின்ன வயசுல முக்காவாசி தமிழில்தான் இருக்கும்//



அப்ப மீதி கால்வாசி என்ன மொழியில இருக்கும்?

rapp said...

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எஸ்கே நீங்க எனக்கு மிகப்பெரிய போட்டியா உருவாகிட்டு வரீங்க:):):) எல்லா எடத்திலயும் மீ த பர்ஸ்ட்ல இருந்து மீ த அம்பது, நூறுன்னு தட்டிக்கிட்டே போய்க்கிட்டிருக்கீங்க:):):) நான் பார்முக்கு வந்தா சும்மா அதகளம் ஆகிடுமாச்சே:):):) (ஹி ஹி ரொம்ப நன்றி, ரம்யா கிட்ட என் பதிவை அறிமுகப் படுத்தினத்துக்கு:):):))

rapp said...

தமிழ்பிரியன் அண்ணே, இன்னைக்குத்தான் நீங்க ஒரு கும்மியரா உங்கக் கடமைய செவ்வனே செஞ்சிருக்கீங்க:):):) உன்கள் சேவையை மெச்சினோம்:):):) நூறு தட்டினத்துக்கு வாழ்த்துக்கள்:):):)

rapp said...

அட உண்மைத்தமிழன் சார் நீங்க வந்து பின்நூட்டினது ரொம்ப சந்தோஷம். நீங்க கண்டிப்பா ஜாலியா எடுத்துப்பீங்கன்னுதான் உங்க பேரை தலைப்புல போட்டேன்:):):) இனிமே தவறாம ஒவ்வொரு பதிவும் போடும்போது உங்களையும் கூப்பிட்டுடறேன்:):):)

நசரேயன் நன்றி:):):)

rapp said...

வாங்க தாரணிப்பிரியா வாங்க:):):)

//சரியா 13 நிமிஷம் ஆகிருங்க உங்க பதிவை படிச்சு முடிக்க//

இப்படில்லாம் உங்கள கணக்கெடுக்க வெக்கிற ஒரு கஜப்பதிவை போட்டிருக்கரதே ஒரு சாதனைதானே:):):)

//சாதாரண விஷயங்களையும் ரசிச்சு படிக்கற மாதிரி எழுத இவரால மட்டும்தான் முடியும்//

ரொம்ப சரி:):):)

//கரெக்ட் ராப் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப புரியாத மாதிரி சொல்லி குழப்பறதால முதல் இடம் இவங்களுக்குதான்//

ஹா ஹா ஹா நச்சுன்னு சொல்லிட்டீங்க:):):)

//அப்ப மீதி கால்வாசி என்ன மொழியில இருக்கும்?//

ஆங்கிலத்தில் இருக்கும், மற்றும் வடமொழியின் தமிழாக்க பக்தி புத்தகங்கள்(அப்பாவோட அம்மா மற்றும் அம்மாவோட அம்மாவோடது) இருக்கும்:):):)

குடுகுடுப்பை said...

படிச்சிட்டு பின்னூட்டம் போடுறேன்

குடுகுடுப்பை said...

எங்கக்காவும் சூப்பரா கவிதை எழுதுவாங்க, ரசிப்பாங்க.

//

அதான் இப்போ பிளாக் பக்கம் ஆளயே காணோமா.
பயப்படமா வரச்சொல்லுங்க இனிமே கவிதை எழுதுறத நெற்த்திடறேன்

Itsdifferent said...

Very detailed writing. I wish our parents and other elders had such an opportunity to record their life.
There are very good books on Leadership, inter-personal relationship etc. In the US most of such books refer to real life scenarios including Football (not soccer), Baseball and basket ball teams and their coaches.
There is a book called "The Radical Edge", I would highly recommend reading that book. It teaches us trivial things in a new way.
Congratulations on your reading, continue, and follow as much as you can.

தாரணி பிரியா said...

\\எனக்கு நூலகங்கள் சுத்தமா பிடிக்காது. காரணம் அங்கெல்லாம் திருப்பி கொடுக்கணுமே, அப்போதானே அடுத்த புக்கை எடுக்க முடியும்\\
ஊரில இருக்கற எல்லா லைப்ரரிலயும் மெம்பர் ஆகிடுங்க‌

தாரணி பிரியா said...

me the 125

தாரணி பிரியா said...

//என் போட்டோ காமிச்சீங்கன்னா நம்ம பெருமை புரியும்(இத வெச்சு தாராளமா நக்கல் பண்ணுங்கப்பா:):):)).//

என்ன ஒரு பெருந்தன்மை என்னல முடியலைம்மா முடியலை

(உங்களுக்கு பிடிச்ச வாய்ஸிலே படிச்சுகோங்க)

தாரணி பிரியா said...

//இதுக்கு மேல பிளேடு போட பயமாயிருக்கரதால இத்தோட முடிச்சிக்கரேன்//


த‌லைவ‌ரை நினைச்சுகோங்க‌. பய‌ம் எல்லாம் எங்க‌யாவ‌து போயிரும். அப்புற‌ம் படிக்கறவங்கதான் ப‌ய‌ப்ப‌ட‌ ஆர‌ம்பிக்க‌ணும்

narsim said...

//ஆனந்த விகடன், குமுதம், முத்தாரம் இதெல்லாம் ஒன்னாங்கிலாசுலே இருந்தே படிக்க ஆரம்பிச்சிட்டேன்//

அப்பவே "மீ த பர்ஸ்ட்டா?"???!!!!

நல்ல அனுபவங்கள் பகிர்ந்ததற்கு நன்றி!

rapp said...

வாங்க குடுகுடுப்பை:):):) அவங்க என் கவுஜைக்கே பயப்படாதவங்க, உங்களோடதெல்லாம் ஜுஜுபி:):):)

rapp said...

வாங்க itsdifferent . உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி:):):)

rapp said...

ஹா ஹா ஹா தாரணி பிரியா, நான் எங்க தல வாய்சில் படிச்சிக்கிட்டேன்:):):)

//த‌லைவ‌ரை நினைச்சுகோங்க‌//

வேணாம் விட்டிருங்க, நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்:):):)

rapp said...

ஹா ஹா ஹா வாங்க மிஸ்டர் பேச்சுலர்(நர்சிம் சார்). வேறென்ன பண்றது, இதுலதான் கலர் கலர் போட்டோவோட நல்ல அழகான எழுத்துக்களோட வரும். பிளஸ் எங்கம்மா கேள்வி கேக்க மாட்டாங்க:):):)

சந்தனமுல்லை said...

என்ன ஒரு வாசிப்பு!! நேரில் பார்த்த பேசிக்கற மாதிரி இருந்தது உங்க பதிவை படிக்கும்போது! ஒன்னு ரெண்டு தவிர எனக்கு நீங்க சொன்ன புத்தகங்களோ/எழுத்தாளர்களோ தெரியலை!! :-)..படிப்பாளினி ராப்!!

சந்தனமுல்லை said...

//எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).//

:-))

Bharath said...

யக்கா கலக்கீடீங்க.. அம்மாடியோவ்.. என்ன ஒரு extensive range..

//இப்போ என்னோட ஆதர்ச எழுத்தாளர்கள் Madeleine Wickham/Sophie Kinsella, nick hornbyமற்றும் marian keyes. இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger, candace bushnell, jennifer weiner,Cecily Von Ziegesar,helen fielding //

Grisham, Archerன்னு வருதேன்னு ஆசையாப் பாத்தா.. அடுத்து வந்த லிஸ்டப்பாத்து அப்பீட்டாய்டேன்.. wiki பண்ணி யாரு என்னன்னுப் பாத்திட்டு 300க்கு மேல வாரேன்..

rapp said...

ரொம்ப நன்றிங்க சந்தனமுல்லை. நேர்ல பேசினா இவ்ளோ சீக்கிரம் தப்பிச்சுப் போக விடமாட்டேன். இதுக்கு மேல செம பிளேடு போடுவேன்:):):)

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பரத் அவங்க யாரும் நெஞ்சயோ மனசயோ புரட்டிப் போடுற ஆளுங்க கிடையாது, ஆனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் இவங்க பேர் நியாபகம் இல்லைன்னாலும் இவங்களோட பேமஸ் படைப்புகள் கண்டிப்பா நியாபகம் இருக்கும். நான் உங்களுக்கு அவங்களோட சிலப் படைப்புகளை நியாபகப் படுத்தறேன் இருங்க.

Madeleine Wickham/Sophie Kinsella (Shopaholic series, இப்போ படமாவிம் எடுக்கறாங்க) , nick hornby(about a boy, படமா வந்திருக்கே)மற்றும் marian keyes(watermelon, படமா வந்திருக்கு). இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger(the devil wears prada, படமாவும் வந்திருக்கே), candace bushnell(sex and the city), jennifer weiner(good in bed),Cecily Von Ziegesar(gossip girls, இப்போ டிவி சீரியலாவும் வருது),helen fielding(Bridget Jones's diary, ரெண்டு பாகமும் படமா வந்திருக்கே)

coolzkarthi said...

உள்ளேன் அக்கா....

coolzkarthi said...

அப்பப்பா எத்தன புக்சு, எத்தன புக்சு,இந்த சின்ன வயசுலையே இவ்வளவு ஆர்வமா?

coolzkarthi said...

/*Labels: சீனான பிளேடு, ட்ரூலி பாரின், புத்தகங்கள்*/
/*sk said...
உஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ் அப்பாடா

பொய் பதிவையும் படிக்கிறேன் :)))) */
ஹி ஹி ஹி ....

Bharath said...

//Madeleine Wickham/Sophie Kinsella (Shopaholic series, இப்போ படமாவிம் எடுக்கறாங்க) , nick hornby(about a boy, படமா வந்திருக்கே)மற்றும் marian keyes(watermelon, படமா வந்திருக்கு). இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger(the devil wears prada, படமாவும் வந்திருக்கே), candace bushnell(sex and the city), jennifer weiner(good in bed),Cecily Von Ziegesar(gossip girls, இப்போ டிவி சீரியலாவும் வருது),helen fielding(Bridget Jones's diary, ரெண்டு பாகமும் படமா வந்திருக்கே)
//

ஆஹா இவிங்கதானா அவிங்க.. முக்காவாசி படம் பாத்துருக்கேன்.. the devil wears prada சூப்பர் படமுங்க.. அப்பப்ப இந்த மாதிரி informative வா விஷயம் போட்டு எங்கள போல ஆளுகள கரையேத்தி விடுங்க..

rapp said...

வாங்க கார்த்தி வாங்க:):):) படத்துல டூப்படிச்சு ஒப்பேத்தலாம், புக்குல டூப்படிச்சா அழகா மாட்டிப்போம். ஆனா நான் என்ன புரட்சி புக்ஸா இதுல போட்டிருக்கேன். எனக்கே ஜாலி புக்ஸ்தான் புடிக்கும்:):):) இதெல்லாம் படிக்கிறதை விட வேற என்ன ஜாலியான பொழுதுபோக்கு இருக்க முடியும்:):):)

rapp said...

நான்தான் சொன்னேனேங்க பரத். இதெல்லாம் ஜனரஞ்சக புக்ஸ். பலப்பேர் ஆத்தர் கவனிக்க மாட்டாங்க. அவ்ளோதான்:):):)

SK said...

/// ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எஸ்கே நீங்க எனக்கு மிகப்பெரிய போட்டியா உருவாகிட்டு வரீங்க:):):) எல்லா எடத்திலயும் மீ த பர்ஸ்ட்ல இருந்து மீ த அம்பது, நூறுன்னு தட்டிக்கிட்டே போய்க்கிட்டிருக்கீங்க:):):) நான் பார்முக்கு வந்தா சும்மா அதகளம் ஆகிடுமாச்சே:):):) (ஹி ஹி ரொம்ப நன்றி, ரம்யா கிட்ட என் பதிவை அறிமுகப் படுத்தினத்துக்கு:):):)) ///

இப்போ சொல்லுங்க நீங்க வெட்டியா நான் வெட்டியா

அந்த பதிவு ஒரு சாம்பிள் தான் அது மாதிரி நிறைய பதிவுலே உங்களை இழுத்து இருக்கேன் :))))

SK said...

யாரோ அங்கே இருந்து இவன் இவளோ பதில் போட்டு இருக்கானே, ஒரு பதில்ல கூட புத்தகத்தை பத்தி சொல்லலையேன்னு கேக்கறது :((((

SK said...

இட்ஸ் ஆல் இன் த கேம் யா..

SK said...

ஒன்லி 4 மோர் :)))

SK said...

நவ் த்ரீ மோர்

SK said...

அடங் கொய்யா இப்போ 2 மோர் ஆகி போச்சு

SK said...

150 roundaaaaaaa

SK said...

நோ காக்க வடை ஸ்டோரி திஸ் டைம் யா

என்ஜாய் கம் பாக் ஆப்டர் பிப்டி மோர் கமெண்ட்ஸ் யா

rapp said...

ஹா ஹா ஹா, ரொம்ப நன்றிங்க எஸ்கே:):):)

SK said...

அம்மணி ஒக்க ஹெல்ப் கவாலி

ஈமெயில் செக் பண்றீங்களா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாக்கு தவறாம நான் இன்னிக்கு வந்து மீதிபடிக்கலாம்ன்னா வந்த பின்னூட்டம் படிக்கபோயிட்டேன்.. சரி பாதிபதிவை நாளைக்குபடிக்கிறேன்.. :)

SK said...

என் கும்மி பாதிலயே நின்னுடிச்சு இங்கே.. ??

லிங்காபுரம் சிவா said...

//குமரிக்கோட்டம் படிச்சிட்டு என்னடாது அண்ணா அவர்கள் இப்டி ஒரு மேட்டர் கதை எழுதிருக்காரேன்னு நெனச்சேன்.
//
Hello rapp.. அந்த கத இருந்தா...டெய்லி போஷ்ட் ஒன் சப்டெர்... he he :))

அக்னி பார்வை said...

///(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).

////

நெனச்சேன் கண்டிப்ப நிங்க ஒரு பைத்தியம தான் இருபிங்கனு..

ஹா ஹா ஹா

ஒவொரு புத்தகத்தை பற்றியும் தனி பதிவை எதிர்பார்கிறோம்

அரவிந்த் said...

\\அப்பால எட்டாங்கிளாசு டீனேஜ் வயசு,கேக்கனுமா, பெண்களின் சரோஜாதேவியாகிய mills & boon, harlequinல ஆரம்பிச்சு எல்லாத்தையும் படிப்போம்\\

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். Mills n Boon எப்படி சரோஜா தேவிக்கு இணையாகும்??

அக்கா, அஞ்சலட்டை இன்னும் வரல.. (வடிவேல் style)

158...

Anonymous said...

இத்தனையும் படிச்ச நீங்க அப்பப்ப பாடபுக்கையும் படிச்சு தேறிட்டங்கன்னு தெரியுமோது எப்படி இருக்கு தெரியுமா.

நசரேயன் said...

நான் 160 வது

அரவிந்த் said...

This time I (really) removed the word verification.. Since i was not a frequent blogger, i thought 'Word Verification' is something else.. Sorry for the inconvenience..

Today (also)i understand still i'm a tube light..

வெண்பூ said...

முதல்ல லேட்டா வந்ததுக்கு ஒரு ஸாரி சொல்லிக்கிறேன் சம்மந்தி.. இந்த வாரம் முழுசுமே வலைப்பக்கம் வர முடியல.. ரெண்டு நாளாத்தான் ரீடர்ல பழைய பேக்லாக் எல்லாம் படிச்சி கிளியர் பண்ணிகிட்டு இருக்கேன். உங்களோடது சீரியஸான பதிவுன்றதால முழுசா படிச்சிட்டு பின்னூட்டம் போடலாம்னா பதிவோட சைஸ் படிக்க விடாம பண்ணிடுச்சி.. இப்பதான் படிச்சி முடிச்சேன்..

நீங்களும் இப்ப நர்சிம் மாதிரி ஆகிட்டீங்க.. ஒவ்வொரு பதிவுலயும் உங்களோட ஒவ்வொரு முகம் வெளிய வருது. ஆச்சர்யமா இருக்கு இவ்ளோ புக்ஸ் ஒருத்தரால படிக்க முடியுமான்னு.. பாராட்டுக்கள்.

ஆங்கிலம், தமிழ், அரசியல், இலக்கியம், அனுபவம்னு கலந்து கட்டி படிக்கிறீங்க.. நீங்க படிச்சிருக்குற வெரைட்டி வெச்சி பாத்தா இன்னும் நல்லா நீங்க எழுதலாம். படிக்கிறதுல இருக்குற இன்ட்ரெஸ்ட் உங்களுக்கு எழுதறதல இல்லன்னு நெனக்கிறேன். சரியா? எனக்கென்னவோ இப்ப நீங்க எழுதுறது உங்க திறமைல 10%தான்னு நெனக்கிறேன். இன்னும் நெறய எழுதுங்க.

இந்த தொடரோட ஒவ்வொரு பதிவுலயும் நான் போடுற பின்னூட்டம்தான் இங்கயும்.. நான் சாதாரணமா நெனச்சிட்டு இருக்குற ஒவ்வொருத்தரும் இந்த ஒரு விசயத்துல (வாசிப்புல) என்னைவிட பல மடங்கு பெரிய ஆளுங்களா இருக்கீங்க, நிஜமாவே எனக்கு கொஞ்சம் இன்ஃப்ரீயாரிட்டி காம்ப்ளக்ஸ் வர்றத தவிர்க்க முடியல.. :(

rapp said...

//சரி பாதிபதிவை நாளைக்குபடிக்கிறேன்//

முத்து நீங்களும் தொடர்ந்து தப்பிச்சிக்கிட்டே வர்றீங்க, இதெல்லாம் நல்லால்ல:):):)

rapp said...

நன்றிங்க எஸ்கே:):):)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க அக்னிப்பார்வை:):):)

rapp said...

அரவிந்த், நீங்க harlequin நாவல்கள் படிச்சதில்லையா இருக்கும்:):):) ஏன் word verification விஷயத்தைப் போய் சீரியஸா பேசறீங்க:):):)

rapp said...

சின்ன அம்மணி, நீங்க அப்டி ஒரு தப்பான அபிப்பிராயத்துக்கு வருகிற மாதிரி பதிவில் நான்(வசதியா) எதுவுமே குறிப்பிடலயே:):):)

நன்றிங்க நசரேயன்:):):)

rapp said...

ஆஆஆஆஅவ் சம்மந்தி, நீங்க லேட்டா வந்தாலும் என்னயப் பத்தி இவ்ளோ உசத்தி சொல்லிட்டீங்களே, அதுவே ஜாலியா இருக்கு. நான் நடு நடுவுல செம சீன் வரலாற்றுக் கதைகளெல்லாம் கூட படிப்பேன், ஆனா எழுதினா நம்பக் கூட மாட்டாங்க. நான் ஜல்லியடிக்கிரேன்னு சொல்லுவாங்க. ஹி ஹி இப்டில்லாம் சொன்னாதானே யாரும் திட்ட மாட்டாங்க:):):) எனக்கு எழுதறத்துக்கு போரடிக்கும். ஆனா மணிகணக்கா பேசுவேன், எதிர்ல இருக்கவங்கக் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு. முத்து, அப்துல்லா அண்ணன்கிட்ட எல்லாம் கேளுங்க:):):) அதுக்காக பயங்கர விஷய ஞானம்லாம் கிடையாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு ரொம்பப் பிடிக்கும்ல, அப்படி எனக்கு படிக்கப் புடிக்கும் :):):)

அரவிந்த் said...

\\ஏன் word verification விஷயத்தைப் போய் சீரியஸா பேசறீங்க:):):)\\

ச்சும்ம்மா!!! நிறைய பேர் சொல்லியும் எனக்கு புரியாமல் போய் விட்டது. அதான்..

என்னுடைய தற்போதைய பதிவில் 'தமிழ்பறவை' முந்தி விட்டார். தங்கள் வருகையை வேண்டுகிறேன்.

அக்கா, அஞ்சலட்டை இன்னும் வரல.. (வடிவேல் style)..

ஐ.. 158, 168... ரெண்டும் நாந்தான்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அய்யோய்யோ புதுபதிவு சினிமாப்பதிவுன்னு நினைச்சு மெயிலிலிருந்து இந்த லைப்ரரி பதிவுக்குள் நுழைஞ்சுட்டனா .. ஸாரி ராப்.. இன்னமும் இது படிக்கலை.. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நீள.......மான வாசிப்பனுபவம்.

ம்., ஒன்னும் சொல்றதிக்கில்லை
நீங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய் படிப்பாளிக்காவ்.